Saturday, March 26, 2011

கருனாநிதிடம் சொந்தமாக கார் இல்லையாம்..... எதாவது நம்புகிற மாதிரி சொல்லுங்க.......

தேர்தல் நேரத்தில் நடக்கும், காமெடிகளுக்கு அளவே கிடையாது..... தேர்தலில் போட்டி போடுவோர் அனைவரும் தங்களுது சொத்து விவரங்களை அள்ளிக வேண்டும், என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, முதலில் இதற்கு எதிர்ப்பு தெரவித்த அரசியலால் கட்சிகள் அனைத்தும் வேறு வழி இன்றி இப்பொழுது தனது சொத்து கணக்குகளை சமர்பிக்கிறன..... அனால் அது எந்த அளவுக்கு நம்பத்தன்மை மிகுந்தது என்பது அவர்களுது ஆடிட்டர் க்கு மட்டுமே வெளிச்சம்....

இந்த தேர்தலுக்கு உழல் பெருசாளிகள் தங்களுது சொத்து மதிப்பை வெளி இட்டு இருக்கிறார்கள்.... இதை நம்புவர்கள் நம்பிகொள்ளலாம்..........

ஜெயலலிதாவின் சொத்து குறித்த முழு விவரம்:


  • ரொக்கக் கையிருப்பு - ரூ. 25,000.
  • பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டெபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டெபாசிட் மொத்தம் ரூ. 2 கோடி மதிப்பில்.
  • இவை அனைத்தும் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
  • பாண்டுகள், நிறுவனங்களில் பங்கு முதலீடு ரூ. 50,000. இவையும் கோர்ட் பொறுப்பில் உள்ளன.
  • சொந்தமாக வைத்துள்ள வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 8.35 லட்சம்

    - நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் விவரம்:

    1. ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ் - ரூ. 8.5 கோடி.
    2. சசி எண்டர்பிரைஸஸ் - ரூ. 75 லட்சம்.
    3. கோட நாடு எஸ்டேட் - ரூ. 1 கோடி.
    4. ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட் - ரூ. 65 லட்சம்.

    நிறுவனங்களில் செய்துள்ள மொத்த முதலீட்டின் அளவு ரூ. 10.9 கோடி.

    ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979.

    அசையாச் சொத்துக்கள் விவரம்

    வேளாண் நிலம்:

  • ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.168. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.
  • செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.
  • 79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கிய போது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.
  • 8-3-1099 மற்றும் 8-3-1099ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கி தேதி: 11.02.1967. வாங்கி போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.
  • ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கிய போது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.
  • எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.

    குடியிருப்பு கட்டடங்கள்:

    -
  • 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கிய போது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய். அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.

    ஜெயலலிதாவிடம் கடன் நிலுவை எதுவும் இல்லை.

    நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்பட வில்லை.

    மொத்தமாக, ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 51,40 ,67,979 ஆகும்.

    thatstamil

    கருணாநிதியின் சொத்து விவரம்-சொந்தமாக ஒரு கார் கூட இல்லை


  • கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் 30 ஆயிரம் ரூபாய், துணைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.
    -
  • வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய். 
    -
  • கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய்.
    -
  • கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.
    -
  • அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.
    -
  • அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    -
  • துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்.

    -
  • கனிமொழியிடம் ரூ. 1 கோடி கடன் வாங்கிய ராசாத்தி

    -
  • ராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது என சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜயகாந்திற்கு ரூ. 2.5 கோடி கடன்-சொத்து மதிப்பு ரூ. 19. 88 கோடி

  • அவரிடம் ரூ. 19. 88 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளும், அவரது மனைவி பிரேமலதாவிடம் ரூ. 6.57 கோடி மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.

  • அவர் கையிருப்பும், வங்கியிலும் மொத்தம் ரூ. 7 லட்சத்து 56 ஆயிரத்து 90-ம், பிரேமலதாவிடம் ரூ. 6 லட்சமும் உள்ளது.

  • 2009-10-ம் ஆண்டில் விஜயகாந்த் ரூ. 53. 77 லட்சத்திற்கும், அவரது மனைவி ரூ. 12.82 லட்சத்திற்கும் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

  • விஜயகாந்த் ரூ. 7.5 கோடியும், பிரேமலதா ரூ. 1.72 கோடியும் அரசுக்கு வருமான வரி மற்றும் சொத்து வரியில் பாக்கிவைத்துள்ளனர். இது தொடர்பான அவர்கள் மேல்முறையீடும் நிலுவையில் உள்ளது.

  • விஜயகாந்திற்கு ரூ. 2.5 கோடி கடன் உள்ளது.

Thursday, March 24, 2011

தேர்தல் அறிக்கை.. ஆஇதிமுக Vs திமுக

திமுக விற்கு எதிராக கார சாரா ஆஇதிமுக தேர்தல் அறிக்கை அதை படித்து விட்டு என்னக்கு சிரிப்பு தான் வருகிறது... புலி ஐ பார்த்து புனை சுடு போட்ட கதையாக.....அடிக்கு போட்டியாக வெளியுட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை, இந்த மானம்கெட்ட அரசியல்வடிகளுக்கு எங்கு இருந்துதான் தமிழக மீனவர்கள் மீதும், இலங்கை அகதிகள் மீதும் அக்கறை தேர்தல் நேரத்தில் மட்டும் வருகிறது என்று தெரிய வில்லை....
குடிகாரன் பேசு விடுஞ்ச போச்சு என்பது போலே இவர்கள் தேர்தல் அறிக்கை, தேர்தல் முடிந்த உடன் காற்றில் பறக்கும் பட்டம் போல் ஆகி விடும்,
இந்த அறிக்கைகள் வெறும் சாம்பிள் தான்.... இன்னும் மெயின் picture வரல.....

