Sunday, November 20, 2011

government bus la ticket எடுப்பவன் கேனையன்...... பேருந்து பயண கட்டணம் ஒரு கிலோமீட்டர் க்கு எட்டு பைசா(0.08 Paise) மட்டுமே.......

என்ன பாஸ் நம்ப முடியலையா ??? என்னக்கும் first அப்படி தான் இருந்துச்சு......
பஸ்சில் பயண கட்டணம் எத்தின உடன்.... பஸ் இல் இருபவர்கள் புலம்பியதை பார்த்த பிறக்கு..... என்னக்கு தோன்றியது... வழக்கமாக சினிமா வில் மட்டுமே பார்த்து பழகிய காட்சிகள்... நேரில் பார்த்த உடன் மணம் கேட்க வில்லை......

நாமே தான் ICWAI படித்த, படித்து கொண்டு இருக்கும், படிக்கும் மாணவன் ஆச்சே.... இந்த பேருந்து கட்டணத்தை நாம் re-calculate செய்து பார்த்தல் என்ன என்று தோன்றியது.... அதில் உருவானதுதான் இந்த பதிவு முதலில் ICWAI என்றால் The Institute of Cost and Works Accountants of India.... அதாக பட்டது என்னன்னா ..... ஒரு பொருளுக்கு விலை நிரண்யம் செய்தல் பற்றி படிப்பது தான் அது.....


ஒரு பொருளுக்கு விலை நிரண்யம் செய்வதற்கு முன் சில அடிபடைகளை தெரிந்து வைத்து கொள்ளுவது நல்லது.

Selling price = Fixed price + variable cost + profit

Fixed cost: (நிரந்தரமான செலவு)
ஒரு பொருள் உற்பத்தி செய்தாலும், 1000 பொருள் உற்பத்தி செய்தாலும், இந்த expenses... குடாது குறையாது..... for an example.... workers salary, Depreciation (தேய்மானம் ) room rent, security salary, traveling cost etc

Variable cost ( மாறும் தன்மை உடைய செலவு)

ஒரு பொருள் உற்பத்தி செய்ய ஏற்படும் செலவு.... இது நாம் எவ்ளோ உற்பத்தி செய்கிறோமோ அதற்க்கு ஏற்றால் போல் இதன் செலவு உயரும்...... அதாவுது அந்த பொருள் உற்பத்தி செய்ய தேவை படும்.. man, meterial, mechin இவ்வை அனைத்தும் அடங்கும்.....

சரி நாம் ஒரு பேருந்து கட்டணம் எப்படி நிரனையம் செய்ய படுகிறது என்று பார்போம்.... அதாவது ஒரு பேருந்தின் ஆயுட் காலம், அதன் விலை, அதன் தெயுமானம்(depreciation charges for an year) அது எவளோ தூரம் செல்கிறது... எரிபொருள் செலவு... ஆகியவறை கொண்டு அதில் பயணம் செய்யும் மக்களிடம் அந்த கட்டணம் வசூலிக்க படுகிறது......
இந்த calculation சில assumption அடிபடையுள் கணிக்க பட்டது.....

Fixed Cost:
Assumption 1:
ஒரு பேருந்தின் விலை approz 1 crore.
life time: 20 yrs, so cost for an year 1 crore/20 yrs = 5 lakhs in a year charged as depreciation.

கவனிக்க: அப்படி 20 yrs, ஒவ்வொரு வருடம் எடுத்து வைத்தால்...இருபதாவது வருட முடியுள் ஒரு பேருந்தின் மொத்த பணமும் திரும்ப கிடைத்து விடும்.... அதாவது போட்ட முதலை அப்படிய எடுத்த விடலாம்..... அந்த இருபது வருடம் கழித்து, அந்த பேருந்தை பழைய இருப்புக்கு பெரிச்சபலம்.. வாங்கினால் கூட அது லாபம் தான்.....

Variable Cost:
Assumption 2 ;
ஒரு பேருந்து ஒரு முறைக்கு (one trip )20 km செல்கிறது என்று வைத்து கொள்ளலாம்.(for an example: saidepet to high court)...அப்படி ஒரு நாளைக்கு 20 முறை செல்லும் என்று வைத்து கொள்ளலாம்..... மொத்தமாக ஒரு நாளைக்கு இருபது கிலோமீட்டர், இருபது முறை செல்லும் என்றால் மொத்தமாக 400 கிலோமீட்டர் செல்லும்....

ஒரு லிட்டர் பெட்ரோல் ஐந்து கிலோமீட்டர் கூடுக்கும் என்று வைத்து கொள்ளுவோம்..... மொத்தமாக ஒரு நாளைக்கு 400 kms / 5 = 80 liters.
ஒரு வருடதிற்கு 80 liters * 365 days = 29200 liters ஒரு லிட்டர் பெட்ரோல் இன்றைய விலை இல் 70 ரூபாய்... அக மொத்தம் 29200 liters * 70 rs = Rs. 20,44,000 for a year.

Assumption 3: பேருந்தின் மொத்த 55 நபர்கள் பயணம் செய்யலாம்..... (total seats available) எப்பொழுதும் எல்லா இருகைகளும் நிரம்பி விடாது.... என்னவே அறுபது சதவிதம் மக்கள் பயணம் செய்பர்கள் என்று வைத்து கொள்ளலாம்... 55 * (60/100) = 33 passengers in a trip மொத்தமாக ஒரு நாளைக்கு 33 passengers in a trip * 20 trips = 660 passengers
அக மொத்தம்... ஒரு பேருந்தில் ஒரு நாளைக்கு 660 மக்கள் மொத்தமாக 400 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்கிறார்கள்.... அதாவது மொத்தம் 400 kms * 390 passengers = 1,56,000 passengers km. ஒரு வருஷம் திற்கு 365 days * 1,56,000 passengers km = 5,69,40,000 kms

கவனிக்க : Peek hoursல பேருந்தின் foot board இல் பயணம் செய்யும் நமது நண்பர்களை நான் இதில் கணக்கில் எடுத்து கொள்ள வில்லை........குத்து மதிப்பாக அனைத்து பேருந்துகளும் இந்த சராசரி 33 நபர்களுடன் செல்லும் என்பதை சொல்ல முடியாது.... என்னவே தான் சராசரியாக 33 நபர்கள் அணைத்து பேருந்துகளுக்கும் பொதுவாக இருக்கும் என்று எடுத்து கொள்ளுகிறேன்....


Assumption 4:
ஒரு பேருந்திற்காக செலவு செய்யும் மொத்த தொகை ஒரு வருடதிற்கு... driver, conductor salary, maintaining cost, dipo rent, mechanic, formen, manager salary இது எல்லாம் சென்னை இல் இருக்கும் மொத்த பேருந்திற்காக செலவு செய்யும் செலவுகள்...... நாம் ஒரு பேருந்திற்கு ஒரு குத்து மதிப்பாக 20 லட்சம் என்று வைத்து கொள்ளலாம்......

Formula :

Fixed cost + veriable cost
----------------------------------
Passengers Kms


Fixed cost = Depreciation charges(assumption 1) + Maintaing cost (assumption 4)
Variable cost = Petrol Expenses (Assumption 2)
Petrol Cost (Assumption 3)
(5,00,000 + 20,00,000 ) + 20,44,000
--------------------------------------------------------------------- = 0.08 Paise
5,69,40,000

அக சரசரியாக ஒரு கிலோமீட்டர் க்கு எட்டு பைசா மட்டுமே...... அவர்கள் நூறு சதவித லாபத்தில் இயங்கினால் குட ஒரு கிலோமீட்டர் க்கு 18 பைசா மட்டுமே..... minimum charges for 10 kms is Rs. 1. 80 only.... அனால் நமது அரசாங்கம் minimum ticket fare என்று Rs. 8 வரை வசுளிகிரர்கள்..... இது கிட்ட திட்ட 10 மடங்கு லாபம்.... இப்பவும் அவர்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறேன் என்றால் அவர்கள் முகத்திலே குத்தலாம்.. ஒன்றும் தப்ப இல்லை.....

இந்த கணக்கை நன்றாக தெரிந்தால் தான் லல்லு பிரசாத் யாதவ்.. ஒரு முறை குட ரயில் பயண கட்டணம் குட்டவில்லை... இந்த பொது துறை அமைப்புகளுக்கு சரியாக நிருவாக தலைமை இல்லாதது தான் காரணம் என்று தெரிந்து அவர் கையுள் நிர்வாகம் சென்ற உடன்.... நஷ்டடில் சென்ற railway budget லாபத்திற்கு மாறியது......

இன்றும் வரை BSNL நஷ்டடில் தான் இயங்குகிறது...... அதன் call charges minimum 60 paise per minute.... ஆனால் தனியார் நிறுவனகள்... minimum call charges 0.005 paise per second என்று குடுகிறார்கள்... ஆனால் அவர்கள் லாபடடில் மட்டுமே செல்லுகிறார்கள்... இப்பொழுது சொல்லுங்கள் மக்களே..... இந்த பொது துறை நிறுவனங்களுக்கு நிருவாக திறமை இல்லாத காரணத்தால் பொது மக்கள் நாம் அவஸ்தி படலாமா?????

இவர்களின் பழைய பயண கட்டணம்.... கொண்டு வந்து குறைந்தது 5 ஆண்டுகள் இருக்கும்... அப்பொழுது பெட்ரோல் வில்லை மிகவும் குறையு... அப்பொழுதே அவர்கள் 5 இல் இருந்து 8 மடங்கு லாபத்தில் தான் இயங்கி இருக்கிறார்கள்.... அப்படியும் அவர்கள் நஷ்ட கணக்கு காட்டினால் அவர்களுக்கு சரியான நிறுவாக திறமை இல்லை என்று தான் நாம் ஏற்று கொள்ள வேண்டும்......

அம்மா க்கு சால்ர அடிபவரகள் கொஞ்சம் இங்கே கவனிக்க..... பெட்ரோல் விலை 2009 இல் ஒரு barrel 100 dollars என்று இருந்த பொது தமிழகத்தில் 45 ரூபாய்... இப்பொழுது 70 ரூபாய்.... இது இவர்களது திறமை இல்லாமையே காட்டுகிறது..... இதற்கு எங்கள் வரி பணத்தில் இருந்து கொண்டு எங்களுக்கே அப்பு அடிகிரிங்கள.... இது உங்கலகே நியாம் தானா???
அம்மா நீங்கள் எங்களுக்கு இலவச ஆடு, மாட்டு, குதிரை எல்லாம் குடுக்க வேண்டாம்.... அதற்க்கு பதில் எங்களுக்கு இலவச பயண சீட்டு குடுங்கள்..... எங்களிடம் அநியாமாக இப்படி பணத்தை வசூலித்து எங்களுக்கே அதை திருப்பி தரும் உங்கள் திட்டம் எங்களுக்கு வேண்டாம்....


இப்படி புலம்பி திற்பவன் வேறு யாரும் அல்ல... உங்களோடு உங்கள்ளக்க .... தினமும் நீங்கள் பார்க்கும் சாதாரண பொது ஜனம்.... நான் உங்களுள் ஒருவன்............

