Wednesday, November 21, 2012

ஜாதிகளிடம் இருந்த ஒழிய வேண்டும்.


நெடும் நாட்களாக சமுதாயம் பற்றி பதிவு எழுதவ இல்லை. சரி சமுதாயத்தில் பிரச்சினைகளே இல்லை என்று சொல்ல முடியாது.. இப்பொழுது எனக்கு நேரமும் கிடைத்து விட்டது. எழுதுவதற்கு டாப்பிக் கும் கிடைத்து விட்டது...

கடந்த மாதம் ஜாதிகள் மாதம் என்று சொன்னால் மிகை ஆகாது.. அந்த அளவுக்கு ஜாதிகள், மதம். என்று எங்கு பார்த்தாலும் இந்த பிரச்சினை தான். சரி அதை நமது பாணியில் கொஞ்சம் அலசலாம்.

  • தருமபுரி ஜாதி திருமணம் •
  • Splendor IYER •
  • விஸ்வரூபம் / துப்பாக்கி சர்ச்சை •
  • சின்மயி / பிராமணாள் காப்பே.

1. இந்த நூற்றாண்டில் நடந்த மிக பெரிய கோரம், இலங்கைக்கு அடுத்தது. இலங்கையில் கூட சிங்களன், தமிழன் என்று தான் வேறுபாடு. ஆனால் இங்கு ஜாதியின் பெயரில் இவ்ளோ நாட்களாக சகோதர்களாக ஒன்றாக ஒரே கோவிலுக்கு ஒன்றாக சென்றவர்கள், ஒரு காதல திருமணம், அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு, சில கிராமங்களை முழுதுமாக எரித்து அவர்களை பொருளாதார அடிபடையில் பின்னுக்கு தள்ளி, அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தனர்.

தமிழகத்தில் பெரியார் உட்பட அனைவரும் கலப்பு திருமணம், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை என்று எத்தனை இயங்கங்கள் வந்தாலும், போராட்டம் செய்தாலும் இது போன்ற சில அயோக்கிய தனங்கள் அரங்கேறிகொண்ட் தான் இருக்கின்றன. ட்விட்டரில் ஒரு நண்பர் ஒரு ட்வீட் போட்டு இருந்தார், “ஒரு தமிழன் ஒரு தமிழச்சியை கட்டுவதில் என்னையா கலப்பு திருமணம்.” கலப்பு திருமணம் என்ற பேச்சில் கூட இரண்டு ஜாதிகள் என்று வந்து விடுகிறது. அதற்கும் ஒரு படி மேல் போய் அவர் கூரிய வசனம் சக்தி வாய்ந்தகவே நான் கருதுகிறேன்.

2. ஒரு இரு சக்கர வாகனத்தின் விளம்பரம். இணையம் முழவதும் தீ போல பரவியது. அந்த விளம்பரத்தின் கான்செப்ட் என்று பார்த்தால், அந்த வாகனமும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராகக் மாறி விட்டது என்று தான் அவர்கள் கூற வந்தது. ஆனால் அவர்கள் அதுக்காக பயன்படுத்தியது ஒரு ஜாதியின் பெயர், அங்கு தான் சர்ச்சைய வந்தது.

இணையத்தில் உள்ள பேச்சு உரிமை, கருத்து சுதந்திரம் தான் இதற்கு வித்துதிட்டது. இணையத்தில் நமது சகதோரர்கள் மற்றும் தோழர்கள். குடுத்த tweet, status, mention இணையத்தில் பெரும் புரட்சி போல் பரவி, இரண்டு நாட்களில் அந்த விளம்பரம் நிக்க பட்டது, தமிழகம் தவிர பிற மாநிலத்தில் அங்கு உள்ள உயர் ஜாதியின் பெயரால் தான் அந்த விளம்பரம் இன்று வரை அப்படியே தான் இருக்கிறது. தமிழகத்தில் பெரியாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

3. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவணம் ஒரு வீடியோ காட்சியை youtube இல் வெளியீடு செய்தது. அதில் நபிகள் நாயகம் பற்றி சில்ல தவறான கருத்துகள், சில தவறான செய்திகள் அதில் இடம் பெற்றது. அதில் இருந்தது கொதித்து போன நமது முஸ்லிம் நண்பர்கள் போராட்டதில் இறங்கினர், அது வன்முறை கலந்த போராட்டமாக தான் இருந்தது, ஆனால் தருமபுரி போல் அல்ல.