*

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசம்.
*

வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.
*

+1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்கப்படும். அதேபோல அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
*

தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.
*

58 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கப்படும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களுக்கும் அவர்கள் இலவசமாக பஸ் பயணம் மேற்கொள்ளலாம்.
*

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
*

6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.
*

மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
*

மீனவர்கள் நலனுக்காக கப்பல் பூங்கா அமைக்கப்படும்.
*

மீனவர் குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.
*

தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.
*

இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.
*

தமிழக நதிகளை நீர்வழிச்சாலைகள் மூலம் இணைக்க நடவடிக்கை
*

ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு ரூ. 1.80 லட்சம் மானியமாக அளிக்கப்படும்.
*

கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.

முழு அறிக்கைக்கு thats tamil

Monday, March 21, 2011

எழைகள் உள்ளவரை இலவசங்கள் தொடருமா??? இல்லை இலவசங்கள் தொடரும் வரை எழைகள் இருபார்களா?????

தமிழ்நாடு என்ன இந்தியாவே இவர்கள் கையில் இருந்தால் கண்டிப்பாக ஏழைகளாக தான் இருப்பார்கள்.

பிறகு என்ன மக்களுக்கு இவர்கள் நல்லது செய்கிறன் என்று எல்லாதையும் இவர்கள் விட்டிற்கு கொண்டு சென்றார்கள் என்றால் பிறகு மக்கள் எப்படி சுபிட்சம் அடைவார்கள், மக்கள் நலம் பெருகிரகளோ யிலையோ...இவர்களுக்கு கோடி க்கு மேல் கோடி சேர்த்து கோடிஸ்வரர்கள் அகிகொன்டட தான் இருக்கிறார்கள்.....


எதோ ஒரு படத்தில் ரஜினி சொன்னா மாதிரி.... இவர்களுக்கு வேலை வெட்டி குடுத்தால் சேலை வேஷ்டி க்கு கை ஏந்தி நிற்க வேண்டியது இல்லை, ஐயா தமிழர்கள் உலகத்திற்கு மானம்,மரியாதையை சொல்லி குடுத்தவர்கள்.... இவர்களை மானம் மரியாதையை மறக்க வைத்து இலவசங்களுக்கு (பிச்சை) க்கு கை ஏந்தி நிற்க வைப்பதில் உங்களுக்கு என்ன அவொலோ சந்தோசம்.....

சிறிது நாள்களுக்கு முன்னால் நீங்கள் தான் தமிழகத்தில் படித்தல் மட்டும் போதாது... பகுத்தறிவோடு நடக்க வேண்டும் என்று சொன்னிர்கள்.... இப்பொழுது எப்படி ஐயா எங்கள் தன்மானத்தோடு விளையாட வருகிரிகள்.... எப்படி நீங்கள் எங்களுகு இலவசம் என்று கூறினால் நங்கள் பல்லை காட்டி கொண்டு நீங்கள் போடும் எச்சி துண்டுக்கு வால் அட்டி கொண்டு வந்து விடுவோம் என்று நினைதிர்களா??????

எங்களூக்கு நீங்கள் செய்த துரோகங்களை எப்படி ஐயா மறக்க முடியும்.... நீங்கள் அம்மையார் சோனியாவின் கரங்களை இறுக்கமாக பற்றி கொண்டு... எங்கள் சொந்தங்களை எங்களுது வரி பணம் கொண்டே அழித்ததை எங்களால் எப்படி ஐயா மறக்க முடியும்.....


அந்த நேரத்தில் நீங்கள் அடிய கபட நாடங்கள் என்ன கொஞ்சமா நஞ்சமா..... கொட்டும் மலையில் மனித சங்கலி போராட்டம், உலக வரலாறு லிய முதல் முறையாக காலை உணவிற்கு பின், மதிய உணவிற்கு முன் நடந்த உண்ணாவிரத போராட்டம், அதன் பின் இலங்கயில் இருந்து போர் நிறுத்த அறிக்கை, பின்பு உங்களை வாழ்த்த தயாராக இருந்த பதாதைகள்.... இதற்கு பின் 3 நாட்களில் ஈழத்தில் பல ஆயிர கணக்கில் படுகொலைகளுடன் ஈழ போர் இனித முடிவு அடைந்தது..... தலைய போகும் அவசர காலத்திலும் கூட கடிதம் எழுதுவதையும், தந்தி குடுபத்தையும், மறக்காத நீங்கள், உங்கள் குடும்ப அரசியலுக்காக, மந்திரி பதிவி உங்கள் மகனுக்கு ஒன்று, மருமகனுக்கு ஒன்று, பேரனுக்கு ஒன்று கேட்க மட்டும் டெல்லி க்கு சென்று சாதனை படைத்தவர் அல்லவா நீங்கள்......


எப்படி ஐயா மறக்க முடியும் உங்களுதது சாதனைகளை.......... முத்துகுமரன் வயறு வலியால் இறந்திருப்பான் என்று அவனது மரணத்தை பற்றி பெசியவர்தானே நீங்கள்..... அவனின் மரண சாசனத்தை படித்த பின்பு எந்த தன்மானம் உள்ள தமிழனும் அவாறு கூறி இருக்க முடியாது... தமிழினத்தைய அளித்த பிறகு மொழிக்கு விழா எடுத்த உன்னத தலைவர் அல்லவா நீங்கள்.....

இப்பொழுது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் இலவசங்கள் குடுத்து தான் செய்த தப்புகளை மறைக்க பார்க்கிறார்.... அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களே..... இந்த முறை உங்களுது வாக்கை சரியாக பயன்படுத்துங்கள், தமிழினத்தை அளித்த காங்கிரஸ் கும், அதற்கு அடிவருடியாக இருந்த திமுக விற்கும் சரியான படம் புகுத்துங்கள்.......