Thursday, November 10, 2011

சமுக பணியாளர்கள் என்னும் பொம்மைகள்.....

இந்த சமுக பணியாளர்கள் என்பவர்கள் ஆஇதிமுக வின் விளையாட்டு பொம்மைகள் என்று குறுவது சரியாக இருக்கும்.... என் என்றால் அம்மா ஆட்சிக்கு வந்த முன்று முறையும் இவர்களை வேலையை விட்டு நிக்குவதை ஒரு வேலையாகவ செய்து வருகிறார்.... திரும்பவும் கருணாநிதி வந்த உடன் வேளையில் சேர்த்து கொல்வது ஒரு வாடிக்கையாக வே மாறி விட்டது தமிழ் நாட்டில்......



நானும் தெரியாமல் தான் கேட்கிறேன்.... இவர்கள் மீது உங்களுக்கு அப்படி என்னதான் கடுப்பு..... 09.11.11 அன்று புதிய தலைமுறை தொலைகாட்சி செய்திகளில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியுள் வந்த ஆஇதிமுக வின் (முன்னால் MLA or MP) மலைச்சாமி பேசும் பொது... கொஞ்சம் குட சுரணையே இல்லாமல் கூறுகிறார்... இவர்கள் அனைவரும் திமுக கொண்டு வரப்பட்ட பணிடங்கள் அதனால் தான் நாங்கள் களைத்தோம் என்று......

ஐயா நான் தெரியாமல் தான் கேட்கிறான்... இவர்கள் திமுக பணிக்கு அமர்த்த பட்டவர்கள் என்ற காரணத்துக தான் பனி நிக்கம் செய்கிறன் என்றால்.. இதற்கு பெயர் என்ன...


அதாவது திமுக தமிழகத்தில் என்ன செய்தலும் அதை எதிர்க்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் செய்யல படுவது போல தானே இருக்கிறது.... நிங்கள் அப்படி செயல்பட்டால் எங்களுக்கு சந்தோசம் தான்... ஆனால் நீங்கள் அதை எப்பொழுது செய்து இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எதிர் கட்சியாக இருக்கும் பொழுது இதை செய்து இருந்திர்கள் என்றால் நாங்கள் சந்தோஷ பட்டு இருப்போம்.... ஆனால் அப்பொழுது கோட நாட்டில் ஓயாக இருந்து விட்டு இப்பொழுது அவர்கள் செய்த எதோ ஒன்று இரண்டு நல்ல காரியத்தில் முடக்குவது ஒன்றும் நன்றாகக வில்லை....

இது எல்லாம் தேவை இல்லாத செலவு... கஜானா தான் காலி ஆகிறது என்று நிங்கள் கூறினால்.... நான் கேட்கிறேன்.... தமிழகத்தில் இது மட்டும் தான் தேவை இல்லாத பனி இடமா.... MP or MLA அரசிலவாதி அவர்களுக்கு செலவு செய்யும் பணம், அவர்களுக்கு குடுக்கும் சலுகைகள் இவற்றை எல்லாமே என்ன கஜானாவை நிறைவு செய்யும் வலிகளா????


அதன் பிறக்கு அண்ணா நூலகம் உங்களை என்ன செய்தது???? அந்த இடத்தில ஒரு மருத்துவ மனை கட்ட வேண்டும் என்று உங்களிடம் யார் கேட்டார்கள் ??? தமிழகத்தில் மட்டும் அல்ல.... ஆசியாவிலைய மிக பெரிய நூலகம் என்று பெயர் பெற்ற நூலகத்தை இடித்து விட்டு தான் அங்கு மருத்துவ மனை கட்ட வேண்டுமா??? என்ன ஏற்கனவே சென்னையுள் traffic ரொம்ப கம்மியாக இருக்கு என்று நினைகிர்களா??? எல்லாத்தையும் ஓர இடத்தில வைபதர்க்கு.. தாம்பரத்தில் ஒன்று திருவான்மியூர் இல் ஒன்று வியாசர்பாடி, அவடி இல் ஒன்று என்று கட்டினால் அனைவரும் பயன் பெறுவார்கள் அல்லவா??? அணைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள்..... அண்ணா பல்கலைகலக்திற்கு பக்கத்தில் தான் நூலகம் தேவை..... அதை விட்டு விட்டு.... அதை இடித்து குழந்தைகள் மருத்துவமனை கட்ட போகிறேன் என்கிர்களே நீங்கள் என்ன ___________?????


அம்மா முதலில் இவற்றை செய்வதை விட்டு வித்து.... பெங்களூர் நீதி மன்றத்தில் ஆஜராகிற வழியை பாருங்கள்.... அங்கு செல்லாமல் இருபதற்கு நீங்கள் சொன்னே காரணக்கள்.... சிறு குழந்தைகள் பள்ளி குடம் செல்லாமல் இருபதற்கு சொல்லமும் கரங்களை விட ரொம்ப தமாசாக இருக்கிறது.. அப்படி என்ன என்ன காரணங்கள் சொன்னார் என்று கேட்கிர்களா???


  1. தமிழகத்தில் தேர்தல் வருகின்றது
  2. முதல்வராக இருகின்றேன்
  3. நீதி மன்றத்தில் புதிதாக வெள்ளை அடிக்க பட்டு உள்ளத்தால், ஒவ்வாமை ஏற்பதும்.
  4. நான் வருவதால் அங்கு 144 தடை உத்திரவு பிறப்பிக்க பட்டு உள்ளத்தால் அங்கு உள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளகிரர்கள்
  5. அம்மாக்கு உடம்பு சரி இல்லை
  6. அத்து குட்டிய கான்னும்
என்று சிறு குழந்தைகள் கூட தோற்று விடும் அம்மா கூறும் காரணகளால்..... அம்மா அவர்களே நிங்கள் முதலில் உங்கள் முதுகில் இருக்கும் அழுகை சரி செய்யுங்கள்..... அதன் பிறர்க்கு நூலகத்தை மாற்றுங்கள், புதிய சட்ட மன்றத்தை மாற்றுங்கள்... என்ன மெரினாவை குட மாற்றி விடுங்கள்.... ஆனால் எங்களுது வரி பணத்தில் உங்களுது ஈகோ யுத்தம் நடத்தாதிங்க ........இப்படி புலம்பும்பி கொண்டு இருப்பவன் வேறு யாரும் அல்ல... உங்களோடு ஒருவனாக இருக்கும் உங்களுள் ஒருவன் தான் ..........

Sunday, August 21, 2011

அம்மா வைத்த செக்மேட்......

நம்ம ஊர்ல ஒன்னுத்துக்கும் பயன்படாம....நடு ரோட்ல அனாதைய நிற்கும் ஒத்தை கட்டிடம்.... அது தாங்க நம்ம கருணாநிதி கஷ்ட பட்டு.... நமது வரி பணத்துல கட்டின புதிய பழைய சட்டமன்றத்துக்கு அம்மா வைத்து இருக்கும் புதிய செக்மேட்..... இந்த செய்தியை படித்த உடன் நான் சொன்னா வார்த்தை இது தான்.... திமுக விற்கு சரியான செக்மேட்....
.
அதாவது பயன்படுத்தாமல் இருக்கும் அந்த கட்டிடம்.... அந்த கட்டிடம் அப்படிய இருந்து விட்டால், ஒரு வேலை அடுத்த முறை திமுக வெற்றி பெற்று வந்தால், அந்த கட்டிடம் திரும்பவமும் சட்டமன்றம் அக்க படும்...... எனவ தான் என்ன செய்தால் இவர்களால் அந்த கட்டிடத்தை திருபவும் சட்டமன்றம் அக கூடாடு என்று 13 பேர் கொண்ட குழு கொண்டு அம்மா முதல் அமைச்சர் அன நாள் முதல் இருந்து யோசித்து எதுக்க பட்ட முடியவு தான் இது.........

இப்பொழுது நவீன வசதிகள் உடன் குடின மருத்வமனையாக மற்றபட உள்ளது பற்றி தான் நானும் சொல்லுகிறேன்... இப்பொழுது இதற்க்கு எதிராக திமுக வால் எந்த போராட்டமும் நடத்த முடியாது.... அப்படி நடத்தினால் உடனே மக்களுக்கு பயன் தர இருக்கும் ஒரு விசயத்தை எதிர்கிறார்கள் என்று இவர்கள் மீது குறை சொல்ல முடியும்.... சரி இப்பொழுது எந்த
போராட்டமும் நடத்த வேண்டாம் என்று இவர்கள் சும்மா இருந்தால்.... அந்த இடத்தில சட்டமன்றம் இருக்கும் வரை மட்டுமே கருணாந்தி பெயர் அந்த கட்டிடம் தில் இருக்கும்.... அது மருத்துவமனையாக மாறி விட்டால்... அங்கு கருணாநிதி பெயர் எங்கும் இருக்காது... மருத்வமனையாக மாற்றிய இதய கனி, கழக தெய்வம், என்று ஒரு பக்கத்திற்கு புகழ்ந்து அவருக்கு ஒரு கல்வெட்டு அல்ல... ஒரு அறை முழுவதும் எழுதி வைத்தாலும்... ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை....

திமுக என்ன செய்தலும் அவர்களுக்கு இந்த விசயத்தில் கேட்டபெயர் மட்டுமே மிஞ்சும் இந்த சட்டமன்றம் கட்டின பெயர் கருணாநிதி க்கு போகாது.... இதை மருத்வமனையாக மாற்றிய அம்மா க்கு தான்... அந்த பெயர்...

அனால் நான் ஒரு விசயம் கேட்க அசை படு கிறேன்.... கடந்த முறை உங்களது ஆட்சி காலத்தில் தான் தாங்கள் தற்பொழுது இருக்கும் சட்டமன்றம் மிகவும் பழையது ஆகி விட்டது என்னவே சகல வசதிகள் உடன் கூடிய ஒரு சட்டமன்றம் வேண்டும் என்று ராணி மேரி கல்லூரி ஐ இடித்து விட்டு அந்த இடத்தில ஒரு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றிர்கள்..... அந்த விசயத்தை என்னோ மறந்து விட்டிர்கள் போல இருக்கிறது.... சரி விடுங்கள் உங்களுகு தான் selective amnesia வச்சா... பிறகு எப்படி நியாபகம் இருக்கும்.....


இன்னொரு விசயத்தையும் நான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறன்.... அந்த கட்டிடம் சடமன்றதுக்கு என்று பார்த்து பார்த்து கடிய கட்டிடம்... இப்பொழுது அந்த கட்டிடம் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்றால் வெளியுள்ள சுவரை மற்றும் வைத்து கொண்து மிதியை அனைத்தும் இடித்து விட்டு தான் அதை மருத்வமனையாக மாற்ற வேண்டும்....... அம்மா அவர்களே உங்களுது ஈகோ ஒரு பக்கம் இருக்கட்டும்.... நீங்கள் திரும்பவும் ஒரு புதிய சட்டமன்றம் கட்ட மாட்டிர்கள் என்பது என்ன நிச்சயம்..... அப்பொழுது இதை விட பொருட்டு செலவு செய்து கட்ட வேண்டும்... அதற்கு இதைய பயன் படுத்தி கொள்ளாமே???????



