Thursday, April 28, 2011

வேடிக்கையான வேலை வேண்டாம் கடிதங்கள்.....

resign என்று கூகிள் இல் தேடிய போது கிடைத்த சில வேடிக்கையான, விதியாசமான வேலை வேண்டாம் கடிதங்கள், சில உங்களின் பார்வைக்கு.....

ஒரு பிளாக்கர்-இன் resignation letter

ஒரு விமானியின் முயற்சி,

web design இல் வேலை செய்பவரின் முயற்சி


கேக்கில் resignation letter



அமெரிக்க ஜனாதிபதின் resignation letter



yahoo resignation letter generator



சில வேடிக்கையான resignation letter




இதை எல்லாம் விட நமவர்கள் அனுப்பும் சில கடிதங்கள்,

From
நான் தான்
உன் துறை தான்
உன் கம்பெனி தான்

To
நீ தான்
உன் துறை தான்

ஐயா,
நான் இனிமேல பணிக்கு வரமாட்டேன், உன்னால் முடிந்ததை செய்து கொள்

இப்படிக்கு

நான் தான்

Monday, April 25, 2011

காமம் மா அல்லது இனகவர்சியா????


அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே....
நம்ம ஊரு இப்போ ரொம்ப கேட்டுபோசுனே
அதே சொன்னா வெட்க கேடு
சொல்லடா மானே கேடு.....

இந்த நில்லைமையுள் தான் நானும் இந்த பதிவு எழுதுகிறேன்.... எனது ஊர் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். கல்லூரி படிக்கும் காலகட்டத்தில் duck-in செய்து shoe அணித்து கொண்து விட்டை விட்டு வெளியுள் வந்தால் தெருவில் உள்ளவர்களில் நான்கு பேர்களாவது துறை இப்படி tip-top ஆ dress பண்ணிகித்து எங்கு கிளம்பிதிங்க என்று கேட்பார்கள்....... எனது ஊர் ஒன்றும் மிகவும் பின்தங்கிய கிராமம் என்று கூர வில்லை.. அனால் வட இந்திய மோகமோ இல்லை மேற்கு உலக நாகரிகமோ அவல்லோவாக பரவாத, ஒரு சாதாரண தென் இந்திய ஊராக தான் இருந்து வந்தது.

இந்த தேர்தல் மற்றும் தமிழ் புததாணட்டு விடுமுறையை ஒட்டி நான் ஊருக்கு சென்று இருந்தேன், அப்பொழுது என்னக்கு ஒரு printout எடுக்க வேண்டும் என்பதால் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஒரு புது browsing center க்கு சென்று எடுத்து விடலாம் என்று சென்று இருந்தன், அங்கு பார்த்த காட்சிகள் சென்னையுள் பார்த்து இருந்தால் சரி பிஞ்சுல பழுத்தது என்று கூறி இருப்பேன், அல்லது திருநெல்வேலில் பார்த்து இருந்தால் சே, திருநெல்வேலியும் இப்பொழுது சென்னை போல் கேட்டு விட்டதே என்று நினைத்து இருப்பேன்.. இருந்தாலும் மனதிற்குள் ஒரு சின்ன வலி இருந்திருக்கும், அனால் நான் பார்த்தது எனது சொந்து ஊரில், மனது கேட்க வில்லை,


நான் பார்த்தது ஒரு பையனும் ஒரு பெண்ணும் browsing center cabin குள் அந்த பையன்னின் கைகள் அந்த பெண்ணின் மிது ஊர்ந்து கொண்து இருந்தது, என்னது கோபதிற்கு காரணம், அந்த பெண் பத்தாவது வது படித்து கொண்து இருபாலா என்பது கூட சந்தகமே.... அவள் ஒரு சிறுமி, அந்த சிறுவனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் 18 வாது இருக்குமா என்பது கூட சந்தகமே.....