நான் இந்த பதிவு எழுத ஆரம்பித்த பொது திமுகவின் இலவச தேர்தல் அறிக்கை பற்றிதான் நினைத்தேன்.. அனால் எழுத ஆரம்பித்த உடன் என்னது மனகுமரல்களை நிறுத்த முடியவில்லை ...... அடுத்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்....

இப்படி மனகுமரல்களை கொட்டி கொண்டு இருக்கும் நான் வேறு யாரும் இல்லை, உங்களுள் ஒருவனாக இருந்து சக இன்ப துன்பகளை சகித்து கொண்டு போகும் சாதாரண சாமானியனாக இருக்கும் உங்களுள் ஒருவன்

Thursday, March 17, 2011

தூய்மையே துள்ளும், வாய்மையே வெல்லும்.........

ஐயா படித்தவர்களே , சான்றோரே, யோசிக்கும் திறன் கொண்டவர்களே.......... தமிழில் நாலு எழுத்து படிக்கச் தெரிந்த அனைவருக்கும், என்னக்கு ஒரு சந்தேகம்........ என்னக்கு இதற்கு அர்த்தம் சொல்லுங்கள்...............

"தூய்மையே துள்ளும், வாய்மையே வெல்லும்"
என்னக்கு சத்தியமா இதுக்கு அர்த்தம் தெரிய வில்லை........ நானும் எப்படி எல்லாமா யோசித்தும் பார்த்து விட்டேன்........... வாய்மையே வெல்லும்.... பல அறிஞர்கள் கூறி விட்டார்கள்.......... அனால் தூய்மையே துள்ளும்.... இதுக்கு என்ன அர்த்தம்னு
எங்க இந்த பொலப்பு கேட்ட அரசியல்வாதிகள் தான் வாய்க்கு வந்ததே எல்லாம் உலருரங்கான உங்களுக்கு எங்கே போச்சு புத்தி.......... இத ஒரு தத்துவமா கார்ல போட்டுகிட்டு ஊரு புல்லா சுத்தி வர்ராங்க.............. எங்க உங்க கிட்ட யாரவது இதற்கு அர்த்தம் கேட்ட உங்களுக்கு சொல்ல தெரியுமா?????

இதுக்கு நம்ம TR பாரவைலிங்க....... அவரது ஒரு கோர்வையா கேட்கிற மாதிரி இருக்கும்....

ஆப்ரிக்கா'ல ஓடுறது காட்டாறு ,
அஞ்சாம பேசுறது இந்த TR......

அத விடுங்க இந்த காகித புலி ஊர் புல்லா தம்பட்டம் அடிகிரதுல அவர யாராலும் மிஞ்ச முடியாது........ அவர் தான் அடுத்த பிரபாகரன், சே குவரோ....... அப்படின்னு அவர அவர சொலிகிறார்..........
இவர் இந்த போரட்டங்களை ஆளுங்கட்சியை விட்டு வெளிய வந்து... அவர்களக்கு எதிராக செய்து இருந்தால் அவரை நம்பி இருப்போம்...... அவர்க்கா குரல் குடுத்து இருப்போம்...... அனால் அவர் ஒரு காகித புலி என்பதை நிமிடடிருக்கு ஒரு முறை நிருபித்து கொண்டு இருக்கிறார்.......... பிறர்க்கு எப்படி அவருக்கு அதரவு தெர்விக்க முடியும்.....

என்னது நண்பன் ஒருவனின் gtalk status தனக்கு திருமா வை போல் ஒரு சந்தர்பவாதி சிலை வைப்பான் என்று தெரிந்து இருந்தால் முத்துகுமரன் கடலில் விழுந்து இறந்து இருப்பான்

அப்போ அப்போ எதாவது மொக்கை சினிமாவில் வந்து தான் பெரிய ____________ என்று காட்டி கொள்பவர்..... ஐயா உங்களுகே வெட்கமாக இல்லை, ஈழ தமிழர்களை வைத்து கேவலமான அரசியல் செய்ய.....
அரசியல் என்ற கேவலமான சாக்கடை இல் நிங்களும் ஒரு பெருசாளி என்று காட்டி விட்டிர்கள்.....




ஐயா பெரியார்களே...... இங்கு ஆ. ராஜா வை பற்றியோ அல்லது திருமா வை பற்றியோ பேசினால் அது அவர்கள் சார்ந்து இருக்கும் சமுகத்தை பற்றி பேசுவதாக நினைத்து கொள்ள வேண்டாம்..... நாங்கள் சாடுவது தனி மனிதர்களை மட்டுமே........

நான் வேறு யாரும் அல்ல...... உங்களுள் ஒருவனாக உங்கள் சுக துக்களை பார்த்து கொண்டும், அனுபவித்து கொண்டும் செல்லும் ஒரு சாதாரண மனிதனாக உங்களுள் வாழும் உங்களுள் ஒருவன்

Friday, March 11, 2011

தி மோட்டர் சைக்கிள் டைரீஸ் (The Motor cycle Diaries)


சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்..போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம். சே எனும் அற்புத போராளியின் புகழ் அவர் வாழ்ந்த நிலங்களை தாண்டி உலகின் திசையெங்கும் அறியப்பட்ட காரணம் அந்த மகத்தான் மனிதரின் வாழ்க்கையும் அதில் படிந்திருக்கும் ரத்தக் கறையுடனான உண்மைகளும்தான். லத்தீன் அமெரிக்க புரட்சியில் க்யூபாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையை உருவாக்க உருதுணையாக சே ஏந்திய துப்பாக்கியின் தோட்டாக்கள் புரட்சியின் வடிவமாக அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது.