நீங்கள் தில்லியுள் உள்ளது போல் AIIMS போல் கட்ட வேண்டாம்.... சென்னையுள் ஒரு அதி நவீன மருத்துவமனை கட்டுவதற்க்கு பதில் அந்த பணத்தை தமிழகம் முழவதும் எராளமான அடிப்படை தேவை குட இல்லாமல் இருக்கும் மருத்துவமனை அதிகம்.... அது போன்ற மருத்துவமனைக்கு பிரித்து குடுத்தால் தமிழக மக்கள் மிகவும் சந்தோஷ படுவார்கள்... உண்மைலிய பயன் பெறுவார்கள்... உங்களை நன்றி சொல்லுவார்கள்......
எங்களது வரி பணம் மீது இவர்கள் ஈகோ யுத்தம் நடத்துவதை பார்த்து கொண்து இருக்க முடியாமல் உங்களிதம் புலம்பும் உங்களுள் ஒருவன்

Thursday, July 14, 2011

அம்மா வாழ்க..... என்று பாராட்டும் ராமதாஸ்....

பா.ம.கா. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (இவர் உண்மையாகவே மருத்துவம் படித்தவர், மற்றவர்களை போல் காசு குடுத்து வாங்கியது அல்ல, ஆனால் இவர் ஒரு அரசியல் விபசாரி, நமக்கு அதுவா முக்கியம், matter க்கு வருவோம்) அம்மா வை இப்பொழுது பாராட்டு வதற்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. அவரது பிரதான கொள்கை, கோரிக்கை, அரசியல் கோட்பாட்டு என்று எது பார்தாலும் அதில் இருப்பது புகையிலை ஒழிப்போம், குடியை தடை செய்வவோம் என்பது தான்.....

அவருக்கு இப்பொழுது அம்மாவை பாராட்டு வதற்கும், கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தால் கட்சி மாறுவதற்கும் கிடைத்த சந்தர்பம் இது என்றால் அது மிகை அல்ல.....

ஏன் என்றால் இப்பொழுது அம்மா அறிவித்து இருக்கும் வரி சலுகைகள் அப்படி..... இது வரை வரி இல்லாமல் இருந்த புகையிலை, குட்கா, மட்கா, போதை பொருள், சாராயம், என்று எல்லா வரிற்கும் வரிகள் போட்டு தள்ளி இருக்கிறார், இவொலோ நாள் ஒரு gold filter Rs.4 என்று இருந்தது இபொழுது Rs.5 ஒரு kings Rs. 5 என்று இருந்தது இப்பொழுது Rs.6, இது வாது பரவால்லை ஒரு quarter ku 10 ரூபாய் வரி... இந்த வரி உயர்க்கும் ராமதாஸ், அம்மாவை பாராட்டு வதற்கும் என்ன இருக்கிறது என்று கேட்கிர்களா??? ......

இங்க தான் சார் மேட்டர் இருக்கு.... ஒரு சதாரண குடியானவன், ஒரு நாளைக்கு quarter 75, water packet, glass, முறுக்கு, உருகாய் என்று 100 ரூபாய்க்குள் முடித்து கொண்டு இருந்த ஒருவன், இந்த திடீர் வரி உயர்வால் ஒரு quatter ku Rs. 10 அதிகமாக குடுக்க வேண்டி இருக்கும், இந்த விலை உயர்வு இதோடு முடிந்து விடுவது அன்று..... சிகரட் க்கு 1 ரூபாய் sidedish அப்படி இப்படி என்று ஒரு 25 ரூபாய் என்று ஒரு நாளைக்கு அதிகமாக 30 ரூபாய் வரை அதிகமாக சிலவு செய்ய வேண்டும் என்று ஒரு 25 % மக்கள் இந்த கேட்ட பழக்க வழக்கத்தை விட வாய்ப்பு இருக்கிறது..... ஏன் நானே தம் அடிப்பதை நிறுத்தி விடலாம் என்று முடிவுக்கு வந்து இருக்கிறேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.....

இந்த வரி உயர்வு போதை பொருட்கள் ஒடு முடிந்து விட வில்லை, ஏலேக்ட்ரோனிக் சமாசாரம், மொபைல், என்று எல்லாத்துக்கும் பத்தில் இருந்து இருபத்து சதவிதம் வரை உயருந்து உள்ளது....

இது போன்ற விசயங்களுக்கு வரி உயர்வு போதிங்க.... வாழ்த்துக்கள்.... இன்னும் கொஞ்சம் கூட போட்டு கொள்ளுங்கள்.... சாராயத்துக்கு நூறு ரூவா கூட வரியா போட்டு கொங்க... யாரு வேணாமின்னு சொன்ன.... அப்படியே இந்த பெட்ரோல் மேல இருக்கிற வரிய மட்டும் குறைச்ச போதும்....

இதனால் அரசங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று திருபவமும் பழைய பல்லவி பாடினால் என்னக்கு கோவம் வந்து விடும், சொல்லிட்டேன்...... சும்மா ஒரு பேசுக்கு கேட்கிறேன்.... 2009 la ஒரு berral பெட்ரோல் $ 100 க்கு போச்சு அப்போ இந்தியாலே 50 ரூவா நு பெட்ரோல் வித்துச்சு... இப்போ பெட்ரோல் ஒரு barrel க்கு $ 90 க்கு தான் விற்பனை ஆகிறது..... நீ என்ன பண்ணனும் அங்க விலை குடினால் இங்க விலை ஏறுதுல அத மாதிரி அங்க விலை குறஞ்சா இங்கயும் விலையே குறைகுன்மா இல்லையா....... அனா இங்க இருக்கிற அரசாங்கம் நல்லா வரிய மட்டும் குடிகிட்ட போவிங்க.... அத மறைக்க இலவசம்னு சொல்லி அத மக்களுக்கே திரும்பி குடுபிங்க.... சரி அதுவது மக்களக்கு கரெக்ட் வருதானு பார்த்த அத இடையல் இருக்கும் அரசியல்வாதிகள் முக்கா வாசியை எடுத்து விட்டு மிச்சத்தை தான் மக்களக்கு வரும், அதவும் அடியுள் இருக்கும் கட்சி தொண்டன் எடுத்து கொல்லுவான், கடைசி பாமர மக்களுக்கு ஊஊஉ......
.


இத நம்ம சொன்ன நம்மள பைதியகாரன்னு சொல்லுவாங்க.... பொங்கட்ட போங்க..... நான் வேறு யாரும் அல்ல... உங்களோடு உங்களாக இருக்கும் உங்களுள் ஒருவன் தான்..... வரி சுமை

Sunday, June 12, 2011

பாபா ராம்தேவ் vs ஷோகோ அசஹாரா.. ஓர் ஆன்மிக பயங்கரவாதம்...

பாபா ராம்தேவ் vs ஷோகோ அசஹாரா.. ஓர் ஆன்மிக பயங்கரவாதம்...
பாபா ராம்தேவ் பற்றி இப்பொழுது பல பத்திரிகைகள் அவரை பற்றி எழுதி வருதை பார்த்து இருபிங்க.... ஆனால் அவரது அணுகு முறைகள் Shoko Asahara
வை என்னக்கு நினைவு படுத்துகிறது....


யார் இந்த shoko Asahara? ஜப்பான் இல் வாழந்த ஓர் மிக பெரிய சாமியார்.... இவர் நமது ஊர்களில் நித்தியானந்தா, சாய் பாபா, பிரமானந்தா போன்ற பல போலி சாமியார்களை தூக்கி சாப்பிட்டவர்..... இவர்களுக்கு எல்லாம் ஒரு வகையுள் தலைவர் போன்றவர்....

இவர் ஜப்பானில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்... பிறவிலய கண் பார்வை குறை பாடு உள்ளவர்... அதனால் அங்கு உள்ள முட நம்பிக்கைகள் படி அவர் அக்கு புஞ்சர் கற்று கொண்டு ஒரு மருத்த்வர்க்க இருந்தவர், பின்பு வாழ்கையில் பணம் சேர்க்க வேண்டும், புகழ் சேர்க்க வேண்டும் என்பதர்கா அவர் கண்டு அறிந்த வழி தான் ஆன்மிகம்... ஜப்பானில் அந்த நாட்களில் மத உணர்வு மிகவும் கம்மி, எல்லாரும் நிறோசக்கிமா, நாகசாகி, ஆணு குண்டுக்கு பின்பு அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் வேலை வேலை வலை மட்டும் தான்.... எதாவது முக்கியமான பண்டிகைகள் பொது மட்டும் தனது மத உணர்வை வெளி காட்டி கொண்டு.. பின்பு தனது வேலை க்கு திரும்பி விடுவர்....
இந்த நேரத்தில் நமது வெள்ளை தக்காளி.. ( shoko Asahara) வெள்ளை தக்காளி க்கு தாடி மிசை வைத்தார் போல் இருக்கும் இவர். ஒரு மதத்தை உருவாகினால் என்ன என்று யோசித்து நேராக இந்தியா வருகிறார்.... அவர்க்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது, இங்கு தான் மதத்தின் பெயரால் என்ன சொன்னாலும் நம்பி விடும் முட நம்பிகையளர்கள் அதிகம் என்று, ஹிமியாலய சென்று அங்கு உள்ள ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து யோகா, மற்றும் சில தந்திரங்களை கற்று கொள்ளுகிறார்.... அப்படியே கொஞ்சம் புத்தம், சீக்கியம், என்ன சில மடத்தின் கோட்பாடுகளை எடுத்து கொண்டு.... திரும்பவும் ஜப்பான் போகிறார்... நீண்ட தாடி மற்றும் கடா முடியுடன்,

அங்கு ஒரு single bedroom flat ஒன்றை வாடகைக்கு எடுத்து கொண்டு...( அவர் முதல் மற்றும் கடைசியாக செய்த முதலிடும் இது தான் ) யோகா யோகா யோகா என்று எப்பொழுதும் இருந்து விடுகிறார்... இதை பக்கத்துக்கு விட்டில் இருபவர்கள், முதலில் எதோ கிருகனை பார்ப்பது போல் பார்த்தாலும், இவரின் தோற்றமும், செய்கையும் ஒரு மார்க்கமாக இருப்பதால் இவரை ஒரு சாமியாராக ஏற்று கொள்ளுகிறார்கள்.... அதன் பின் ஒரு சிறு சில சித்து வேலைகள், நமது ஊரில் சொல்ல போனால் திருநிறு வர வளைப்பது, வாயுள் இருந்து லிங்கம் எடுப்பது போல... இதனால் ஜப்பான் மக்கள் இவரை ஒரு கடவுளாகவே பார்க்க தொடங்கி விட்டனர்... அப்பொழுது இவர் தனது இயக்கத்தை ஒரு மதமாக பதிவு செய்து விடுகிறார்.... மதத்தின் பெயர் Aum Shinrikyo அப்படி என்றால் உண்மையான மதம் என்று அர்த்தம். இவரது சித்து விளையாட்டுகளில் மயங்கி ஜப்பானில் பாதிக்கு பாதி இவரது மதத்தில் இணைகிறார்கள்....