இதை பார்த்த உடன் கூப்பிட்டு திட்டி விடலாமா??? அல்லது browsing center owner ஐ கூப்பிட்டு புகார் செயாலமா??? காவல் துறைக்கு தகவல் குடுக்கலாமா என்று பலவாறாக யோசித்து கொண்டு இருந்தாலும், ஒரு பக்கம் அந்த பெண்ணை பற்றி நினைக்கவும் தவறவில்லை இந்த முன்றில் எந்த முடிவு எடுத்தாலும், அந்த பெண்ணின் பெயர் அந்த பகுதயுள் பலமாக பாதிக்க படும், அவளுக்கு வேறு பெயர் வைத்து இந்த சமுகம் அழைக்கும்.... அவளுது தாய், தந்தையர் நிலைமை என்ன வாகும், சமுகத்தில் அவர்களுது பெயரும் அல்லவா பாதிக்க படும், அவளுடன் கூட பிறந்த திருமணம் ஆகாத அக்கா, தங்கையர் நிலைமை என்ன வாக்கும், அல்லது இதை பார்த்தும் பார்க்காது போல சென்று விடலாமா???? என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருக்கும் போதே அவர்கள் கிளம்பி விட்டார்கள்.....

நல்லது, என்று நானும் 15 நிமடத்தில் கிளம்பி விட்டேன், மொத்தமாக நான் அங்கு இருந்த நேரமும் அவோளோதன், சரி அந்த பெண்ணிருக்கும் இந்த விடயம் பிடிக்கவில்லை போல் இருக்கிறது அதனல்தான் உடனே கிளம்பி விட்டால் போலலே இருக்கிறது, என்று அவர்கள் கிழே இறங்கிய சில நிமிடங்களில் நானும் இறங்கி விட்டேன்... அந்த சிறுமியை காணவில்லை, அனால் அவள் கூடே வந்தவன் மட்டும் இருந்து அங்கு தண்ணீர் குடித்து விட்டு அவன் browse செய்தற்காக பணம் குடுத்தான், அப்பொழுதுதான் என்னக்கு தெரிந்தது அவர்கள் சல்லாபம் முன்று அரை மணி நேரம் நடந்து இருந்தது என்று.... இப்பொழுது நினைக்கிறன், அவளுகாக, அவள் குடும்பதிற்காக நான் பார்த்த கரிசனம் தவறு என்று.... வெளிய வந்தும் பார்த்தேன், அந்த சிறுமியை காணவில்லை, நல்ல பெண் போல முதலில் வெளிய சென்று மறைந்து விட்டாள்,

என் இந்த சிறுமி இப்படி நடந்து கொண்டாள்???? அதற்கு காரணம் என்ன???? இது காமம் மா இல்லை இன கவர்ச்சியால் உந்தபட்ட பாலியல் உணர்வா?? கண்டிப்பாக இதை நான் கேடு கேட்ட காதல் என்று மற்றும் சொல்ல மாட்டன், இது கண்டிப்பாக இந்த வயதில் வரும் இன கவர்ச்சியை தவிர வேறு ஒன்றும் இல்லை,

இதற்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டால் அனைவரும் புற காரணத்தை மட்டுமே சொல்லுவர், சினிமா, மேற்கு உலக நாகரிகம், கலாச்சார சிர்கழிவு, அனால் யாரும் தன் மேல் இருக்கும் தவறை சுட்டிகாட்டி கொள்ளவோ, அல்லது ஏற்கவோ தயாராக இல்லை, அனால் இதை போன்ற பெண்கள் இப்படி கேட்டு போவதற்கு, அவர்கள் வீட்டில் இருபவர்களும் ஒரு காரணம் என்ற நான் சொல்லுவேன்.. ஒரு வயதிருக்கு வந்த பெண்ணோ, அண்ணோ விட்டில் இருக்கும் பொழுது, அவர்களுக்கு மதிப்பு அளித்து, அவர்கள் உடன் நமது நேரத்தை செலவழிக்க வேண்டும், அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்கை ப்ரசெனைகளின் தீர்வுகளுக்கு வழி கூற வேண்டும், அவர்களுக்கு எல்லா விததிலும் நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,