எர்னெஸ்டோ 'சே' குவேரா - மனிதர்களை பெரும் துயர்களிலிருந்து விடுவிக்க ஆசைப்பட்ட ஒரு மனிதன் – அவனது வாழ்க்கை – அவனது தேடல் – அவனின் பயணம் இதுவே வால்டர் சாலஸ் இயக்கியிருக்கும் the Motorcycle Diaries' திரைக்கதையின் ஒற்றைவரி. உலகின் முதன்மையான புரட்சியாளரின் ஆரம்பக் கட்ட நாள்களின் தொகுப்பே இத்திரைப்படம். உண்மையே புனைவாக்கம் செய்யப்பட்டு நிழலாக மட்டுமல்லாமல் திரையின் நிஜமாக காலத்தின் கரங்களில் ஆழமான பதிவு செய்யப்பட்டிருக்கும் திரைக்காவியம் இது எனலாம்.


1951 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்ட எர்னஸ்டோ குவேரா (ப்யூசர் எனும் செல்லப் பெயர் உண்டு) பயோ கெமிஸ்டான தன் நண்பன் ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு (ப்யூசரை விட நான்கைந்து வயது மூத்தவன்) புதிய நாடுகளை, வெவ்வேறு ஊர்களை, அதன் மனிதர்களை, குறிப்பாக பெண்களை பார்த்து பழக ஆசைப்பட்டு தங்களது அதர பழசான ஆனால் நல்ல நிலையில் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிளில் (அதன் பெயர் மைட்டி ஒன்) லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே நீண்ட நெடிய பயணத்தை துவக்குகிறார்கள். நண்பனின் பொறுப்பில் எர்னஸ்டோவை ஒப்படைத்த அவனின் குடும்பம் புன்னகையுடனும் கொஞ்சம் கண்ணீருடனும் அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்புகிறது.

துள்ளலுடன் துவங்கிய அவர்களின் அதி உற்சாகப் பயணம் மலைப்பாதைகளையும் ஆற்றோடைகளையும் நீண்ட புறவழிச் சாலைகளிலும் தங்கு தடையின்றி வழுக்கியோடியது. மைட்டி ஒன்னும் மின்னலெனவே அவர்களுக்காய் பறந்தது. இளமையின் உச்சத்திலும் சாகச மனோபாவத்திலும் திளைத்துக் கிடக்கும் அவ்விருவரும் பெரும் மனஉத்வேகத்துடன் தங்களது பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஓரிரு முறை அவர்கள் வண்டி மணற்பாதையில் சறுக்கி விழுந்தாலும் கலங்காமல் சரி செய்து பயணத்தை தொடர்கிறார்கள்.

தோழர்கள் இருவரும் தேர்ந்தெடுத்திருந்த வழி அபாயகரமானது மிகவும் கடினமானது. ஆனால் ஒரு போதும் அடைய முடியாதது அன்று. வடக்கு திசையில் ஆண்டெஸ் மலையை தாண்டி, சிலியின் கரைகளில் பயணித்து, அடகாமா பாலைவனத்தை கடந்து பெருவிற்குள் நுழைந்து இறுதியில் வெனின்சுலாவை அடைய வேண்டும், ஆல்பர்டோவின் சபதம் ஏப்ரல் இரண்டாம் தேதிக்குள் தனது முப்பதாவது வயது தொடக்கத்தில், தோழன் எர்னஸ்டோவுடன் அங்கு சென்று சேர்வதுதான். ஆனால் அவர்களின் அருமை நண்பன் மைட்டி ஒன் அடிக்கடி ரிப்பேர் ஆனதால் அவர்களின் பயணம் தடைப்பட்டு தடைப்பட்டு ஜூலை மாதம்தான் சென்றடைகிறார்கள். இடைப்பட்ட காலகட்டங்களில் அவர்களின் அனுபவங்களே எர்னஸ்டோவின் மொழியில் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களின் அவனது டைரிக் குறிப்புக்களாக பதிவாகிறது. இந்தப் பயணம்தான் ப்யூசர் புரட்சியாளராக மாறியதற்கான முதல் விதையை போட்டது பயணத்தின் ஆரம்பத்தில் எர்னஸ்டோ தன்னுடைய தோழி சின்சினாவை சந்திக்க விரும்பி அவளின் ஊருக்குச் செல்கிறான். சூதாட்டம், ஆட்டம் பாட்டத்திற்கு பிறகு அவர்கள் சிறுது நேரம் பேசுகிறார்கள். வெகு நாள் கழித்து அவனை சந்தித்த அவள் அவனுடைய பயணத்தை வாழ்த்தி முத்தமிட்டு பலமுத்தமிட்டு கொஞ்சி அதன் பின் அடுத்த நாள் அவன் கிளம்பும் தருவாயில் கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை அவனிடம் தந்து எக்காரணத்தை கொண்டும் செலவு செய்துவிடக்கூடாதென்ற அன்பான பந்தனையுடன் அவனுக்கு அளிக்கிறாள். புன்னகையுடன் விடைபெற்று பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். பல சோதனைகள் வரும்போதெலாம் அப்பணத்தை ஆல்பர்டோ கேட்கிறான், எவ்வளவு கெஞ்சியும் தர மறுக்கிறான் எர்னெஸ்டோ. ஒரு கட்டத்தில் தீவிர ஆஸ்மாவால் பாதிக்கப்பட்ட தன்னை காப்பாற்றிக்கொள்ளக் கூட அவன் அப்பணத்தை பயன்படுத்தவில்லை. மன உறுதியும் நேர்மையும் ஒருங்கே உள்ள் குணம் கொண்டவனாய் நம்முன் எர்னெஸ்டோ காட்சிப்படுத்தப்படுகிறான்.