நமது இந்திய கலாச்சாரத்தில் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்று காந்தி காலத்தில் இருந்தது அந்த கருத்தை இந்தியர்கள் மனதில் திணித்து விட்டார்கள். அதன் வெளிப்பாடு முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்று எல்லாரும் நினைக்கும் நிலை வந்து விட்டது. அதைய நமது இந்திய சினிமாவும், தமிழ் சினிமாவும் தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம் என்று சொல்ல ஆரம்பித்தது விட்டார்கள்.

இப்பொழுது தான் நமது முஸ்லிம் நண்பர்கள் முழித்துக் கொண்டு இனி தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக கட்டினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்று முடிவு செய்து கொண்டனர், அப்பொழுது தான் நமது கமலின் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி வருவது போல் டிரைலர் அமைந்ததால் அந்த படத்தை முஸ்லிம்களுக்கு போட்டு காட்டிய பிறக்கு திரை இட வேண்டும் என்றனர். துப்பாக்கியும் அதே தான்,

நமது கமலின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், முஸ்லிம் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது, தீவிரவாதிகள் பலே பேர் முஸ்லிம் களாக இருக்கிறார்கள்.

தசாவதாரம் படத்தில் பல்ராம் நாய்டு கூறுவார் ஓஒ!!! முஸ்லிம் அப்போ எல்லாரும் terrorist எல்லாத்தையும் விசாரணை செய்ய வேண்டும், ஆனால் அதே படத்தில் கலிபுல்லா கான், முஸ்லிம் மிகவும் நல்லவர். உன்னை போல் ஓருவன் படத்தில் தீவிரவாதிகளை கொல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பொது ஜனம், The Common Man (கமல்) ஒரு முஸ்லிம். கடைசி கட்டத்தில் அவர்களை என்கௌண்டேர் செய்யும் இரண்டு போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் முஸ்லிம். ஆனால் விஜயின் துப்பாக்கி படத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் போல் காட்டி இருப்பார்கள் அங்கு தான் பிரச்சினை. படத்தில் விஜயின் நண்பர் சத்யன் கேரக்டர் ஒரு முஸ்லிமாக இருந்தால் கண்டிபாக்க எந்த பிரச்சினை உம் வந்து இருக்காது.

நாம் அனைவரும் ஆயுதம் எடுதவனை திவிரவாதி என்கிறோம். மக்களே சற்று சிந்தித்து பாருங்கள். அவன் ஆயுதம் எடுபதற்க்கு யார் காரணம், அவனுக்கு யார் முதலில் ஆயுதம் குடுதார்கள் என்று பார்த்தால் யார் உண்மையுள் தீவிரவாதி என்று தெரிந்து விடும்.

4. சின்மயி, தமிழகத்தில் இருக்கும் ஒரு செல்ல குரல் தேவதை. அவளின் குரல் வளதிருக்கு தமிழகம் மட்டும் அல்ல தமிழ் பேசும் அணைத்து நாட்களிலும் அவர்க்கு விசிறிகள் இருக்கிறார்கள், நானும் ஓருவன் என்று கூட கூறலாம்.