teen-age இல் அவர்கள் முன்னால் இருக்கும் ப்ரசெனைகளை நாம் தான் அவர்களுக்கு பக்கத்தில் இருந்து தைரியம் குடுக்க வேண்டும் அதற்கு தீர்வு காண உதவ வேண்டும். அனால் இப்பொழுது இருக்கும் அவசர கால கதியில் நாம் வீட்டில் இருபவர்களோடு கலந்து பேசுவதற்காக நாம் செலவிடும் நேரம் மிக குறைவு.... அவர்கள் மேல் நமது அக்கறை, அவர்களுடன் பேசுவது என்பது மிக குறைவு, என்னவே தான் அவர்கள் அவர்களுது சுக துக்கத்தை பகிருந்து கொள்ள, நண்பர்களை தேடு கிறார்கள், அதவும் எதிர் பாலினமாக இருந்தால் மிகவும் எளிதாக ஒன்றிட முடியும், அவர்களுக்கும் அது எதோ ஒரு வகையுள் சயுகரியமாக, more confort ah feel பன்னுரங்க.... இந்த நேரத்தில் சினிமா, மேற்கு உலக கலாச்சாரம், ஆண், பெண் நட்பு என்று அவர்கள் எல்கை விரிகிறது..... காதல் என்ற இன கவர்ச்சியால் அவர்கள் தப்பு செய்யவும் அது தூண்டுகிறது,

பெறோரின் கவன குறைவால் ஏற்பட்டு கொண்டு இருக்கும் இன்னொரு முக்கியமான் விஷயம். இப்பொழுது பரவலாக எல்லா செய்தி தாளிலும், ஐந்து வயது சிறுமி கற்பழித்து கொலை, 8 வயது சிறுமி கொன்ற காமகொடூரன்... என்று பல செய்திகள் நாம் அனைவரும் படித்த விசயங்கள் தான்... அனால் இதில் கவனிக்க வேண்டிய விசயம், இவ்வாறு கற்பழிக்க படும் சிறுமிகள் யாவரும், அவர்களோடு நன்கு பழகும், driver, watchmen, பக்கத்துக்கு வீட்டு மாமா, என் சில சமயம் வாத்தியார்களும், விளையாட்டு ஆசிரியர் களும் தான், நாம் நமது மகளை சிறுமியாக, குழந்தையாக தான் பார்க்கிறோம், அனால் இந்த கேடுகெட்ட சமுகம், அவளை ஒரு Sex-Toy அக தான் பார்கிறார்கள்,

தனது மகளை பிறர் பெண் கேட்டு வரும்போது தான், பல தந்தைகளுக்கு தனது மகள் திருமண வயதை நெருங்கி விட்டால், அவளக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தோணும், அது வரை அவளை குழந்தை யாக தான் பார்த்து இருப்பார்கள், அனால் ஐயா உங்களுது கண்ணனுக்கு வேண்டும் என்றால் அவள் ஒரு சிறுமியாக தெரியலாம், அனால் இப்பொழுது பெண்ண்கள் சிறு வயதில், வயதுக்கு மிறிய வளர்ச்சியை கொண்டு இருகின்றர்னர்.... அது இந்த சமுகத்துக்கு ஒரு சிறுமியாக தெரிய்வது இல்லை என்பது தான் வெட்க கேடு....

தயவு செய்து உங்களுது மகள்க்கு good touch and bad touch சொல்லி குடுங்கள்..... பாலியல் கல்வி சொல்லி குடுக்கலாம் ஒன்றும் தவறு இல்லை..... நாம் இது எல்லாம் அசிங்கம், இதை பற்றி எனது பெண்ணிடம் நானே எப்படி பேசுவது என்று யோசிகதிர்கள்... அது அவர்கள் வாழ்கை வே மாற்றி அமைக்க உதவும்.....

இனிமேல அவது உங்களுது குடம்பதிடம் நேரம் ஓதுங்கள், அவர்களோடு மானம் விட்டு பேசுங்கள், வாரத்தில் ஒரு நாலாவது வெளியுள் கூட்டி செலுங்கள், இது உங்களின் குழந்தைக்கு உங்கள் மீது மரியாதையை, அன்பு வைபதற்கு ஒரு காரணமாக அமையும், அவர்கள் முன்பு சொன்னது போல் அது போன்ற தீய பழக்க வழகங்கள் இருக்காது, மற்றும் நீங்கள் உங்கள் குழந்தையோடு நேரம் செலவளிப்பதால் அவர்களை வேறு யாருடனும் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது, என்னவே இரண்டவதாக சொன்னதிற்கும் சாத்திய கூறுகள் குறையும்,

நான் வேறு யாரும் அல்ல, உங்களோடு ஒருவனாக, இந்த சமுக அவலங்களை பார்த்தும், கண்டித்தும்,, பல நேரங்கில் ஒரு பர்வையாலனாக செல்லும்.. உங்களுள் ஒருவன்

Monday, April 18, 2011

தமிழ் நாட்டில் 49 செய்த புரட்சி...