ஆரம்பத்தில் கோலகலமாக தொடங்கிய அவர்களின் பயணம் பல அலைக்கழிப்புக்களுக்கு உள்ளாகிறது. தென் அமெரிக்காவின் பரந்த நிலப்பரப்புக் காட்சிகள் பார்க்க சலிக்காதவை. தெள்ளந்தெளிவான வானம், மிதந்து செல்லும் மேகம் அதன் கீழே மலையின் ஹேர்பின் வளைவுகளிலும், நீண்ட ஒற்றையடிப் பாதைகளிலும், யாருமற்ற பனிக் காடுகளிலும், மூடுபனி மலைச்சாலைகளில் கடுமையான பனி மழையின் நடுக்கத்திலும் சோர்வடையாத மனதுடன் அவர்கள் வெற்றி வீரர்களாக பயணம் செய்கிறார்கள். கொடுமை என்னவெனில் எர்னெஸ்டோ வாழ்நாள் முழுவதும் கடுமையான ஆஸ்மாவினால் பாதிக்கப்பட்டவன். அவனுக்கு வீசிங் வந்துவிட்டால் தாங்கமுடியாத மூச்சிரைப்பால் மிகவும் சிரமப்படுவான். ஒரு குழந்தையைப் போல அவனைத் தாங்கும் நண்பனான ஆல்பர்ட்டோ உடனே டெக்காட்ரானை அவனுக்கு எவ்வாறோ கிடைக்கச் செய்து அவன் சுவாசத்தை அவனுக்கு மீட்டுத் தருவான். எத்தகைய நோய்மையினாலும் உடல் சோர்வினாலும் அவர்களின் பயணம் நிற்கவில்லை. மாறாக இன்னும் தீவிரத்துடன் தொடர்ந்தது.

எர்னெஸ்டோ அடிக்கடி தன் டைரியை எடுத்து அன்று தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை அழகான குறிப்புக்களாக எழுதிக்கொண்டிருப்பான். ஒரு மலைப்பாதையில் சுரங்கத்தில் வேலை செய்வதற்காக கட்டாயப்படுத்தப்படும் தம்பதியினரை சந்திக்கிறான். ஏன் அவர்கள் கட்டாயத்துக்குட்படுத்தப்படுகிறார்கள் என்ற கேள்வி அவன் மனதில் எழுகிறது. கேட்பதற்கு யாருமில்லை எனவே தன் டைரியில் பதிவு செய்கிறான், தன் இதயத்தின் அடி ஆழத்திலும் கூட...

இப்படி வெவ்வேறு மனிதர்களின் பலவகைப்பட்ட துன்பங்களையும் அல்லல்களையும் நேரிடையாக பார்த்த எர்னெஸ்டோவின் மனம் கலங்குகிறது. என்ன வாழ்க்கை எங்கே இது நம்மை இட்டுச் செல்கிறது வாழ்வின் ஆரம்பம் என்ன முடிவு என்ன போன்ற பெரும் கேள்விகள் அவன் இளம் மனதை ஆட்டிப்படைக்கிறது. வறுமை, பசி, பிணி என்று வாழ்க்கை மரணத்தின் வெவ்வேறு உருக்களாய் எங்கும் படிந்து கிடப்பதை மனித நேயக் கண்ணோடு பார்க்கிறான். ஒரு இடத்தில் மருத்துவ வசதியற்ற முதிய பெண்மணிக்கு மனம் முழுக்க தீரா வலியுடன் அவளைப் பிழைக்க வைக்க முடியாதெனத் தெரிந்தும் வைத்தியம் செய்கிறான். வலியாவது குறையும் என்பதே அவன் நோக்கம்.. அவளுக்கான பிரார்த்தனையாய் அன்றைய டைரியின் பக்கங்கள் அவனின் கண்ணீரால் நனைகிறது.

எர்னெஸ்டோவைப் பற்றி குறிப்பிட வேண்டிய பெரும்குணங்களில் ஒன்று அவன் மிகவும் நேர்மையானவன். உண்மையை அதன் ஒளியுடன் மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவன். ஆல்பர்ட்டோவோ அவ்வப்போது புளுகு மூட்டைகளை அள்ளி விடுபவன். இருவருக்கும் இதனால் அவ்வப்போது நடக்கும் சிறு சிறு சண்டைகளின் இறுதியில் வெல்பவன் எர்னெஸ்டோதான். தங்களுக்கு மிகவும் உதவிய டாக்டர் ஒருவர் எழுதிய புதினம் வாசிக்கக் கிடைத்தபோது மிகவும் நேர்மையுடன் அது எழுத்தே அல்ல என்பதை விமர்சிக்கிறான் எர்னெஸ்டோ...அவனை எரித்துவிடும்படியாக பார்த்த ஆல்பர்ட்டோவைத் தவிர்த்து...நல்ல வேளையாக அந்த நேர்மையான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் அந்த டாக்டருக்கு இருந்தது. அவர் தான் இவர்களை பெருவிற்கு வழிநடத்திச் சென்றவர்.

பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் நடந்த நிகழ்ச்சியொன்று தான் அவர்களின் இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. அங்கிருந்த தொழுநோயாளிகள் ஆஸ்பத்திரியில் சில வாரங்கள் தொண்டு செய்தது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழுநோயாளிகள் என்பவர்கள் எப்படி சமூகத்தினரால் புறக்கணிக்க்பட்டு சரியான மருத்துவ வசதிகள் இன்றி வீதிகளில் கைவிடப்பட்ட மனிதர்களாய் இன்றும் நாம் காண்கிறோம். மனித் நேயமும் தாயன்பும் கொண்ட எர்னெஸ்டோ தொழுநோயாளிகளிடம் எவ்வித அறுவறுப்பும் இல்லாமல் க்ளவுஸ் என்ற உறையைக் கூட அணியாமல் அவர்களுக்கு எவ்வகையிலும் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களோடு கலந்து பழகி மருத்துவம் செய்கிறான்.