இணையத்தில் சில நாட்கள் / மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு ட்வீட் செய்து இருந்தார். “மீனவர்கள் மீன்களை கொல்லுகிறார்கள்” அப்படி என்றால் சிங்களவர்கள் நமது மீனவர்களை கொன்றால் அது தவறு இல்லையா ?????? என்று அந்த ட்வீட் மருவி மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் கொதித்து போன நமது நண்பர்கள் சிலர் அவரை வசை பாடி விட்டனர். அதை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து Cyber Crime இல் குடுத்து விட்டார்.

இங்கு தான் பிரச்சினை ஆரம்பித்தது. oru Famous Personality கம்பலின்ட் குடுத்த உடன் செயல் பட்ட நமது காவல் துறை, என் ஒரு பொது மக்கள் கம்பலின்ட் குடுத்தால் அதை மதிக்க கூட மாட்டுகிறார்கள். Cyber police இடம் இது போன்ற கம்பலின்ட் சில ஆயிரம் கணக்கில் இருக்கின்றேன, ஆனால் அதுக்கு எல்லாம் முக்கியத்துவம் குடுக்காமல் சின்மயி போன்ற பிரபலங்கள் குடுத்த உடன் அக்கறை காட்டுவது ஏன்?????

என் என்றால் அவரின் ஜாதி, அதிகாரவர்கத்தில் அவரின் ஜாதிக்கு இருக்கும் செல்வாக்கு தான் காரணம்,

மேலும் இந்த விவகாரம் இன்னொரு கோணத்திலும் பார்க்க படுகிறது அதிகாரவர்கதிர்க்கு எதிர்க்க குரல் கூடுப்பவர்களை முளையிலேயே கில்லுவதர்க்கு இது ஒரு தொடக்கமாகக் இருந்தது விட கூடாது. என்பது தான் இனயத்தில் இருக்கும் பலருக்கு உள்ள ஒரு பயம்.

5. இன்னொரு முக்கியமான இணையத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய இன்னொரு சம்பவம் பிராமணாள் கப்பே. அவளுக்காக அவாள்ள ஏற்படுத்திய ஒரு சிறு ஹோட்டல். இங்கும் வழக்கம் போல் சிலர் எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர. முன்பே கூறியது போல் SPLENDOR ஐயர். அங்கு கூறிய பிரச்சினை வேறு, அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் represent பண்ணியதால் ஏற்பட்ட போராட்டம். ஆனால் இங்கு நடந்து வேறு. எதோ ஒரு ஊரில் ஒரு சமுகத்தை சார்ந்த மக்கள் ஏற்படுத்திய உணவு விடுதி. அதற்க்கு எதிராக போராட்டம் நடத்தியது தவறு.

ட்விட்டர் இல் ஒரு நண்பர் போட்ட ட்வீட் “பிராமணாள் என்று பெயர் வைத்ததால் வந்த போராட்டம், மற்றே ஜாதி பெயரில் தோடங்கபட்டால் இப்படி ஒரு போராட்டம் வந்து இருக்குமா என்பது சந்தேகமே” ஏன் மதுரை தேவர் மெஸ், கோனார் தமிழ் உரை, இம்மொனுவேல் தொலைபேசி நிலையம், நாயர் டீ கடை, செட்டியார் மளிகை கடை என்று இன்னுமும் இருக்க தானே செய்கிறது. அவற்றை எல்லாம் ஏன் எதிர்க்க வில்லை. இது ஒரு வகையனா INFERIORITY COMPLEX என்றே நான் சொல்லுவேன்.

இன்னும் எதன்னை நாட்கள் தான் ஜாதிகளை கட்டிக்கொண்டு அழ போகிறோமே தெரியவில்லை. ஒரு பழமொழி உண்டு “ நான்கு தலைமுறை முன்பு பார்த்தால் நாவிதணும் சொந்தக்காரன் அவான் என்று” முதலில் இந்த ஜாதிகளை, கடவுள்களை ஒழித்தல் போதும் தமிழகத்தில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் அமைதி பூங்காவாக அமையும்.