2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளித்த வாக்காளர்கள் ஒரு சாதனை படைத்தது இருக்கிறார்கள்..... இது வரை பதிவு ஆனா தமிழக சட்டமன்ற தேர்தல்களில் இந்த முறை தான் அதிகமான அளவு 49 க்கு விழுந்து இருகின்றன (24,824)

அனால் தமிழகத்தின் மொத்த வாக்கு களோடு(3,67,53,114) ஒப்பித்து பார்கையுள் இது குறையு தான்..... அனால் கடந்த காலங்களில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இது இமாலைய வாக்கு உயர்வு..... இது எல்லா அரசியல் கட்சிக்கும் ஒரு எச்சரிக்கை மணி... தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும், ஆதிமுக இல்லை என்றால் திமுக, திமுக இல்லை என்றால் ஆதிமுக தான் வோட்டு, என்ற எழுதபடாத சட்டம், முடிவு க்கு வரும் காலம், ஒன்றும் தொலைவில் இல்லை என்பதை சுட்டி காட்டும் சாவு மணியாக தான் நான் இதை பார்கிறேன்.
இதற்கு முந்திய தேர்தல்களில் ஆதிமுக வின் அடக்கு முறை, அடாவடி தனம், ஆகியவற்றிக்கு சாவு மணி அடிக்க அப்பொழுதே குறுஞ்செய்தி அனுப்பியவர்கள், இப்பொழுது இரண்டு கட்சி களும் சரி இல்லாத நிலையுள், ஒரு வலுவான முன்றாவது ஆணி அமையுமா என்று இருந்த ஏக்கமும், கடைசி நேரத்தில் தவிடு போடி ஆனதில், பலருக்கும் மனகஷ்டம், அந்த நேரத்தில் இரு கட்சி களுக்கும் வாக்கு அள்ளிக்க விருப்பம் இல்ல்லாமல் எதாவது ஒரு சுயட்சை க்கு வாக்கு அளித்து அது ஒன்றும்கிற்கும் உதவாமல் போவதற்கு பதில், யாருக்கும் வாக்கு அள்ளிக்க விருப்பம் இல்லை என்றும் பதிவும் இந்த முறை 49 க்கு மக்கள் மத்தியுள் நல்ல செல்வாக்கு இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது...

ஆனாலும் இந்த முறை பல இடங்களில் 49 க்கு வோட்டு போட பலர் அனுமதிக்க படவில்லை... 49 க்கு வோட்டு போடுவதில் வாக்காளர்களின் சுதந்திரம் காக்க படுவது இல்லை, நான் 49 க்கு தான் வோட்டு போடுகிறேன் என்பது அந்த வாக்கு சவாடியுள் இருக்கும் அனைவர்க்கும் தெரிந்து விடும், இதனால் தமக்கு எதுவம் பிரெச்சனை வந்து விடுமோ என்று, பலர் எதோ ஒரு சின்னத்திற்கு குத்தி இருகிறனர், அதையும் மீறி வந்ததது வரத்தும் என்று வாக்கு அளித்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 24,824

49 க்கு வோட்டு அளிபவர்கள் சுதந்திரம் மட்டும் பாதுகாக்க பட்டால், வோட்டு எணிக்கை எங்கோ சென்று இருக்கும், பார்க்கலாம், மே 13 தேர்தல் முடிவு....... தமிழகத்தில் ஒரு அரசியல் பரட்சி ஏற்படுமா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்....