இந்த கால கட்டத்தில் அவருக்கு உலகின் பல முலைகளில் அவருக்கு ஆசிரமங்கள், சீடர்கள் என்று வாழ்கையை ரசித்து கொண்டு இருந்தவர்க்கு திடீர் என்று உலகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணம், அரசியலில் இறங்கு கிறார்... பிரதமர் பதிவுக்கு போட்டி இடுகிறார்.. அவரது மதத்தில் இருபவர்கள் மட்டும் அவருக்கு வாக்கு அளித்தால் போதும்.. எதிர் கட்சிகள் அனைத்தும் தேபோசிட் கூட கிடைக்காது.... இருந்தாலும் நமது ஊர் தேர்தல் போல பணத்தை வாரி இறைதார், அவரது சொந்த பணமாக இருந்தால் தானே அதை பற்றி கவலைப்பட.....

ஆனால் ஜப்பான் மக்கள் அரசியல் வேறு ஆன்மிகம் வேறு என்று நன்றாக தெரிந்து வைத்து இருந்தார்கள், எனவே இவருக்கு தேபோசிட் குட கிடைக்க வில்லை. இதனால் வெகுவாக கோபம் கொந்த நமது வெள்ளை தக்காளி.. செய்த லீலைகள் இருக்க எப்பப சொன்னால் நம்ப மாட்டிர்கள் அந்த அளவுக்கு செய்து இருக்கிறான்...

இந்தயாவில் இருந்து ஒரு பிரமாண்ட லிங்கம் ஒன்றை வாங்கி தனது ஆசிரமத்தில் நிறுவி கொண்டு... தனது பகதர்களுக்கு ஒரு எச்சரிக்கை விட்டார்.... அதாவது தான் தான் இந்த உலகத்தில் அவதரித்து இருக்கும் நவீன காலத்து நோவா ( அதாவது பழைய பைபிள் இல் சொல்லி இருக்கும் ஒரு கதை, உலகம் அழிய போகிறது என்று தெரிந்த ஒருவர் ஒரு மிக பெரிய கப்பல் கட்டி அதில் உலகத்தில் உள்ள ஷிவ ராசிகளை கைப்பற்றி அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுவார் அல்லவா)
யார் எல்லாம் தப்பிக்க வேண்டுமோ அவர்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள், என்னது பார்வை அல்லது என்னது பாதுகாப்பில் இருபவர்கள் மட்டுமே தன்னை காப்பற்றி கொள்ள முடியும்,

நமது ஊர் தாயத்து போல் அவர் சில விசயங்களை விற்றார்.... அது என்ன வென்றால் தனது தாடி மயிர்... ஒரு முடிய எடுத்து அத நான்கில் இருந்து ஐந்து துண்டாக வெட்டி அதை 500 $ என்று விற்றார்... ஓர வாரத்துல அப்படியே ஷர்ருகன் மாதிரி ஆகிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள், அது அனைத்தும் விற்றது போக தான் குளித்த தண்ணிரை ஒரு சின்ன சிப்பாயுள் அடைத்து அதனை $ 800 க்கு விற்றான்..... அது மட்டும் அல்ல தான் தான் கடவுள் என்னது உடம்பில் ஓடுவது ரத்தம் மே அல்ல அமிர்தம்.. அன்று வாய் குசாமல் வாய்க்கு வந்தது எல்லாம் உளற ஆரம்பித்தான் இந்த பித்தன், இதன் பிறக்கு நம்மளை போல் உள்ளவர்கள் சும்மா விடுவார்களா???? வா வந்து ஒரு ரத்த பரிசோதனை எடுத்து கொள்ளலாம், அதன் பிறக்கு நீ சாமிய இல்ல ஆசாமியா என்று தெரிந்து விடும் என்று சவால் விட... அவரும் ஒத்து கொண்டார்... எதாவது தகிடு தட்டம் பண்ணி விடலாம் என்று எண்ணினார், அய்யோ பாவம் அவரால் ஒன்னும் பண்ண முடிய வில்லை, கடைசியுள் மருத்துவர் அவருது உடம்பில் உள்ளது, அமிரதாமோ அல்ல சாக்கடையோ இல்லை.. அக்மார்க் முத்திரை குட்ட பட்ட o+ ve blood group தான் என்று கூறி விட்டார்...

இதன் பிறக்கு தான் இவர் தனது சொந்த படை ஒன்று நிறுவினர், தனக்கு எதிராக செயல் பட்டவர்களை திருத்து கட்டினர்... ஆயுதம் வாங்கி குவிக்க அரம்பிட்டார்.... திருபவும் நாட்டிக்கு அரசன் அக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து, நாட்டிக்கு ஒதுக்கு புறமாக ஒரு ஆணு உலை ஒன்றை நிறுவினர், அதற்கு formulas ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு முக்கியமா மந்திரி (இவற்றும் நமது சாமியாரின் சீடன் தான்) என்னோ அவருது ஆணு உலை க்கு வந்த scienthist பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருபர்கலே என்பதே சந்தேகமே.... அந்த திட்டமும் வினாகியது....
அதன் பிறக்கு நமது வெள்ளை தக்காளி உயிரியல் ஆயிதம் (biological weapon ) தயாரித்தல் என்ன என்று யோசித்து ஒரு உயிர் கொல்லி வைரஸ் தயாரிக்கிறார், அதனை நாட்டு மக்கள் மிது ஏவுகிறார், அந்தா பாவம் அந்த வைரஸ் அனைத்தும் எடுத்து செல்லும் வழிகளில் இறந்து விடுகின்றன.......
அதன் பிறக்கு சிரான் காஸ்( siran gas ) முலம் நாட்டு மக்கள் மிது ஏவுகிறார், அது ஒரு அளவுக்கு வெற்றியும் தருகிறது, ஆனால் ஜப்பான் நாட்டு மக்கள் அதை ஒரு தாக்குதலாக பார்க்க வில்லை, எதோ சுகாதார கேடு, அதனால் தான் இப்படி நடந்து விட்டது என்னே சுகாதார பணிகளை கவனிக்க துவங்கு கிறார்கள்...
பிறக்கு டோக்யோ சுரங்க பாதைகளில் இந்த சிரான் காஸ் முலம் தாகுதல் நடத்துகிறான்... இப்பொழுது தான் அரசாங்கம் முழித்து கொண்டு தீவிர விசாரணை நடத்தி நமது வெள்ளை தக்காளியை கைது செய்து தண்டனை குடுகிறார்கள்.


இது தான் Shoko Asahara வின் கதை, இவரை போல தான் இந்த பாபா ராம்தேவ், சிறு ஏழ்மை குடும்பதில் பிறந்து வாத நோயால் பாதிக்க பட்டு, பின்பு யோகா வால் குணம் அடைந்து ஒரு ஆசிரமம் துவங்கி, பல நாடுகளில் தனது ஆசிரமத்தை துவங்கி இருக்கிறார், கோடி கணக்கில் சொத்துகள் இருக்கிறது... இப்பொழுது அதிரதியாக அரசியல் பிரவசம், தனக்கு என்று ஒரு ஆயுதம் ஏந்திய படை அமைக்க போவதாக அறிக்கை என்று நாள் ஒரு வண்ணமாக பொழுது ஒரு அறிக்கையாக உலா வந்து கொண்டு இருக்கும் இவர் என்னக்கு Shoko அசஹாரா நியாபகம் படுத்துகிறார்.... மேலும் இவருக்கு BJP, RSS போன்ற மதசாயம் பூச பட்ட அரசியல் கட்சிகள் ஆதரவும் இவருக்கு பெருக்கி வருக்கிறது, என்பது குறிப்பிட தக்கது...

மக்களே நன்றாக சிந்தியுங்கள், யாருக்கு உங்களுடைய அதரவு, மக்களுக்கு நன்மை என்றால் அது யாராக இருந்தாலும் நமது ஆதரவு உண்டு, ஆனால் சில போலிகளும் இது போல் செயல்களை இறங்குவார்கள், இவர்களை நாம் தான் இனம் அறிந்து ஒதுக்க வேண்டும்...



யோசித்து முடிவு எடுங்கள்.... நான் உங்களுக்குள் ஒருவன் அக இருந்துகொண்டு உண்மைகளை உலகிருக்கு உரைக்கும் ஒரு சாதாரண வழிபோக்கன்........

இதை விடாத அலுவலக பணிகள் காரணமாக என்னால் முன்பு போல் இபொழுது பதிவுகள் எழுத முடிய வில்லை, இருந்தாலும் என்னது பதிவிற்கு இன்னும் வருகை தரும் அணைத்து நல்லா உள்ளங்களுக்கும் என்னது நன்றி......

Wednesday, May 25, 2011

மூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழுச்சி

மே 15 , ஞாயிற்றுக் கிழமை, ஸ்பெயின் நாட்டில் மக்கள் எழுச்சி இடம்பெற்றுள்ளது. பெரியதும், சிறியதுமான ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களில், பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். "எமக்குத் தேவை நிஜமான ஜனநாயகம்", "நாங்கள், அரசியல்வாதிகளினதும், வங்கியாளர்களினதும் வியாபாரப் பண்டங்கள் அல்ல." என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. தற்போது இந்த மக்கள் எழுச்சி நிரந்தர வடிவம் பெற்று வருகின்றது. எகிப்து, கெய்ரோ தஹீர் சதுக்கத்தில் நடனத்தைப் போல, ஸ்பானிய நகர சதுக்கங்களில் கூடாரங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.
துனிசியாவில், எகிப்தில் நடந்த அதே பாணியில், ஸ்பானிய மக்கள் போராட்டமும் ஒழுங்கமைக்கப் பட்டது. "Democracia Real Ya" என்ற அமைப்பு, முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை அணிதிரட்டியது. பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த அரச செலவினைக் குறைப்புகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். போராட்ட இயக்கம், அனைத்து பாராளுமன்ற அரசியல் கட்சிகளையும் நிராகரிக்கின்றது. "மக்கள் ஜனநாயகம்" மலர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. ஸ்பெயின் ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை சந்தித்த நாடென்பதால், ஏற்பாட்டாளர்கள் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்ட செலவுகளை சில மர்மமான நிறுவனங்கள் கொடுக்கின்றனவா? போலிஸ் அடக்குமுறையினால், பலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடருமா? கைது செய்யப்பட்ட நபர்களை, "இயக்கம்" கைவிட்டு விடுமா?

மாட்ரிட் நகரைத் தவிர, பிற இடங்களில் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றது. மாட்ரிட் நகரில், கலகத் தடுப்பு போலிஸ் ஆர்ப்பாட்டக் காரரை அகற்றுவதற்கு பெரு முயற்சி எடுத்தது. சிலர் கைது செய்யப்பட்டனர். மே 17 அன்று, கைதானவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக போலிஸ் தலைமையாக வாசலில் குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மே 17, வெள்ளிக்கிழமை, கல்வி தனியார் கைகளில் வணிக மயப்படுவதை எதிர்த்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகரங்களில் வருமானம் குறைந்தோருக்கு ஏற்ற வாடகை வீடு கிடைப்பது அரிதாகி வருகின்றது. வீட்டுப் பிரச்சினை குறித்தும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனம் செலுத்தினார்கள். வங்கிகளுக்கு முன்னால், சிறு சிறு குழுக்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதி நெருக்கடிக்கு காரணமான வங்கியாளர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது.