சரி இந்த ஜாதிகள் அனைத்தையும் ஒழித்து விடலாம். அனைவரும் சமம் என்று ஒரு நிலை வந்தால் உயர் வகுப்பில் இருப்பவன் முன்னறி கொண்டே தான் இருப்பார்கள், ஏழைகள் ஏழைகள்கவே தான் இருப்பார்கள், அதனால் சமுதாயே ஏற்ற தாழ்வு நின்கி விடுமா என்றால் கண்டிப்பாக இல்லை. ரஜினி சொல்லுவது போல் “RICH GET RICHER, POOR GET POORER” அதனால் தான் QUOTA அமைப்பு வேண்டும் என்று சொல்லுவது, பிற்பட்டுத்த வகுப்பு இனரும் வாழ்வில் முன்றே தான் இந்த QUOTA அமைப்பு. அதை சில பேர் தவறு என்று கூறின்னாலும் அந்த அமைப்பு கண்டிப்பாக வேணும் என்பது தான் என்னது கருத்து. நல்லா வசதியான நிலையில் இருக்கும் ஓருவன், அவனது குழந்தைக்கு படிப்பு சம்பந்தமாகக எந்த வசதிகள் வேண்டும் என்றால்லும் அவனுக்கு செய்து கொடுக்க முடியும். ஆனால் ஏழை குடும்பத்தில் பிறந்த ஓருவன் மிகவும் கஷ்ட பட்டு தான் படித்து வருவார்கள், முதலில் கூரிவயன் 1200 KU 1000 எடுப்பதும், கஷ்டபட்ட ஓருவன் 1200 KU 850 எடுப்பதும் ஒன்று தான்.

முதல்வன் படத்தில் அர்ஜுன் கூறுவது போல. “ தமிழகத்தில் உள்ள ஜாதிகள் அனைத்தையும் நிக்கி விட்டு OC, BC, MBC, SC & ST என்று வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். “Reservation Quota” வும் இருக்கும். ஜாதிகளும் இருக்காது.

ஆனால் எனது கருத்து ஜாதிகளை அழிப்பதை விட கடவுள்களை அழித்து விட்டால். எந்த பிரச்சினையும் இருக்காது. பொருளாதார அடிபடையுள் “OC, BC, MBC, SC&ST” என்று பிரித்து வைத்தால் சமுதாய ஏற்ற தாழ்வு நீங்கும் என்பது என்து தாழ்மையான கருத்து.

இந்த பதிவு எழுதி முடிக்கும் பொது தான், பால் தாக்ரே இன் மரணம்,அதை அடுத்து FACEBOOK IL STATUS போட்ட குற்றத்திற்காக கைது செய்ய பட்ட பெண், மற்றும் அந்த STATUS கு லைக் குட்டுத பெண் என்ற இருவர் கைது செய்ய பட்ட சம்பவம், இது குறித்து கூடிய சிக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன். நமது நாட்டில் கருத்து சுதந்திரம் எங்கு போய் கொண்டு இருக்கிறது????? இப்படி உங்களிடம் புலம்பி கொண்டு இருக்கும் நான் வேறு யாரும் இல்லை. உங்களுள் ஒருவனாக இருந்தது இந்த சமுக அவலங்களை பார்த்து உங்களிடம் புலம்பி கொண்டு இருக்கும் ஒரு சாதாரண இந்திய (தமிழ் ) பிரஜை......