சிறு குறிப்பு:

  • சென்னை மாவட்டம் அதிக பட்சமாக 3,407 வோட்டும்
  • கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாவது பட்சமாகக் 3,061 வோட்டும்
  • கன்னியாகுமரி இல் குறைந்த patchamaka 170 வோட்டுகளும் பதிவு அகிஉள்ளன
  • கூடலூர் தொகுதியுள் அதிகபட்சமாக 787 வோட்டும்
  • சிங்கலூர் தொகுதியுள் இரண்டாவது பட்சமாகக் 646 வோட்டும்
  • நெய்வேலி, ரிஷிவந்தியம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை 49 க்கு ஒரு வோட்டு கூட பதியபடவில்லை

மேலும் தகவல்களுக்கு election commission இந்த தகவலை உங்களுக்கு வழங்கி இருப்பவன், நான் வேறு யாரும் அல்ல... நான் உங்களுள் ஒருவன்

Tuesday, April 12, 2011

தேர்தல் முடியும் வரை அணைத்து கட்சி களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

தேர்தல் தலைமை அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டு உள்ள விதிமுறைகள் அனைத்து கட்சிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அப்டி தவறினால் கடுமையான சட்டம் பாயும்.... அனால் அய்யா தேர்தல் அதிகாரி...... எந்த அளவுக்கு நீங்க கடினமாக இருபிங்க??? எந்த கட்சி உடனும் சேராமல், நடுநிலையாக நீங்கள் அவது இருபிரிகலா?? இல்லை எதாவது ஒரு கட்சி இடம் பணம் பெற்று கொண்டு அவர்களுக்கு அதரவாக இருபிரிகலா????

சென்னை-இல் ஏற்கணவ ரவுடிகள் வந்து தங்கி இருப்பாடாக ஒரு தகவல், அங்கு அங்கு வாக்குக்கு பணம் குடுக்க தான் செய்கிறார்கள், பணமாகவோ, அல்லது வேறு வடிவிலோ வாக்களர்களுக்கு சென்று சேர வேண்டியது சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது, ஆனாலும் தேர்தல் ஆணையம், 10 ரூபாய் பிடித்து கொண்டு 100 ரூபாய் விடுவிடுவதாக ஒரு தகவுலும் இருக்கிறது.... இதில் எது உண்மை??? எது பொய் என்று தெரியவில்லை.... இதை பார்க்கும் பொது எனக்கு எம்ஜிஆர் இன் பாடல் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது,

"திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடி கொண்டே இருக்கிறது,
அதை
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கிட்ட இருக்கிறது".....