சிறுகச் சிறுக அவர்களின் அன்பையும் நம்பிக்கையும் பெற்று தீர்க்க முடியாத வியாதிகளின் தீவிரத்தன்மையை குறைத்து, சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்து, மனம் உடைந்து போயிருக்கும் நோயாளிகளுக்கு ஆறுதல் மட்டுமே தந்து கொண்டிருக்காமல் அவர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி தானும் அவர்களுடன் விளையாடி, ஆடிப் பாடி அவர்களுக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கித் தருகிறான். அவனின் உள் அன்பினாலும் நிபந்தனையற்ற பிரியத்தாலும் அந்நோயாளிகள் அவனை நடமாடும் தெய்வமாகவே பார்க்கிறார்கள். ஆனால் எர்னெஸ்டோவிற்கு புகழ்ச்சியோ வழிபடல்களோ ஒருபோதும் பிடிப்பதில்லை. கருணை மனம் கொண்ட அவன் விரும்புவதெல்லாம் வலியினின்றும் வேதனையினின்றும் மனிதர்களைக் காப்பாற்ற உருவாக்கப் படவேண்டிய ஒரு சக்தி. அல்லது கருவி .அது எதுவாக இருக்கும் என்பதை தீவிரமாக யோசித்திக் கொண்டிருந்தான்.

தொழுந்நோயாளிகாளின் காப்பகத்திலிருந்து கிளம்பக்கூடிய நாள் நெருங்கியது. அனைவரும் தங்கள் கண்ணீரை மறைத்து இவர்க்ளுக்கு ப்ரியாவிடை தருகிறார்கள். எர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் கனத்த மனத்துடன் புறப்பட்ட புள்ளிக்கு மீண்டும் திரும்புகிறார்கள். இப்போது அவர்கள் வாழ்வின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு கட்டாய நிலையில் இருக்கிறார்கள். ஆல்பர்ட்டோ ப்ராக்டிகல் வாழ்க்கையில் ஊறியிருப்பவன், அவன் செல்லும் திசை எல்லாரும் செல்லக்கூடியதுதான். ஒவ்வொரு மனிதனும் காலம் காலமாக செய்து கொண்டிருப்பதுதான் அது மிகச் சாதாரண வழியேதானாலும் நம்மைப் போல அவனுக்கும் வேறு வழியில்லை – அவ்வழியிலேயே செல்லத் தலைப்படுகிறான். புறப்படும்முன் எர்னெஸ்டோவிடம் ஒரு உண்மையை சொல்லிவிட்டுச் செல்கிறான். தன்னுடைய பிறந்த தேதி ஏப்ரல் இரண்டு அல்ல...ஒரு இலக்கை நிர்ணயித்து பயணித்தால் பயணம் வேகமாகும் என்பதற்காகவே அவ்வாறு பொய் கூறினேன் என்று சொல்லிய போது புன்னகையுடன் எர்னெஸ்டோ அது தனக்கு தெரியும் என்கிறான். மென்சோகத்துடன் எர்னெஸ்டோவிடம் கைகுலுக்கி விடைபெறுகிறான் ஆல்பர்ட்டோ.




ஆனால் எர்னெஸ்டோ சே குவேரா தேர்ந்தெடுத்த பாதை யாரும் செல்ல அஞ்சுவது. மிகவும் நேசிக்கும் மனிதர்களின் துயர் துடைக்க ஆயுதம் எடுத்து தோட்டாக்களின் இடைவெளிகளில் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளக் கூடிய அபாயகரமான புரட்சிக்கானது. மிக மெல்லிய மனதும் அதே சமயம் எஃகு போல் உறுதியான் நெஞ்சுரமும் கொண்ட சே தேர்தெடுத்த பாதை போராட்டக் களமானது.

உலகில் இரண்டே விதமான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். முதல் வகையினர் ஆல்பர்ட்டோ போன்றவர்கள். இவர்களே பெரும்பான்மையினர். ஆயிரத்தில், கோடியில் ஒருவர் தான் மற்றவர்களுக்காக வாழ்பவர்கள், பிற உயிர்க்காக தன்னுயிரை விடுபவர்கள். என்றும் எல்லா காலங்களிலும் எல்லார் மனதிலும் வாழும் சே போன்றவர்களே அம்மாமனிதர்கள்...அவர்களின் ரத்தம் பருகித்தான் இந்த நிலம் ஈரப்பதத்துடன் இருக்கிறது. அதில் நின்று கொண்டிருப்பது நாமும்தான்...

இப்படத்தின் தாக்கம் என்பது சில நாள்கள் மட்டுமன்று ஒரு வாழ்நாளுக்கானது...


சேவின் டைரிக் குறிப்பிலிருந்து சில துளிகள்:


"என்னுடைய கனவு காணும் மனதை நிறைவு செய்ய இயலாதவனாய் நான் அமைதி இழந்தவனாகிறேன். மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள், தேர்வுகள் ஆகியவை எனக்கு சலிப்பை ஏற்படுத்தின.

மனம் போன போக்கில் அமெர்க்க கண்டம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட எங்கள் பயணம் நான் உணர்ந்ததை விட அதிகமாகவே என்னை மாற்றிவிட்டது.

எங்கள் மனங்களிலு கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும் அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாரவே உள்ளோம்.

மிருக பலத்திற்கும் அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.

மக்கள் என்னை 'சே' என்று அழைப்பதை நான் மிகவ்ம் விரும்புகிறேன்.