Monday, November 12, 2012

பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்



உழைக்கும் வர்க்க மக்களை சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போராட்டம், சமூகத்தின் பல மட்டங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. பேரூந்து வண்டிகளில், ரயிலில் டிக்கட் வாங்காமல் பயணம் செய்வதும் ஒரு வகைப் போராட்டம் தான். பெரும்பான்மையான மக்கள், போக்குவரத்து கட்டண உயர்வை எதிர்த்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. ஆனால்,தமக்குத் தெரிந்த வழியில், அரசுக்கும், முதலாளிகளுக்கும் புரியும் மொழியில் தமது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். நாளாந்தம் விலைவாசி ஏறிக் கொண்டேயிருந்தால், கிடைக்கும் சொற்ப வருமானம் வயிற்றுப்பாட்டுக்கே போதாது என்றால், மக்கள் என்ன செய்வார்கள்? ஐரோப்பாவிலும், பல தீவிர இடதுசாரி இயக்கங்கள், இத்தகைய "நூதனமான" போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றன. சுவீடனில் பயணச்சீட்டு இன்றி பிரயாணம் செய்பவர்களுக்காக ஒரு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது.

ஐரோப்பிய நகரங்களில், விசா எதுவுமின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு உதவிக் கொண்டிருந்த இடதுசாரி ஆர்வலர்கள் தான் அந்தப் போராட்டத்தை நிறுவனமயப் படுத்தினார்கள். சட்டபூர்வ அனுமதி இல்லாத காரணத்தினால், சட்டப்படி வேலை செய்ய முடியாதவர்கள், வறுமை காரணமாக பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது வழக்கம். அப்படிப் பயணம் செய்யும் பொழுது பிடிபட்டால், அதையே சாட்டாக வைத்து நாடுகடத்தி விடுவார்கள். அதனால், சுவீடிஷ் இடதுசாரிகள், சட்டபூர்வ ஆவணங்கள் இன்றி தங்கி இருப்போருக்கு, பயணச் சீட்டுகளை வாங்கிக் கொடுத்து வந்தனர். 2001 ம் ஆண்டு, சுவீடிஷ் அரசு போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தியது. இதனால், சாதாரண சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களும் பாதிக்கப் பட்டனர். மக்களின் அத்தியாவசிய துறையான, பொதுப் போக்குவரத்து துறை, அநியாய கட்டணம் வசூலிக்கின்றது என்று பலர் அதிருப்தியுற்றனர்.

planka.nu என்ற அமைப்பு, பொதுப் போக்குவரத்தில் டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்வோரின் சங்கமாக உருவாக்கப்பட்டது. அந்த சங்கத்தில் யாரும் உறுப்பினராக சேரலாம். ஒவ்வொருவரும் மாதாந்தம் 100 சுவீடிஷ் குரோனர் (அண்ணளவாக 10 யூரோ) சந்தா கட்டி வர வேண்டும். நீங்கள் ஆறு மாத சந்தாவை ஒரே தடவையிலும் செலுத்த விரும்பினால் 500 Kr . (100 குரோனர் கழிவு). தற்காலிகமாக சுவீடனுக்கு வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் என்றால், வாரத்திற்கு 50 குரோனர். நீங்கள் பஸ்ஸில், ரயிலில் பரிசோதகர் பயணச் சீட்டு இன்றி பிரயாணம் செய்து, பரிசோதகரிடம் பிடிபட்டு அபராதம் கட்டினால், அந்தத் தொகையை சங்கம் பொறுப்பெடுத்து கட்டி விடும். சுவீடனில் அபராதத் தொகை 1200 குரோணர்கள் (120 யூரோ) ஆகும்.

சுவீடனில் பயணச் சீட்டு இல்லாமல் பிரயாணம் செய்வது ஒரு கிரிமினல் குற்றமல்ல. அதனால், பொலிஸ் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. பொதுப் போக்குவரத்து சட்டம் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றது. அதனால், சில நாடுகளில் "பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் சங்கம்" கட்டுவது, சாத்தியமிலாமல் போகலாம். இருப்பினும், பிற நாடுகளிலும் இது போன்ற சங்கம் கட்டுவது எப்படி என்ற தகவல் இணையத்தில் கிடைக்கிறது. பல நகரங்களில் மெட்ரோ, ரயில் நிலையங்கள் இலத்திரனியல் கதவுகளால் பூட்டப் பட்டிருந்தாலும், அதற்கூடாக நுழைவது எப்படி என்பதை ஒரு வீடியோ மூலம் காட்டியிருக்கிறார்கள்.