எப்படியோ தேர்தல் ஆணையம் பணநாயகத்தை அழித்து நல்ல தேர்தல் நடத்தினால் சரிதான்,

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் கால விதிமுறைகள்:
  1. தேர்தலையொட்டி யாரும் பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தவும் கூடாது, அவற்றில் கலந்து கொள்ளவும் கூடாது. தேர்தல் தொடர்பான விஷயங்களை விளம்பரம் செய்யவோ, தொலைக்காட்சியில் ஒளிபரப்பவோ கூடாது. இதில் தேர்தல் தொடர்பான அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் அடக்கம்.
  2. வாக்காளர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி, நாடகம், பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவோ, ஏற்பாடு செய்யவோ கூடாது. இதனை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தேர்தல் பணி புரிவதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்களும், தொகுதியில் வாக்காளர்கள் அல்லாதவர்களும் இன்று மாலை 5 மணிக்கு பிறகு அத்தொகுதியைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
  3. திருமண மண்டபம், சமூகநலக் கூடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் வெளியாட்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று சோதனை செய்து தொகுதிக்குள் வெளியாட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்படும். தொகுதியில் இல்லாத வெளியாட்களின் வாகன போக்குவரத்தை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு தொகுதி எல்லையிலும் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  4. வேட்பாளர்களின் பிரசாரத்திற்காக அளிக்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 5 மணிக்கு பிறகு செல்லாததாகிவிடும். தேர்தல் நாளில் வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்காக, அவரது சொந்த உபயோகத்திற்கு ஒரு வாகன அனுமதியும், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு ஒரு வாகன அனுமதியும், கட்சி தொண்டர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு ஒரு வாகன அனுமதியும் தனித்தனியாக வழங்கப்படும்.
  5. தேர்தல் நாளில் அரசியல் காரணங்களுக்காக மேற்கண்ட அனுமதி பெற்ற 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்தலாம். தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாகன அனுமதி, தேர்தல் நாளில் செல்லுபடியாகாது. அதே நேரத்தில் பொது மக்கள் தங்களது சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு தடை கிடையாது.
  6. தேர்தல் நாளன்று வாக்காளர்களை வாகனங்களின் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்வதும், ஓட்டு போட்டவுடன் மீண்டும் கொண்டுபோய் வீட்டில் விடுவதும் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 133-ன்படி தண்டனைக்குரிய ஊழல் குற்றமாகும்.
  7. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ இரண்டு நபர்களுடன் தற்காலிக அலுவலகத்தை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த இருவரும் அங்கு தேவையில்லாமல் கூட்டம் கூட்ட அனுமதி கிடையாது. இங்கிருந்து தின்பண்டங்கள் எதுவும் வினியோகிக்கக் கூடாது. இந்த அலுவலகத்தில் இருக்கும் இருவரும் அந்த வாக்குச்சாவடியைச் சேர்ந்த வாக்காளர்களாக இருக்க வேண்டும். சரிபார்த்தலுக்காக இருவரும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குற்ற பின்னணி இருப்பவர்கள் இந்த அலுவலகங்களில் இருக்க அனுமதி கிடையாது.
  8. 11/04/20011 மாலை 5 மணியில் இருந்து 13ம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிடவும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிற்கு கடந்த 4ம் தேதியில் இருந்து மே மாதம் 10ம் தேதி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது
    .
  9. கடந்த காலத்தில் சில வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள `குளோஸ் பட்டனை' அழுத்தவில்லை. அதனால் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் கூறப்பட்டதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது
  10. அதன்படி வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும் அனைத்து தேர்தல் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள `குளோஸ் பட்டனை' அழுத்திவிட்டு பின்னர் மூடிவிட வேண்டும். அதுபோல ஓட்டுப்பதிவின்போது வாக்காளர்கள் அனைவரும் கையெழுத்திடும் 17 ஏ பதிவேட்டில், தேர்தல் முடிந்ததும் கடைசி கையெழுத்திற்கு கீழே கோடிட்டு, கடைசி பதிவின் வரிசை எண்ணைக் குறிப்பிட்டு அனைத்து ஏஜெண்டுகளிடமும் கையெழுத்து வாங்க வேண்டும். அதுபோல தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை 17 சி படிவத்தில் எழுதி, தேர்தல் ஏஜெண்டுகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அதன் நகலை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த தேர்தலில் பணம் வழங்கியது தெரிய வந்தால், தேர்தலை ஒத்தி வைக்க படும் என்று கூறி உள்ளனர்.... இந்த தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படுமா என்று ஆவலோடு காத்து கொண்டு இருக்கும் உங்களுள் ஒருவன்.......

Thursday, April 07, 2011

இந்த தேர்தலில் என்ன செய்ய போறிங்க?????

ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் சட்டமன்ற தேர்தல், நாடளுமன்ற தேர்தல், உள்ளாட்சி அமைப்பு காண தேர்தல், இடை தேர்தல், என பல தேர்தல்கள் நமக்கு வந்து வந்து போனாலும், நாம் என்ன பெரிதாக செய்து விட்டோம், இந்த தேர்தல்களில், அல்லது நம்மால் தேர்ந்து எடுக்க பட்டதாக அறிவிக்க பட வேட்பாளர்கள் தான் என்ன செய்து விட்டார்கள்?????