பலர் என்னை ஒரு வீரசாகசச் செயல்களில் நாட்டமுள்ளவன் எனக் கூறலாம். நான் அத்தகையவந்தான். ஆனால் கொஞ்சம் வேறுபட்டவன், என்னுடைய கொள்கைக்காகவும் நம்பிக்கைக்காகவும் உயிரையும் தருபவர்களில் நானும் ஒருவன்."

சில பின் குறிப்புகள் :

"சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்

க்யூபா, பொலிவியா, காங்கோ இன்னும் அடக்குமுறை எந்தெந்த இடங்களில் கொடிகட்டிப் பறந்ததோ ஏகாதிக்பத்யம் தன் கொடுங்கரங்களை மக்கள் மீதி பதித்திருந்ததோ அங்கே ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் சேயை ஈடுபடச் செய்தது. அவரின் மனித நேயம் பரந்துபட்டது, எல்லைக்ளுக்கு உட்பட்டதில்லை. எல்லை என்பது நிலங்களில்தான் மனங்களில் இல்லை என்பதை தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்தவர் சே.

படத்தில் சே குவேராவாக நடித்திருந்த கேல் கார்சியா பெர்னல் (Gael García Bernal) தன் அருமையான நடிப்பாலும் வசீகரத்தாலும் பார்வையாளர்களை கட்டிப் போட்டுவிடுகிறார். ஆல்பர்டோவாக நடித்தவர் ரோட்ரிகோ.

பயணத்தின் போது எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் முதலில் புத்தகம் ஒன்றைத்தான் எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

சே குவேரா க்யூபாவின் அதிபரான ஃபிடல் காஸ்ரோவிற்கு நெருங்கிய நண்பர். சே குவேரா ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் பிற போராளிகளும் தங்கள் உயிரைப் பயணம் வைத்து க்யூபப் போராட்டத்தில் வெற்றியடைந்தனர்.
சே குவேரா – சில குறிப்புகள்

• பிறப்பு – 1929 ஜூன் மாதம் 14ம் தேதி.

• 1945 – மருத்துவ மேற்படிப்பு

• 1950 – மோட்டார்சைக்கிளில் 3000 மைல் தூரம் அர்ஜெண்டைனா முழுவதும் சுற்றுப்பயணம் ஆரம்பம்

• 1952 – தனது ப்ரியமான நண்பன் ஆல்பர்டோ கிரனட்டொவுடன் பெரு, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு கடும் பயணம் செய்தார். தொழுநோயாளிகள் குடியிருப்பில் சேவை செய்து அங்கு பணிபுரிந்தார்.

• 1953 ஜூன் 12 – மருத்துவர் பட்டம் பெற்றார்

• 1953 ஜூலை 6, லத்தீன் அமெரிக்க பயணத்தை தொடங்குகிறார்.

• பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு ராணுவத்தால் சே கைது செய்யப்பட்டு பொலிவிய ராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னும் இடத்தில் அக்டோபர் 9ம் தேதி 1967 ஆண்டு சே கொல்லப்பட்டார்.

Thursday, March 03, 2011

browsing center செல்பவர்களே உஷார்..............

நேற்று ஒரு முக்கியமான வேலையாக browsing center செல்ல வேண்டியது இருந்தது.... எப்பொழுதும் என்னது இணைய வேலைகள் அனைத்தும் அலுவகத்தில் அல்லது என்னது கைபெசியுள் செய்து விடுவேன்..... அனால் நேற்று ஒரு முக்கியமான வேலையாக browsing center செல்ல வேண்டியது இருந்தது.....

அங்கு சென்று என்னக்கு என்று ஒரு கணினி பெற்று கொண்டு..... system ah re-boot பண்ணின உடன்..... ஒரு pop-up error msg display அச்சு..... எதாவது சாதாரண error msg-ah இருந்குமுனு பார்த்த... அது ஒரு trial peiod expire அன keylogger software... அப்படியே என்னக்கு தொக்கி வாரி பொதுச்சு...... அந்த browsing center owner-ah குப்பிட்டு திட்டி.... அந்த software-ai uninstall பண்ண சொன்னன்..... பிறகு வேறு ஒரு சிஸ்டம் எடுத்து அதில் அந்த சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிருக்க என்று பார்த்து விட்டு என்னது வேலைகளை சீக்கிரமாக முடித்து விட்டு வந்தன்....

keylogger என்ன அவொலோ பயப்பட வேண்டிய மென்பொருள் என்று தோன்றுகிறதா?????? ஆமாம் கண்டிப்பாக பயப்பட வேண்டியது தான்.... என் என்றால் நீங்கள் அடிக்குகும் ஒவ்வொரு keystroke ம பதிவு செய்யப்படும்... உங்களுது திரையுள் தெரியும் காட்சிகள் சில நேரங்கலக்கு ஒரு முறை screen shot எடுத்து கொள்ளப்படும்..... இந்த தகவல்கள் அனைத்தும் அந்த மென்பொருளை இன்ஸ்டால் பன்னிவர் மினஞ்சளுக்கு தானாக சென்று விடும்..... என்னவே நீங்கள் என்னதான் உசாராக இருந்து உங்கள் browser history, cookies, temporary files delete பண்ணினாலும்... நீங்கள் பதிந்த ஒவ்வொரு keystroke உம அவனது மினஞ்சளுக்கு சென்று விடும்.....

for.ex நீங்கள் ஒரு browser-ai open செய்த உடன் நீங்கள் தட்டுச்சு செய்வது www.gmail.com அதன் பிறகு உங்களுது username and password type செய்விர்கள்.... இந்த தகவல் அவனுக்கு (hacker) எப்படி செல்லும் என்றால் நீங்கள் type செய்த www.gmail.com manithan passss என்று செல்லும், அப்டி என்றால் முதலில் உள்ளது url அடுத்தது username அதன் பின் உள்ளது password என்று சிறு குழந்தைக்கு கூட தெரியும்.....