Saturday, May 14, 2011

திரும்பவும் அம்மாவின் கையுள் சர்வாதிகாரம்

என்னடா தலைப்ப பார்த்த உடன் இவன் திமுக வோ என்று எண்ணி விட வேண்டாம்.... காங்கிரஸ் ம் அதன் உடன் அடி வருடி திமுகவும் தோற்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு வேலைகள் பார்த்தவர்களில் நானும் ஒருவன்...

தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்து இருக்கும் போதே சாலைகளில் ஆஇதிமுக கொடியுடன் இரு சக்கர வாகனம் மற்றும் முன்று சக்கர வாகனகளில் தொண்டர்கள் செல்வதை பார்க்க முடிந்தது..... மாலையுள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் பொது தி மு க தலைமை செயலகம் தில் 15 இல் இருந்து 20 பேர்கள் தான் இருந்திருப்பார்கள்... அதை பார்த்த என்னக்கு இதை விட தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அதிகம் என்று தான் என்ன தோன்றியது.....

தமிழகத்தில் காங்கிரஸ் ஐ அடியோடு அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி பிரச்சாரம் செய்த சீமானுக்கு மிக பெரிய வெற்றி இந்த தேர்தல் அறிக்கை.... ஆனால் அவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்குமா என்றால் அது சந்தகேமே.....

அனைவரும் ஆஇதிமுக வெற்றி பெற்றது அவர்களுது ஆளுமையால் என்று நினத்தால் அது தவறு... இப்படி தான் அனைவரும் பேசுகிறார்கள்... ஆனால் அந்த அம்மையார் கைதந்த நான்கு அரை ஆண்டுகள் வனவாசம் இருப்பது போல் கோட நாட்டில் ஒய்வு எடுத்து விட்டு கடைசி ஆறு மாதங்களில் பிரச்சாரம் செய்து இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாரா என்று கேட்டால் அது மிக பெரிய கேள்வி கூறி.....

இது காக்கை உக்கார பனம்பழம் விழந்த கதை தான் இங்கயும் நடந்து உள்ளது.... தேர்தல் அன்று All India Radio vil முத்த பத்திரிகை ஆசாரியர்களும் அணைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொந்த விவாதம் நடந்து... அதில் ஒரு பத்திரிகை ஆசாரியர் கூறும் பொது திமுக வின் விழுச்சி ஐ Chaos theory ஓடு ஒப்பிட்டார்... அதாவது தசாவதாரம் படத்தில் கமல் சொல்வது போல்.. ஒரு வண்ணத்தி புச்சியுன் இறகை அசைவில் இருந்து வெளிப்படும் சக்தி ஒரு அழி பேர் அலை உருவாகுவதற்கு காரணமாக அமையும் என்பது தான் Chaos theory இண வெளிப்பாடு....
அது போல் தான் திமுகவில் மதுரையுள் நடந்த தினகரன் அலுவலகம் மிதான தாக்குதல் தான் தயாநிதி மாறன் பதவி விலகவும், அந்த இடத்தில கனிமொழி யின் ____________ ராஜா க்கு அந்த பதவி வழங்க பட்டது, அந்த பதவி யின் முலம் 2g spectrum இல் நடந்த முறைகேடு, அதை பின் புலமாக வைத்து காங்கிரஸ் திமுக வை பல இடங்களில் மிரட்டி தங்கள் கைக்குள் வைத்து கொண்டது.... குறிப்பாக இலங்கை விவகாரம், தேர்தல் போட்டி இடும் இடங்கள் என எல்லாவரிலும் திமுகவால் வாய் திறக்க முடியாத நிலைமை.... என்று இந்த பட்டியல் நில்கிறது.....

மேலும் பொது மக்களை நேரடியாக பாதித்த விசயங்கள், விலைவாசி உயர்வு, மின் வெட்டு கருணாநிதின் குடும்ப அரசியல், சிலந்தி வலை போல் பின்னப்பட்ட குடும்ப வியாபாரம், அணைத்து துறைகளிலும் கால் வைத்து நடு தர மற்றும் கிழ தர மக்களை பாதித்த விசயங்கள் தான் திமுகவின் சரிவிற்கு முக்கியமான விசயங்கள்.....

இது இப்படி இருக்க தனது பரகிரமிதில் தான் வெற்றி பெற்றோம் என்றும் குதிக்கும் ஆஇதிமுக பார்த்தல் எனக்கு வேடிக்கையாக தான் இருக்கிறது... இது காக்கை உக்கார பனம்பழம் விழந்த கதை என்பது இவர்களுக்கு தெரிய வில்லை... ஆனால் தெரிந்தோ தெரியமொலோ தமிழக மக்கள் ஒரு சவகுளியுள் இருந்து தப்பித்து ஒரு புதை குளியுள் மாட்டி கொண்டார்கள்.....

ஏற்கனவே இந்த அம்மையார் தனது இஷ்டம் போல் தான் நடக்கும் யாரையும் மதிக்காது.... தனது காலில் விழுபவன் தனை துதி பாடுபவர்களை மட்டுமே பக்கத்தில் வைத்து ஒரு அல்லி ராஷியம் நடத்தி வந்தவர்க்கு இப்பொழுது எதிர் கட்சி என்ற ஒன்ற இல்லாத ஒரு நாடளுமன்றத்தை குடுத்து இருக்கிறோம்..... இனிமேல நடக்க போவது ஒரு சர்வாதிகாரம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை...

கவனிக்க: அந்த அம்மையார் முன்பு இருந்தது போல் இல்லை, அவர் மாறி விட்டார் என்று சப்பை கட்டுவோர்கள் கவனிக்க..... அந்த அம்மையார் இன்னும் மாற வில்லை என்பதற்கு ஏ. கா. தொகுதி பங்கிடு சமையத்தில் தனிசையாக வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்து விட்டு 2 நாள்களில் அந்த பட்டியல் கும் என்னகும் எந்த சம்பத்தும் இல்லை... என்று கூறி அடுத்த பட்டியல் தயாரித்து வெளி இட்டது, அதில் வைகோ பெயர் சேர்க்க படவில்லை... இவொலோ நாட்களாக கூட இருந்த கூட்டனி கட்சி ஐ நிக்கிவர் தானே....

இதற்கு மேல் அம்மா சொல்லுவது தான் வேதம், எழுதவது தான் சட்டம், என் என்றால் வனவாசம், எதற்கு என்றால் சிறைவாசம்.... சுருக்கமாக சொன்னால் இனிமேல தமிழ் நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகள் நடைபெற போவது சர்வாதிகாரம்........

இந்த காங்கிரஸ் மற்றும் திமுகவை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து உண்மை தான்... ஆனால் பாவம் அவர்கள் எதிர் கட்சி என்ற அந்தஸுது குட பெற முடியாத அளவுக்கு எதிர்திற்க கூடாது,

இந்த சர்வாதிகாலத்தில் நடக்க போகும் இன்ப துன்பங்களில் உங்களுள் ஒருவனாக இருந்து பார்த்து பழகி போக போகும் ஒரு சாதாரண பொது ஜனம்

Thursday, April 28, 2011

வேடிக்கையான வேலை வேண்டாம் கடிதங்கள்.....

resign என்று கூகிள் இல் தேடிய போது கிடைத்த சில வேடிக்கையான, விதியாசமான வேலை வேண்டாம் கடிதங்கள், சில உங்களின் பார்வைக்கு.....

ஒரு பிளாக்கர்-இன் resignation letter

ஒரு விமானியின் முயற்சி,

web design இல் வேலை செய்பவரின் முயற்சி


கேக்கில் resignation letter



அமெரிக்க ஜனாதிபதின் resignation letter



yahoo resignation letter generator



சில வேடிக்கையான resignation letter




இதை எல்லாம் விட நமவர்கள் அனுப்பும் சில கடிதங்கள்,

From
நான் தான்
உன் துறை தான்
உன் கம்பெனி தான்

To
நீ தான்
உன் துறை தான்

ஐயா,
நான் இனிமேல பணிக்கு வரமாட்டேன், உன்னால் முடிந்ததை செய்து கொள்

இப்படிக்கு

நான் தான்

Monday, April 25, 2011

காமம் மா அல்லது இனகவர்சியா????


அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே....
நம்ம ஊரு இப்போ ரொம்ப கேட்டுபோசுனே
அதே சொன்னா வெட்க கேடு
சொல்லடா மானே கேடு.....

இந்த நில்லைமையுள் தான் நானும் இந்த பதிவு எழுதுகிறேன்.... எனது ஊர் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். கல்லூரி படிக்கும் காலகட்டத்தில் duck-in செய்து shoe அணித்து கொண்து விட்டை விட்டு வெளியுள் வந்தால் தெருவில் உள்ளவர்களில் நான்கு பேர்களாவது துறை இப்படி tip-top ஆ dress பண்ணிகித்து எங்கு கிளம்பிதிங்க என்று கேட்பார்கள்....... எனது ஊர் ஒன்றும் மிகவும் பின்தங்கிய கிராமம் என்று கூர வில்லை.. அனால் வட இந்திய மோகமோ இல்லை மேற்கு உலக நாகரிகமோ அவல்லோவாக பரவாத, ஒரு சாதாரண தென் இந்திய ஊராக தான் இருந்து வந்தது.

இந்த தேர்தல் மற்றும் தமிழ் புததாணட்டு விடுமுறையை ஒட்டி நான் ஊருக்கு சென்று இருந்தேன், அப்பொழுது என்னக்கு ஒரு printout எடுக்க வேண்டும் என்பதால் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஒரு புது browsing center க்கு சென்று எடுத்து விடலாம் என்று சென்று இருந்தன், அங்கு பார்த்த காட்சிகள் சென்னையுள் பார்த்து இருந்தால் சரி பிஞ்சுல பழுத்தது என்று கூறி இருப்பேன், அல்லது திருநெல்வேலில் பார்த்து இருந்தால் சே, திருநெல்வேலியும் இப்பொழுது சென்னை போல் கேட்டு விட்டதே என்று நினைத்து இருப்பேன்.. இருந்தாலும் மனதிற்குள் ஒரு சின்ன வலி இருந்திருக்கும், அனால் நான் பார்த்தது எனது சொந்து ஊரில், மனது கேட்க வில்லை,


நான் பார்த்தது ஒரு பையனும் ஒரு பெண்ணும் browsing center cabin குள் அந்த பையன்னின் கைகள் அந்த பெண்ணின் மிது ஊர்ந்து கொண்து இருந்தது, என்னது கோபதிற்கு காரணம், அந்த பெண் பத்தாவது வது படித்து கொண்து இருபாலா என்பது கூட சந்தகமே.... அவள் ஒரு சிறுமி, அந்த சிறுவனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் 18 வாது இருக்குமா என்பது கூட சந்தகமே.....