அவன் 100 ரூபாய்க்கு உழல் செய்தானா தான் 150 க்கு உழல் செய்ய வேண்டும் என்று இருமாபுடனும், முன்னவனை என்ன சொல்லி கைது செய்யலாம், அவன் போட்ட திட்டங்களை தடை செய்து விட்டு, முதல் முன்று வருடம் பதவி, அதிகாரம், எல்லாம் என அனுபவித்துவிட்டு, எங்கே அடுத்த முறை தான் வர முடியோதோ என்ற பயத்தில் மக்களுக்கு ஏனோ தானோ என்று தான் கூறிய வாக்கு உறுதிகளை பாதியாவது நிறைவேர்வுவர்கள்..
எதிர்கட்சியாக இருக்கும் அரசியல்வாதி, தான் செய்த உழல்களில் இருந்து எப்படி தப்பிப்பது, எவனுக்கு எவ்ளோ லஞ்சம் குடுக்க வேண்டும், ஆளும் கட்சியில் இருப்பவன் போடும் வழக்குகளை இல் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து கொண்டு, அதற்கான வழக்கு, விசாரணைகளில் காலம் சென்று விடும், இல்லையல் தான் நாடளுமன்றம் சென்றால் முதல் அமைச்சராக தான் வருவேன், இல்லையேல் புறக்கணிப்பு தான்.... தனக்கு அடுத்த பதவியில் இருக்கும் நபரை எதிர் கட்சி தலைவராக உட்கார வைத்து விட்டு... தான் எதாவது கொடநாடு அல்லது வேறு எதாவது ஒய்யு எடுக்கும் ஸ்தலத்துக்கு சென்று விடுவது....... அப்போ அப்போ தனது சொந்த தொலைகட்சியுள் எப்போதோ எடுத்த பேட்டி, அல்லது எதாவது உப்பு சப்பு இல்லாத அறிக்கை குடுத்து விட்டு தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்று காட்டி கொள்ளுவார்கள்..........

தேர்தலுக்கு ஆறு மாதங்கள் வரை அவர்கள் எங்கு இருப்பார்கள் என்ற தெரியாது, அனால் கடைசி ஆறு மாதங்கள் அவர்கள் போடும் கூட்டம் எத்தனை, அறிக்கைகள் எவ்ளோ, அந்த நேரத்தில் எவனாவது ஒருவன் இறந்து விட குடாது, அவன் தியாகி அக்க படுவான், சாலையில் கல் தடுக்கி கிழே விழுந்தவன் வரை, எல்லா கட்சி உம் அவன் குடும்பதுக்கு நிவாரணம் குடக்கும், கொஞ்சம் அதிகமாக போனால், உண்ணாவிரதம், சாலை மறியல், வெகு சன உடங்கங்களால் பிரதான செய்தி அக படும்,

மீனவர் பாண்டியனும், ஜெயக்குமாரும் இலங்கை கடற்படையால் ஒரு தெரு நாயை கொல்வது போல் கொன்றதுக்கு அதவும் தேர்தல் நேரம் என்பதால் எல்லா அரசியல் கட்சிகளும், பாஜகா, காங்கிரஸ் தேமுதிகா தவிர நாளைக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்கிற எண்ணம் இருக்கும் நடிகர் விஜய் உட்பட அனைவரும் இறந்த மீனவர்கள் விட்டிற்கு சென்றார்கள், ஆர்பாட்டம், பேரணி, ஊர்வலம், உண்ணாவிரதம், என்ன என்ன செய்ய முடியுமோ அவைகள் அனைதும் செய்தார்கள், இறந்தவர்கள் வீட்டிற்கு நிவாரண தொகை அரசாங்கம் குடுபடர்க்கு முன்பே இவர்கள் குடுத்தார்கள்..... நான் உங்கள் வீட்டு பிள்ளை.... உங்கள் வோட்டு எனகு தான் என்று அடர்வும் கேட்டார்கள், நானும் ஒ௦ரு உணவிரத போராட்டத்தில் கலந்து கொண்டேன்.......
என்னக்கு இருக்கும் ஆதங்கம் என்ன வென்றால்...... இதற்கு மு இறந்தவருக்கு குறிபிட்ட சில தமில் இன ஆர்வலர்கள் தவிர வேறு யாரும் அதை பற்றி வாய் கூட திறக்கவில்லை....... அவர்கள் யாரும் மனிதர்கள் இல்லையா???? அப்பொழுது சிங்கள கடற்படை கொலைகள் செய்யாத நலவர்களாக இருந்தார்களா????? தேர்தல் வந்தால் மட்டும் இவர்கள் எப்படி உங்கள் கண்களில் படுகிறார்கள் என்று தெரிய வில்லை ????