இது போன்ற browsing center owner தான் செய்ய வேண்டும் என்று இல்லை... உன்னை போல், என்னை போல் ஒருவன் கூட இதை செய்யலாம்,
free keylogger என்று google தட்டுச்சு செய்தால் போதும் அது இது போன்ற பல மென்பொருள்களை காண்பிக்கும்..... நமக்கு தேவை ஆனதை எடுத்து பயன் படுத்தி கொள்ளலாம்.....

நான் கல்லூரில் படிக்கும் பொது இது போன்ற பல தகிடு தத்தம் செய்தவன்..... இப்பொழுது நான் செல்லும் இடத்தில எனக்கே ஒருவன் செய்ய முயன்று இருக்கிறான்.... அது நானாக இருக்க போய் சமாளித்து கொண்டன்...... பிரரராக இருந்தால் கண்டிப்பாக அவன் (hacker) விரித்த மாயவலையில் சிக்கி இருபிர்கள்.......

hacker என்பவன் உங்களுது username and password-ai திருடி வைத்து கொண்டு..... உங்களுது account-il இருந்து தனக்கு தேவை ஆனதை சாதித்து கொள்பவன்......
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் பலவித இணையங்களில் கணக்கு வைத்து இருந்தாலும் அதன் password ஒன்றாக அல்லது
similar அக தான் வைத்து இருப்போம், இப்பொழுது நான் உங்களுது எதோ ஒரு கணக்கின் username and password கண்டு பிடித்து விட்டேன் என்றால் உங்களுது மிதி account களை hack செய்வது எளிது......
உங்கள் password, hacker ஹலால் எவருல்லாம் திருட படுகிறது என்று பார்போம்...
  1. direct access method
  2. indirect access method
direct access method உங்கள் கணினியை பயன்படுத்த முடிந்தால்.... இது போன்ற keylogger intall பண்ண முடியும், அல்லது pendrive முலம் உங்களுது computer இல் இருக்கும் cookies, and temporary files ஐ திருடி அதில் இருந்து நீங்கள் கணினியில் சேமித்து வைத்து உள்ள தகவல் களை எளிதாக எடுத்து கொள்ள முடியும்..... அல்லது எதாவது trojan virus-ai உங்கள் கணினியில் புகுத்தி தனக்கு தேவை அனைத்தை அவனால் எடுத்து கொள்ள முடியும், இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுது கணினியாக இருந்தால் அதில் உங்களை தவிர வேறு யாரும் எந்த மென்பொருளையும் இன்ஸ்டால் செய்ய விடாமல் user கு limited access குடுக்கலாம், browsing center selpavaraka இருந்தால் முதலில் control panel சென்று என்னனே software install பண்ணி இருகிறாக்கள் என்று பாருங்கள், keyboard connector-il எதாவது தேவை இல்லாமல் connect ஆகி இருகிறதா என்று பாருங்கள்..... browse செய்து முடித்த உடன்..... temp files, history, cookies எல்லாம் அழித்து விடுங்கள்....... indirect access method உங்கள் system -ஐ hacker ல பயன்படுத்த முடியாத பொது........ அவர்கள் போலியான வலைபகங்களை உருவாகி அதை உங்களுக்கு அனுப்புவார்கள்... நீங்கள் அதை உண்மை என்று நம்பி அதில் உங்களுது விவரங்களை பதிவு செய்த உடன்... அது hacker-in ஈமெயில் கு தானாக செல்லும் படி வடிவு அமைத்து இருப்பார்கள்..... அல்லது மெயில்-இல் எதாவது url குடுத்து அதில் இருந்து லாகின் செய்ய சொன்னால் செய்யாதிர்கள்... அது உண்மையான பக்கமா இல்லை போலியானதா என்று கண்டு அறிய.... உங்களுது உண்மையான username குடுங்கள் அனால் தப்பான password குடுங்கள்..... அது உள்ள சென்று அடுத்த விவரங்கள் கேட்டால் அது phisisng site என்று தெரிந்து கொள்ளுங்கள், அப்படி இல்லாமல் நீங்கள் குடுத்த password தவறு என்று வந்தால் அது சரியான சைட் என்று தெரிந்து கொள்ளுங்கள்

முன் பின் அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து மெயில் வந்தால் அதனுடன் இருக்கும் attachment ஐ திறந்து பார்க்க வேண்டாம், அதை அப்படிய அழித்து விடுங்கள்.....

இணணயத்தில் உங்களுது personal identity குடுகாதிர்கள்...... அது எதவாது தியவர்கள் கைளில் கிடைத்தால் அதை வைத்து என்ன வேண்டுமினாலும் செய்து கொள்ளலாம்.....

இதன் பிறகு குறிப்பாக wi-fi il browse செய்பவர்களாக இருந்தால் குடுத்தால் கவனம் தேவை..... நீங்கள் browse செய்யும் பொது உங்களுது தவல்கள் அனைத்தும் சர்வர் ஐ அடைந்து தான் செல்லும், அந்த வழியில் ஒரு கத்து குட்டி hacker குட sniffing செய்து உங்களது தகவல்களை திருட முடியும்.....
இதில் குறிப்பித்து உள்ள விசயங்கள் பெசுவடுறகு தனி தனியாக ஒரு ப்ளாக் போட வேண்டியது இருக்கும் , அதனால் இந்த பதிவை இதன் உடன் முடித்து கொளுகிரன்..... உங்களுக்கு எப்பதோ என்ன தகவல் தேவை பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.... உங்களுகு உதவ காத்து இருக்கிறான்......

நான் வேறு யாரும் அல்ல ...... உங்களின் ஒருவன் தான்...........