நிச்சயமாக, "பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்" அரசாங்கத்திற்கு உவப்பானதல்ல. பல தடவைகள், அரச அதிகாரிகள் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். ஆனால், இது வரையிலும், அந்த சங்கத்தை சேர்ந்த எவரும் கைது செய்யப் பட்டு, வழக்குத் தொடுக்கப் படவில்லை. போராட்டத்தில் மறைந்திருக்கும் நியாயத் தன்மை காரணமாக, அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசு அஞ்சுகின்றது. இங்கே எழுதப்பட்ட தகவல்கள், சுவீடனில் கூட நிறையப் பேருக்குத் தெரியாது. அதனால், விஷயம் பெரிதாகி ஊடகங்களின் கவனத்தைப் பெற்று, நாட்டில் எல்லோருக்கும் தெரிய வைப்பதை விட, கண்டுகொள்ளாமல் பேசாமல் இருப்பது நல்லது என்றே அரசு நினைக்கின்றது. "சுவீடனில், தனியார் வாகனப் பாவனையை குறைக்க வேண்டும். நாட்டில் கார்கள் அதிகமாகி விட்டதால், சுற்றுச் சூழல் மாசடைகின்றது. அதற்குப் பதிலாக, பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கினால் இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம்." இவ்வாறு அந்த இடதுசாரி ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். "பொது மக்களுக்கான போக்குவரத்து இலவசமாக்கப் பட வேண்டும்" என்ற கோரிக்கையை, பெரும்பாலான மக்கள் வரவேற்கவே செய்வர்.

ஏற்கனவே, சோவியத் யூனியனிலும், முன்னாள் சோஷலிச நாடுகளிலும், பொதுப் போக்குவரத்து ஒன்றில் இலவசமாக, அல்லது மிகவும் குறைந்த கட்டணத்தில் நடத்தப் பட்டு வந்தது. பல தசாப்தங்களாக, அந்த நாடுகளில் போக்குவரத்து கட்டணம் உயரவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், நான் வெள்ளை ரஷ்யா (சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசு) வுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது கூட, தலைநகரான மின்ஸ்க் நகரில், சுரங்கரயில் போக்குவரத்து கட்டணம் மிகவும் குறைவாக இருந்தது. 0 .10 டாலர் சதத்திற்கு, நகரின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு பயணம் செய்யக் கூடியதாக இருந்தது. மின்ஸ்க் நகரின் சுற்றளவு 30 கி.மி. இருக்கலாம். இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதார காலத்திலேயே இப்படி என்றால், சோவியத் யூனியன் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், வாழ்க்கை எந்தளவு இலகுவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இதை எல்லாம் நமது நாடுகளில் கற்பனை பண்ணக் கூட முடியாது. ஐரோப்பாவிலேயே, சுவீடன், நோர்வே போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில், பயணச் சீட்டின் விலை அதிகம். மிகவும் குறைந்தளவு பஸ் கட்டணம் 30 குரோணர்கள்.

மேலதிக தகவல்களுக்கு:
1.Planka.nu இணையத்தளம்: Free public transport http://planka.nu/eng/
2.உங்கள் நாட்டிலும் "பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்" அமைப்பது எப்படி? கைநூலை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்:
http://planka.wpengine.netdna-cdn.com/wp-content/uploads/2006/04/how-to-flyer.pdf
3.பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது எப்படி என விளக்கும் வீடியோ:
youtube
source: கலையகம்

Sunday, September 30, 2012

நடு நசியும், பழுதடைந்த பேருந்தும்...