சரி இதை எல்லாம் விடுங்க..... இந்த தேர்தலில் நீங்க என்ன செய்ய போறீங்க ???? எவன் ஜெவித்து வந்தாலும் நமக்கு ஒன்னும் பு_____ போவது இல்லை...... பிறகு என்ன அவனுகள பத்தி பேசிக்கிட்டு இருகிறது ப்ரியோகனம் இலிங்க..... நாம என்ன செய்ய போறோம்?? இப்போ அதுதான் கேள்வி..... நிறைய பேருக்கு ரெண்டு கொல்லி வாய் பிசாசுல எதுக்கு ஒட்டு போடலமனு எண்ணம் இருக்கும்...... மஞ்சள் துண்டுக்க இல்ல பச்சை புடவைக ன்னு......... இப்போ ஆட்சி ல இருக்கிற அந்த மஞ்ச துண்டு கிழவன்.... பண்ணின துரோகம் நாம மனசுல இருக்கும், அதுனால அவனுக்கு ஒட்டு போட வேண்டாம் என்று இருக்கலாம், சரி கிழவன் தான் சரி இல்ல, பச்சை புடவைக்க போயிறலாம் ன்னு பார்த்த..... அந்த அம்மா ஆட்சி காலத்துல நடந்த அரசாஜகம் அளவ இல்லாம இருந்துச்சு..... எல்லோரையும் நசுக்கி, அவிங்க போட்ட எஸ்மா, டெஸ்மா எல்லாம் மறக்க குடிய்தா.........தமிழகம முழுவதும் கஞ்சி தொட்டி திறந்த பெருமை இந்த அம்மாவையே சாரும்......

சரி அம்மா வும் வேண்டாம் அய்யாவும் வேண்டும் என்று முன்றாவது ஒரு பலம் மிக்க கட்சி இருகிறதா என்று பார்த்தல் அதவும் இல்லை...... சரி எதாவது சுயட்சை க்கு வோட்டு போடலாம்னு பார்த்த இந்த பண நாயகத்தில்..... அதுக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது..... எங்காவது சுயட்சை வெற்றி பெற்றால் நன்மைக்க............. அனால் அப்படி வெற்றி பெறுபவனும் ஆளும் கட்சி யால் வாங்க படுவதற்கு வாய்புகள் மிக அதிகம்.............

நமது வோட்டு ஜெவிக்காத சுயட்சைகு போடுவது செல்லாத ஒட்டு போல தான்....... சரி சுயட்சைக்கு வேண்டாம் எந்த அரசியல் நாய்க்கும் வேண்டாம், நாமா வோட்டே போடவேண்டாம் என்று இருந்தால், அங்கேயும் ஒரு பிரச்சன்னை இருக்கிறது.... நம்ம கள்ள ஒட்டு கண்ணாயிரம் போட்டுவிடுவான்.......... என்ன எங்க செத்து போன தாதா ஒட்டும் அவன் தான் போட்டனா பார்த்து கொங்க.....
நாமா இந்த தேர்தல யாரா சேவிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பதை விட, யாரு தோற்றால் நமக்கு நல்லது என்று சிந்திக்க வைக்கும் சீமான் என்னை கவர்ந்தவர், இந்த தேர்தலில் யாரு ஜெவிதலும் நமக்கு ஒன்றும் செய்துவிட போவதில்லை, யாரு ஜெவிதல்லும் சீமான் இருக்க போவது என்னோமோ ஜெயில் தான்...


தமிழகத்தை மதிக்காத காங்கிரஸ், நதி நீரில் இருந்து மின்சாரம் வரை, ஈழ தமிழர்கள் முதல் தமிழ்நாடு மீனவர்கள் வரை, இவர்களது துரோகம் நமக்கு கண் முன் இருக்கிறது, முதலில் இவர்களை தோற்கடிப்போம், பின்பு திமுக, ஆஇதிமுக என்ன அனைவரையும் தோற்கடித்து விட்டு..... தமிழர்களை தமிழர்களே ஆளும் நாளுக்கும், தனி ஈழம் அமையும் என்று தினம் தினம் எதிர்பர்போடு இருக்கும் உங்களுள் ஒருவன்