இதை பார்த்த உடன் கூப்பிட்டு திட்டி விடலாமா??? அல்லது browsing center owner ஐ கூப்பிட்டு புகார் செயாலமா??? காவல் துறைக்கு தகவல் குடுக்கலாமா என்று பலவாறாக யோசித்து கொண்டு இருந்தாலும், ஒரு பக்கம் அந்த பெண்ணை பற்றி நினைக்கவும் தவறவில்லை இந்த முன்றில் எந்த முடிவு எடுத்தாலும், அந்த பெண்ணின் பெயர் அந்த பகுதயுள் பலமாக பாதிக்க படும், அவளுக்கு வேறு பெயர் வைத்து இந்த சமுகம் அழைக்கும்.... அவளுது தாய், தந்தையர் நிலைமை என்ன வாகும், சமுகத்தில் அவர்களுது பெயரும் அல்லவா பாதிக்க படும், அவளுடன் கூட பிறந்த திருமணம் ஆகாத அக்கா, தங்கையர் நிலைமை என்ன வாக்கும், அல்லது இதை பார்த்தும் பார்க்காது போல சென்று விடலாமா???? என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருக்கும் போதே அவர்கள் கிளம்பி விட்டார்கள்.....

நல்லது, என்று நானும் 15 நிமடத்தில் கிளம்பி விட்டேன், மொத்தமாக நான் அங்கு இருந்த நேரமும் அவோளோதன், சரி அந்த பெண்ணிருக்கும் இந்த விடயம் பிடிக்கவில்லை போல் இருக்கிறது அதனல்தான் உடனே கிளம்பி விட்டால் போலலே இருக்கிறது, என்று அவர்கள் கிழே இறங்கிய சில நிமிடங்களில் நானும் இறங்கி விட்டேன்... அந்த சிறுமியை காணவில்லை, அனால் அவள் கூடே வந்தவன் மட்டும் இருந்து அங்கு தண்ணீர் குடித்து விட்டு அவன் browse செய்தற்காக பணம் குடுத்தான், அப்பொழுதுதான் என்னக்கு தெரிந்தது அவர்கள் சல்லாபம் முன்று அரை மணி நேரம் நடந்து இருந்தது என்று.... இப்பொழுது நினைக்கிறன், அவளுகாக, அவள் குடும்பதிற்காக நான் பார்த்த கரிசனம் தவறு என்று.... வெளிய வந்தும் பார்த்தேன், அந்த சிறுமியை காணவில்லை, நல்ல பெண் போல முதலில் வெளிய சென்று மறைந்து விட்டாள்,

என் இந்த சிறுமி இப்படி நடந்து கொண்டாள்???? அதற்கு காரணம் என்ன???? இது காமம் மா இல்லை இன கவர்ச்சியால் உந்தபட்ட பாலியல் உணர்வா?? கண்டிப்பாக இதை நான் கேடு கேட்ட காதல் என்று மற்றும் சொல்ல மாட்டன், இது கண்டிப்பாக இந்த வயதில் வரும் இன கவர்ச்சியை தவிர வேறு ஒன்றும் இல்லை,

இதற்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டால் அனைவரும் புற காரணத்தை மட்டுமே சொல்லுவர், சினிமா, மேற்கு உலக நாகரிகம், கலாச்சார சிர்கழிவு, அனால் யாரும் தன் மேல் இருக்கும் தவறை சுட்டிகாட்டி கொள்ளவோ, அல்லது ஏற்கவோ தயாராக இல்லை, அனால் இதை போன்ற பெண்கள் இப்படி கேட்டு போவதற்கு, அவர்கள் வீட்டில் இருபவர்களும் ஒரு காரணம் என்ற நான் சொல்லுவேன்.. ஒரு வயதிருக்கு வந்த பெண்ணோ, அண்ணோ விட்டில் இருக்கும் பொழுது, அவர்களுக்கு மதிப்பு அளித்து, அவர்கள் உடன் நமது நேரத்தை செலவழிக்க வேண்டும், அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்கை ப்ரசெனைகளின் தீர்வுகளுக்கு வழி கூற வேண்டும், அவர்களுக்கு எல்லா விததிலும் நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,

teen-age இல் அவர்கள் முன்னால் இருக்கும் ப்ரசெனைகளை நாம் தான் அவர்களுக்கு பக்கத்தில் இருந்து தைரியம் குடுக்க வேண்டும் அதற்கு தீர்வு காண உதவ வேண்டும். அனால் இப்பொழுது இருக்கும் அவசர கால கதியில் நாம் வீட்டில் இருபவர்களோடு கலந்து பேசுவதற்காக நாம் செலவிடும் நேரம் மிக குறைவு.... அவர்கள் மேல் நமது அக்கறை, அவர்களுடன் பேசுவது என்பது மிக குறைவு, என்னவே தான் அவர்கள் அவர்களுது சுக துக்கத்தை பகிருந்து கொள்ள, நண்பர்களை தேடு கிறார்கள், அதவும் எதிர் பாலினமாக இருந்தால் மிகவும் எளிதாக ஒன்றிட முடியும், அவர்களுக்கும் அது எதோ ஒரு வகையுள் சயுகரியமாக, more confort ah feel பன்னுரங்க.... இந்த நேரத்தில் சினிமா, மேற்கு உலக கலாச்சாரம், ஆண், பெண் நட்பு என்று அவர்கள் எல்கை விரிகிறது..... காதல் என்ற இன கவர்ச்சியால் அவர்கள் தப்பு செய்யவும் அது தூண்டுகிறது,

பெறோரின் கவன குறைவால் ஏற்பட்டு கொண்டு இருக்கும் இன்னொரு முக்கியமான் விஷயம். இப்பொழுது பரவலாக எல்லா செய்தி தாளிலும், ஐந்து வயது சிறுமி கற்பழித்து கொலை, 8 வயது சிறுமி கொன்ற காமகொடூரன்... என்று பல செய்திகள் நாம் அனைவரும் படித்த விசயங்கள் தான்... அனால் இதில் கவனிக்க வேண்டிய விசயம், இவ்வாறு கற்பழிக்க படும் சிறுமிகள் யாவரும், அவர்களோடு நன்கு பழகும், driver, watchmen, பக்கத்துக்கு வீட்டு மாமா, என் சில சமயம் வாத்தியார்களும், விளையாட்டு ஆசிரியர் களும் தான், நாம் நமது மகளை சிறுமியாக, குழந்தையாக தான் பார்க்கிறோம், அனால் இந்த கேடுகெட்ட சமுகம், அவளை ஒரு Sex-Toy அக தான் பார்கிறார்கள்,

தனது மகளை பிறர் பெண் கேட்டு வரும்போது தான், பல தந்தைகளுக்கு தனது மகள் திருமண வயதை நெருங்கி விட்டால், அவளக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தோணும், அது வரை அவளை குழந்தை யாக தான் பார்த்து இருப்பார்கள், அனால் ஐயா உங்களுது கண்ணனுக்கு வேண்டும் என்றால் அவள் ஒரு சிறுமியாக தெரியலாம், அனால் இப்பொழுது பெண்ண்கள் சிறு வயதில், வயதுக்கு மிறிய வளர்ச்சியை கொண்டு இருகின்றர்னர்.... அது இந்த சமுகத்துக்கு ஒரு சிறுமியாக தெரிய்வது இல்லை என்பது தான் வெட்க கேடு....

தயவு செய்து உங்களுது மகள்க்கு good touch and bad touch சொல்லி குடுங்கள்..... பாலியல் கல்வி சொல்லி குடுக்கலாம் ஒன்றும் தவறு இல்லை..... நாம் இது எல்லாம் அசிங்கம், இதை பற்றி எனது பெண்ணிடம் நானே எப்படி பேசுவது என்று யோசிகதிர்கள்... அது அவர்கள் வாழ்கை வே மாற்றி அமைக்க உதவும்.....

இனிமேல அவது உங்களுது குடம்பதிடம் நேரம் ஓதுங்கள், அவர்களோடு மானம் விட்டு பேசுங்கள், வாரத்தில் ஒரு நாலாவது வெளியுள் கூட்டி செலுங்கள், இது உங்களின் குழந்தைக்கு உங்கள் மீது மரியாதையை, அன்பு வைபதற்கு ஒரு காரணமாக அமையும், அவர்கள் முன்பு சொன்னது போல் அது போன்ற தீய பழக்க வழகங்கள் இருக்காது, மற்றும் நீங்கள் உங்கள் குழந்தையோடு நேரம் செலவளிப்பதால் அவர்களை வேறு யாருடனும் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது, என்னவே இரண்டவதாக சொன்னதிற்கும் சாத்திய கூறுகள் குறையும்,

நான் வேறு யாரும் அல்ல, உங்களோடு ஒருவனாக, இந்த சமுக அவலங்களை பார்த்தும், கண்டித்தும்,, பல நேரங்கில் ஒரு பர்வையாலனாக செல்லும்.. உங்களுள் ஒருவன்

Monday, April 18, 2011

தமிழ் நாட்டில் 49 செய்த புரட்சி...

2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளித்த வாக்காளர்கள் ஒரு சாதனை படைத்தது இருக்கிறார்கள்..... இது வரை பதிவு ஆனா தமிழக சட்டமன்ற தேர்தல்களில் இந்த முறை தான் அதிகமான அளவு 49 க்கு விழுந்து இருகின்றன (24,824)

அனால் தமிழகத்தின் மொத்த வாக்கு களோடு(3,67,53,114) ஒப்பித்து பார்கையுள் இது குறையு தான்..... அனால் கடந்த காலங்களில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இது இமாலைய வாக்கு உயர்வு..... இது எல்லா அரசியல் கட்சிக்கும் ஒரு எச்சரிக்கை மணி... தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும், ஆதிமுக இல்லை என்றால் திமுக, திமுக இல்லை என்றால் ஆதிமுக தான் வோட்டு, என்ற எழுதபடாத சட்டம், முடிவு க்கு வரும் காலம், ஒன்றும் தொலைவில் இல்லை என்பதை சுட்டி காட்டும் சாவு மணியாக தான் நான் இதை பார்கிறேன்.
இதற்கு முந்திய தேர்தல்களில் ஆதிமுக வின் அடக்கு முறை, அடாவடி தனம், ஆகியவற்றிக்கு சாவு மணி அடிக்க அப்பொழுதே குறுஞ்செய்தி அனுப்பியவர்கள், இப்பொழுது இரண்டு கட்சி களும் சரி இல்லாத நிலையுள், ஒரு வலுவான முன்றாவது ஆணி அமையுமா என்று இருந்த ஏக்கமும், கடைசி நேரத்தில் தவிடு போடி ஆனதில், பலருக்கும் மனகஷ்டம், அந்த நேரத்தில் இரு கட்சி களுக்கும் வாக்கு அள்ளிக்க விருப்பம் இல்ல்லாமல் எதாவது ஒரு சுயட்சை க்கு வாக்கு அளித்து அது ஒன்றும்கிற்கும் உதவாமல் போவதற்கு பதில், யாருக்கும் வாக்கு அள்ளிக்க விருப்பம் இல்லை என்றும் பதிவும் இந்த முறை 49 க்கு மக்கள் மத்தியுள் நல்ல செல்வாக்கு இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது...

ஆனாலும் இந்த முறை பல இடங்களில் 49 க்கு வோட்டு போட பலர் அனுமதிக்க படவில்லை... 49 க்கு வோட்டு போடுவதில் வாக்காளர்களின் சுதந்திரம் காக்க படுவது இல்லை, நான் 49 க்கு தான் வோட்டு போடுகிறேன் என்பது அந்த வாக்கு சவாடியுள் இருக்கும் அனைவர்க்கும் தெரிந்து விடும், இதனால் தமக்கு எதுவம் பிரெச்சனை வந்து விடுமோ என்று, பலர் எதோ ஒரு சின்னத்திற்கு குத்தி இருகிறனர், அதையும் மீறி வந்ததது வரத்தும் என்று வாக்கு அளித்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 24,824

49 க்கு வோட்டு அளிபவர்கள் சுதந்திரம் மட்டும் பாதுகாக்க பட்டால், வோட்டு எணிக்கை எங்கோ சென்று இருக்கும், பார்க்கலாம், மே 13 தேர்தல் முடிவு....... தமிழகத்தில் ஒரு அரசியல் பரட்சி ஏற்படுமா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்....

சிறு குறிப்பு:

  • சென்னை மாவட்டம் அதிக பட்சமாக 3,407 வோட்டும்
  • கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாவது பட்சமாகக் 3,061 வோட்டும்
  • கன்னியாகுமரி இல் குறைந்த patchamaka 170 வோட்டுகளும் பதிவு அகிஉள்ளன
  • கூடலூர் தொகுதியுள் அதிகபட்சமாக 787 வோட்டும்
  • சிங்கலூர் தொகுதியுள் இரண்டாவது பட்சமாகக் 646 வோட்டும்
  • நெய்வேலி, ரிஷிவந்தியம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை 49 க்கு ஒரு வோட்டு கூட பதியபடவில்லை

மேலும் தகவல்களுக்கு election commission இந்த தகவலை உங்களுக்கு வழங்கி இருப்பவன், நான் வேறு யாரும் அல்ல... நான் உங்களுள் ஒருவன்

Tuesday, April 12, 2011

தேர்தல் முடியும் வரை அணைத்து கட்சி களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

தேர்தல் தலைமை அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டு உள்ள விதிமுறைகள் அனைத்து கட்சிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அப்டி தவறினால் கடுமையான சட்டம் பாயும்.... அனால் அய்யா தேர்தல் அதிகாரி...... எந்த அளவுக்கு நீங்க கடினமாக இருபிங்க??? எந்த கட்சி உடனும் சேராமல், நடுநிலையாக நீங்கள் அவது இருபிரிகலா?? இல்லை எதாவது ஒரு கட்சி இடம் பணம் பெற்று கொண்டு அவர்களுக்கு அதரவாக இருபிரிகலா????

சென்னை-இல் ஏற்கணவ ரவுடிகள் வந்து தங்கி இருப்பாடாக ஒரு தகவல், அங்கு அங்கு வாக்குக்கு பணம் குடுக்க தான் செய்கிறார்கள், பணமாகவோ, அல்லது வேறு வடிவிலோ வாக்களர்களுக்கு சென்று சேர வேண்டியது சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது, ஆனாலும் தேர்தல் ஆணையம், 10 ரூபாய் பிடித்து கொண்டு 100 ரூபாய் விடுவிடுவதாக ஒரு தகவுலும் இருக்கிறது.... இதில் எது உண்மை??? எது பொய் என்று தெரியவில்லை.... இதை பார்க்கும் பொது எனக்கு எம்ஜிஆர் இன் பாடல் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது,

"திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடி கொண்டே இருக்கிறது,
அதை
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கிட்ட இருக்கிறது".....

எப்படியோ தேர்தல் ஆணையம் பணநாயகத்தை அழித்து நல்ல தேர்தல் நடத்தினால் சரிதான்,

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் கால விதிமுறைகள்:
  1. தேர்தலையொட்டி யாரும் பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தவும் கூடாது, அவற்றில் கலந்து கொள்ளவும் கூடாது. தேர்தல் தொடர்பான விஷயங்களை விளம்பரம் செய்யவோ, தொலைக்காட்சியில் ஒளிபரப்பவோ கூடாது. இதில் தேர்தல் தொடர்பான அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் அடக்கம்.
  2. வாக்காளர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி, நாடகம், பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவோ, ஏற்பாடு செய்யவோ கூடாது. இதனை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தேர்தல் பணி புரிவதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்களும், தொகுதியில் வாக்காளர்கள் அல்லாதவர்களும் இன்று மாலை 5 மணிக்கு பிறகு அத்தொகுதியைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
  3. திருமண மண்டபம், சமூகநலக் கூடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் வெளியாட்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று சோதனை செய்து தொகுதிக்குள் வெளியாட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்படும். தொகுதியில் இல்லாத வெளியாட்களின் வாகன போக்குவரத்தை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு தொகுதி எல்லையிலும் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  4. வேட்பாளர்களின் பிரசாரத்திற்காக அளிக்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 5 மணிக்கு பிறகு செல்லாததாகிவிடும். தேர்தல் நாளில் வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்காக, அவரது சொந்த உபயோகத்திற்கு ஒரு வாகன அனுமதியும், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு ஒரு வாகன அனுமதியும், கட்சி தொண்டர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு ஒரு வாகன அனுமதியும் தனித்தனியாக வழங்கப்படும்.
  5. தேர்தல் நாளில் அரசியல் காரணங்களுக்காக மேற்கண்ட அனுமதி பெற்ற 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்தலாம். தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாகன அனுமதி, தேர்தல் நாளில் செல்லுபடியாகாது. அதே நேரத்தில் பொது மக்கள் தங்களது சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு தடை கிடையாது.
  6. தேர்தல் நாளன்று வாக்காளர்களை வாகனங்களின் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்வதும், ஓட்டு போட்டவுடன் மீண்டும் கொண்டுபோய் வீட்டில் விடுவதும் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 133-ன்படி தண்டனைக்குரிய ஊழல் குற்றமாகும்.
  7. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ இரண்டு நபர்களுடன் தற்காலிக அலுவலகத்தை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த இருவரும் அங்கு தேவையில்லாமல் கூட்டம் கூட்ட அனுமதி கிடையாது. இங்கிருந்து தின்பண்டங்கள் எதுவும் வினியோகிக்கக் கூடாது. இந்த அலுவலகத்தில் இருக்கும் இருவரும் அந்த வாக்குச்சாவடியைச் சேர்ந்த வாக்காளர்களாக இருக்க வேண்டும். சரிபார்த்தலுக்காக இருவரும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குற்ற பின்னணி இருப்பவர்கள் இந்த அலுவலகங்களில் இருக்க அனுமதி கிடையாது.
  8. 11/04/20011 மாலை 5 மணியில் இருந்து 13ம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிடவும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிற்கு கடந்த 4ம் தேதியில் இருந்து மே மாதம் 10ம் தேதி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது
    .
  9. கடந்த காலத்தில் சில வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள `குளோஸ் பட்டனை' அழுத்தவில்லை. அதனால் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் கூறப்பட்டதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது
  10. அதன்படி வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும் அனைத்து தேர்தல் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள `குளோஸ் பட்டனை' அழுத்திவிட்டு பின்னர் மூடிவிட வேண்டும். அதுபோல ஓட்டுப்பதிவின்போது வாக்காளர்கள் அனைவரும் கையெழுத்திடும் 17 ஏ பதிவேட்டில், தேர்தல் முடிந்ததும் கடைசி கையெழுத்திற்கு கீழே கோடிட்டு, கடைசி பதிவின் வரிசை எண்ணைக் குறிப்பிட்டு அனைத்து ஏஜெண்டுகளிடமும் கையெழுத்து வாங்க வேண்டும். அதுபோல தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை 17 சி படிவத்தில் எழுதி, தேர்தல் ஏஜெண்டுகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அதன் நகலை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த தேர்தலில் பணம் வழங்கியது தெரிய வந்தால், தேர்தலை ஒத்தி வைக்க படும் என்று கூறி உள்ளனர்.... இந்த தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படுமா என்று ஆவலோடு காத்து கொண்டு இருக்கும் உங்களுள் ஒருவன்.......

Thursday, April 07, 2011

இந்த தேர்தலில் என்ன செய்ய போறிங்க?????

ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் சட்டமன்ற தேர்தல், நாடளுமன்ற தேர்தல், உள்ளாட்சி அமைப்பு காண தேர்தல், இடை தேர்தல், என பல தேர்தல்கள் நமக்கு வந்து வந்து போனாலும், நாம் என்ன பெரிதாக செய்து விட்டோம், இந்த தேர்தல்களில், அல்லது நம்மால் தேர்ந்து எடுக்க பட்டதாக அறிவிக்க பட வேட்பாளர்கள் தான் என்ன செய்து விட்டார்கள்?????

அவன் 100 ரூபாய்க்கு உழல் செய்தானா தான் 150 க்கு உழல் செய்ய வேண்டும் என்று இருமாபுடனும், முன்னவனை என்ன சொல்லி கைது செய்யலாம், அவன் போட்ட திட்டங்களை தடை செய்து விட்டு, முதல் முன்று வருடம் பதவி, அதிகாரம், எல்லாம் என அனுபவித்துவிட்டு, எங்கே அடுத்த முறை தான் வர முடியோதோ என்ற பயத்தில் மக்களுக்கு ஏனோ தானோ என்று தான் கூறிய வாக்கு உறுதிகளை பாதியாவது நிறைவேர்வுவர்கள்..
எதிர்கட்சியாக இருக்கும் அரசியல்வாதி, தான் செய்த உழல்களில் இருந்து எப்படி தப்பிப்பது, எவனுக்கு எவ்ளோ லஞ்சம் குடுக்க வேண்டும், ஆளும் கட்சியில் இருப்பவன் போடும் வழக்குகளை இல் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து கொண்டு, அதற்கான வழக்கு, விசாரணைகளில் காலம் சென்று விடும், இல்லையல் தான் நாடளுமன்றம் சென்றால் முதல் அமைச்சராக தான் வருவேன், இல்லையேல் புறக்கணிப்பு தான்.... தனக்கு அடுத்த பதவியில் இருக்கும் நபரை எதிர் கட்சி தலைவராக உட்கார வைத்து விட்டு... தான் எதாவது கொடநாடு அல்லது வேறு எதாவது ஒய்யு எடுக்கும் ஸ்தலத்துக்கு சென்று விடுவது....... அப்போ அப்போ தனது சொந்த தொலைகட்சியுள் எப்போதோ எடுத்த பேட்டி, அல்லது எதாவது உப்பு சப்பு இல்லாத அறிக்கை குடுத்து விட்டு தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்று காட்டி கொள்ளுவார்கள்..........

தேர்தலுக்கு ஆறு மாதங்கள் வரை அவர்கள் எங்கு இருப்பார்கள் என்ற தெரியாது, அனால் கடைசி ஆறு மாதங்கள் அவர்கள் போடும் கூட்டம் எத்தனை, அறிக்கைகள் எவ்ளோ, அந்த நேரத்தில் எவனாவது ஒருவன் இறந்து விட குடாது, அவன் தியாகி அக்க படுவான், சாலையில் கல் தடுக்கி கிழே விழுந்தவன் வரை, எல்லா கட்சி உம் அவன் குடும்பதுக்கு நிவாரணம் குடக்கும், கொஞ்சம் அதிகமாக போனால், உண்ணாவிரதம், சாலை மறியல், வெகு சன உடங்கங்களால் பிரதான செய்தி அக படும்,

மீனவர் பாண்டியனும், ஜெயக்குமாரும் இலங்கை கடற்படையால் ஒரு தெரு நாயை கொல்வது போல் கொன்றதுக்கு அதவும் தேர்தல் நேரம் என்பதால் எல்லா அரசியல் கட்சிகளும், பாஜகா, காங்கிரஸ் தேமுதிகா தவிர நாளைக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்கிற எண்ணம் இருக்கும் நடிகர் விஜய் உட்பட அனைவரும் இறந்த மீனவர்கள் விட்டிற்கு சென்றார்கள், ஆர்பாட்டம், பேரணி, ஊர்வலம், உண்ணாவிரதம், என்ன என்ன செய்ய முடியுமோ அவைகள் அனைதும் செய்தார்கள், இறந்தவர்கள் வீட்டிற்கு நிவாரண தொகை அரசாங்கம் குடுபடர்க்கு முன்பே இவர்கள் குடுத்தார்கள்..... நான் உங்கள் வீட்டு பிள்ளை.... உங்கள் வோட்டு எனகு தான் என்று அடர்வும் கேட்டார்கள், நானும் ஒ௦ரு உணவிரத போராட்டத்தில் கலந்து கொண்டேன்.......
என்னக்கு இருக்கும் ஆதங்கம் என்ன வென்றால்...... இதற்கு மு இறந்தவருக்கு குறிபிட்ட சில தமில் இன ஆர்வலர்கள் தவிர வேறு யாரும் அதை பற்றி வாய் கூட திறக்கவில்லை....... அவர்கள் யாரும் மனிதர்கள் இல்லையா???? அப்பொழுது சிங்கள கடற்படை கொலைகள் செய்யாத நலவர்களாக இருந்தார்களா????? தேர்தல் வந்தால் மட்டும் இவர்கள் எப்படி உங்கள் கண்களில் படுகிறார்கள் என்று தெரிய வில்லை ????

சரி இதை எல்லாம் விடுங்க..... இந்த தேர்தலில் நீங்க என்ன செய்ய போறீங்க ???? எவன் ஜெவித்து வந்தாலும் நமக்கு ஒன்னும் பு_____ போவது இல்லை...... பிறகு என்ன அவனுகள பத்தி பேசிக்கிட்டு இருகிறது ப்ரியோகனம் இலிங்க..... நாம என்ன செய்ய போறோம்?? இப்போ அதுதான் கேள்வி..... நிறைய பேருக்கு ரெண்டு கொல்லி வாய் பிசாசுல எதுக்கு ஒட்டு போடலமனு எண்ணம் இருக்கும்...... மஞ்சள் துண்டுக்க இல்ல பச்சை புடவைக ன்னு......... இப்போ ஆட்சி ல இருக்கிற அந்த மஞ்ச துண்டு கிழவன்.... பண்ணின துரோகம் நாம மனசுல இருக்கும், அதுனால அவனுக்கு ஒட்டு போட வேண்டாம் என்று இருக்கலாம், சரி கிழவன் தான் சரி இல்ல, பச்சை புடவைக்க போயிறலாம் ன்னு பார்த்த..... அந்த அம்மா ஆட்சி காலத்துல நடந்த அரசாஜகம் அளவ இல்லாம இருந்துச்சு..... எல்லோரையும் நசுக்கி, அவிங்க போட்ட எஸ்மா, டெஸ்மா எல்லாம் மறக்க குடிய்தா.........தமிழகம முழுவதும் கஞ்சி தொட்டி திறந்த பெருமை இந்த அம்மாவையே சாரும்......

சரி அம்மா வும் வேண்டாம் அய்யாவும் வேண்டும் என்று முன்றாவது ஒரு பலம் மிக்க கட்சி இருகிறதா என்று பார்த்தல் அதவும் இல்லை...... சரி எதாவது சுயட்சை க்கு வோட்டு போடலாம்னு பார்த்த இந்த பண நாயகத்தில்..... அதுக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது..... எங்காவது சுயட்சை வெற்றி பெற்றால் நன்மைக்க............. அனால் அப்படி வெற்றி பெறுபவனும் ஆளும் கட்சி யால் வாங்க படுவதற்கு வாய்புகள் மிக அதிகம்.............

நமது வோட்டு ஜெவிக்காத சுயட்சைகு போடுவது செல்லாத ஒட்டு போல தான்....... சரி சுயட்சைக்கு வேண்டாம் எந்த அரசியல் நாய்க்கும் வேண்டாம், நாமா வோட்டே போடவேண்டாம் என்று இருந்தால், அங்கேயும் ஒரு பிரச்சன்னை இருக்கிறது.... நம்ம கள்ள ஒட்டு கண்ணாயிரம் போட்டுவிடுவான்.......... என்ன எங்க செத்து போன தாதா ஒட்டும் அவன் தான் போட்டனா பார்த்து கொங்க.....
நாமா இந்த தேர்தல யாரா சேவிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பதை விட, யாரு தோற்றால் நமக்கு நல்லது என்று சிந்திக்க வைக்கும் சீமான் என்னை கவர்ந்தவர், இந்த தேர்தலில் யாரு ஜெவிதலும் நமக்கு ஒன்றும் செய்துவிட போவதில்லை, யாரு ஜெவிதல்லும் சீமான் இருக்க போவது என்னோமோ ஜெயில் தான்...


தமிழகத்தை மதிக்காத காங்கிரஸ், நதி நீரில் இருந்து மின்சாரம் வரை, ஈழ தமிழர்கள் முதல் தமிழ்நாடு மீனவர்கள் வரை, இவர்களது துரோகம் நமக்கு கண் முன் இருக்கிறது, முதலில் இவர்களை தோற்கடிப்போம், பின்பு திமுக, ஆஇதிமுக என்ன அனைவரையும் தோற்கடித்து விட்டு..... தமிழர்களை தமிழர்களே ஆளும் நாளுக்கும், தனி ஈழம் அமையும் என்று தினம் தினம் எதிர்பர்போடு இருக்கும் உங்களுள் ஒருவன்

Saturday, March 26, 2011

கருனாநிதிடம் சொந்தமாக கார் இல்லையாம்..... எதாவது நம்புகிற மாதிரி சொல்லுங்க.......

தேர்தல் நேரத்தில் நடக்கும், காமெடிகளுக்கு அளவே கிடையாது..... தேர்தலில் போட்டி போடுவோர் அனைவரும் தங்களுது சொத்து விவரங்களை அள்ளிக வேண்டும், என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, முதலில் இதற்கு எதிர்ப்பு தெரவித்த அரசியலால் கட்சிகள் அனைத்தும் வேறு வழி இன்றி இப்பொழுது தனது சொத்து கணக்குகளை சமர்பிக்கிறன..... அனால் அது எந்த அளவுக்கு நம்பத்தன்மை மிகுந்தது என்பது அவர்களுது ஆடிட்டர் க்கு மட்டுமே வெளிச்சம்....

இந்த தேர்தலுக்கு உழல் பெருசாளிகள் தங்களுது சொத்து மதிப்பை வெளி இட்டு இருக்கிறார்கள்.... இதை நம்புவர்கள் நம்பிகொள்ளலாம்..........

ஜெயலலிதாவின் சொத்து குறித்த முழு விவரம்:


  • ரொக்கக் கையிருப்பு - ரூ. 25,000.
  • பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டெபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டெபாசிட் மொத்தம் ரூ. 2 கோடி மதிப்பில்.
  • இவை அனைத்தும் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
  • பாண்டுகள், நிறுவனங்களில் பங்கு முதலீடு ரூ. 50,000. இவையும் கோர்ட் பொறுப்பில் உள்ளன.
  • சொந்தமாக வைத்துள்ள வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 8.35 லட்சம்

    - நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் விவரம்:

    1. ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ் - ரூ. 8.5 கோடி.
    2. சசி எண்டர்பிரைஸஸ் - ரூ. 75 லட்சம்.
    3. கோட நாடு எஸ்டேட் - ரூ. 1 கோடி.
    4. ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட் - ரூ. 65 லட்சம்.

    நிறுவனங்களில் செய்துள்ள மொத்த முதலீட்டின் அளவு ரூ. 10.9 கோடி.

    ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979.

    அசையாச் சொத்துக்கள் விவரம்

    வேளாண் நிலம்:

  • ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.168. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.
  • செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.
  • 79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கிய போது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.
  • 8-3-1099 மற்றும் 8-3-1099ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கி தேதி: 11.02.1967. வாங்கி போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.
  • ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கிய போது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.
  • எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.

    குடியிருப்பு கட்டடங்கள்:

    -
  • 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கிய போது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய். அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.

    ஜெயலலிதாவிடம் கடன் நிலுவை எதுவும் இல்லை.

    நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்பட வில்லை.

    மொத்தமாக, ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 51,40 ,67,979 ஆகும்.

    thatstamil

    கருணாநிதியின் சொத்து விவரம்-சொந்தமாக ஒரு கார் கூட இல்லை


  • கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் 30 ஆயிரம் ரூபாய், துணைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.
    -
  • வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய். 
    -
  • கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய்.
    -
  • கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.
    -
  • அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.
    -
  • அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    -
  • துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்.

    -
  • கனிமொழியிடம் ரூ. 1 கோடி கடன் வாங்கிய ராசாத்தி

    -
  • ராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது என சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜயகாந்திற்கு ரூ. 2.5 கோடி கடன்-சொத்து மதிப்பு ரூ. 19. 88 கோடி

  • அவரிடம் ரூ. 19. 88 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளும், அவரது மனைவி பிரேமலதாவிடம் ரூ. 6.57 கோடி மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.

  • அவர் கையிருப்பும், வங்கியிலும் மொத்தம் ரூ. 7 லட்சத்து 56 ஆயிரத்து 90-ம், பிரேமலதாவிடம் ரூ. 6 லட்சமும் உள்ளது.

  • 2009-10-ம் ஆண்டில் விஜயகாந்த் ரூ. 53. 77 லட்சத்திற்கும், அவரது மனைவி ரூ. 12.82 லட்சத்திற்கும் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

  • விஜயகாந்த் ரூ. 7.5 கோடியும், பிரேமலதா ரூ. 1.72 கோடியும் அரசுக்கு வருமான வரி மற்றும் சொத்து வரியில் பாக்கிவைத்துள்ளனர். இது தொடர்பான அவர்கள் மேல்முறையீடும் நிலுவையில் உள்ளது.

  • விஜயகாந்திற்கு ரூ. 2.5 கோடி கடன் உள்ளது.