நான் (22.09.12) அன்று இரவு மதுரை வரை செல்ல இருந்தது... என்னவே கோயம்பேடு சென்று எதாவது பேருந்தில் இருக்கை கிடைக்குமா என்று பார்க்கும் பொழுது, ஒரு குளிர் சாதனா பேருந்தில் மட்டுமே இருக்கை கிடைத்தது, சரி குளிர் சாதனா பேருந்தக்கா இருந்தால் என்ன, நாம் மதுரை சென்றால் போதும் என்று பேருந்தில் ஏறி பயண சீட்டும் பெற்று கொண்டன்...

பேருந்து கிளம்பிய சிறுது நேரத்தில் எல்லாம் என்னது பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து இருந்தவர் ஓட்டுனர் இருக்கை அருகே சென்று அமர்ந்து கொண்டார், சரி நமக்கும் வசதியாக போயிற்று என்று எண்ணி கொண்டு நன்றாக காலலை நிட்டி உறங்குவதற்கு எதுவாக உக்கார்ந்து கொண்டேன், சிறுது நேரத்தில் பக்கத்துக்கு இருக்கையில் உக்கார வேண்டியவர் என்னது அருகில் வந்து என்னை எழுப்பி விட்டு, அவரது பையை எடுத்து கொண்டு சென்றார், அப்பொழுதுதான் நான் கவனித்தேன், பேருந்து எதோ நடு ரோட்டில் நிற்பதை, முன்னால் இருந்தது சிறுது சிருதாக புகை வருவதை கண்டேன்.... யாரு டா பேருந்தில் புகை பிடிப்பது என்று எண்ணி கொண்டு பேருந்தை விட்டு இறங்கி பார்த்தால் என்ஜின் இல் இருந்தது புகை வந்து கொண்டு இருந்தது,


நமக்கு இருக்கும் அறைகுறை அறிவோடு டிரைவர் இடம் என்னன்னா ரடியாடேரில் தண்ணீர் இல்லையா என்று கேட்டேன், அதற்கு அவர் இல்லை தம்பி, என்ஜின்ல ஆயில் இல்லை போல் இருக்கிறது என்றார், அதற்குள் அந்த பகுதியை சார்ந்த சில நபர்கள் பேருந்து நடுரோட்டில் நிற்பதை பார்த்து வந்து விட்டார்கள், அதில் ஒருவர் மெக்கானிக் என்று கூறி கொண்டு என்ன ஆச்சு என்று கேட்க, டிரைவர் பேருந்தின் பழுதை கூற பேருந்தை இப்பொழுது இயக்க முடியாது, குறைந்தது இரண்டு மணி நேரம் வண்டியை அப்படியே நிறுத்தி என்ஜின் குளிரந்துடன் தான் திரும்பவும் ஆயில் உற்றி என்ஜின் ஐ இயக்கினால், வண்டி இயங்க வாய்ப்பு உள்ளது, அதவும் சதவிதம் கம்மி தான்.

நேரம் இரவு 11.30. இடம் செங்கல்பட்டில் இருந்தது மதுரந்தங்கம் செல்லும் வழியில் உள்ள ஒரு சிற்றூர், அந்த பகுதியை சார்ந்த மக்கள் உடனிடியாக எங்கு இருந்தோ சில செடி கொடிகளை பறித்து வந்து பேருந்தை சுற்றி வைத்து விட்டு டிரைவர் இடம், ஐயா முதலில் பேருந்தில் இருபவர்களை கிழ இறங்கி பாதுகாப்பான இடத்தில் நிற்க சொல்லுங்கள், அவர்கள் பேருந்தில் உள்ள இருப்பது ஆபத்து, இது மிகவும் மோசமான இடம், இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கும். என்று கூறி லோக்கல் போலீஸ் கும் தகவல் குடுத்தனர்.


டிரைவர் இடம், அவருது டிப்போ நம்பர் கூட இல்லை, அவரிடம் கேட்டால் இப்பொழுது தான் புதிய மொபைல் வாங்கி இருப்பதாகவும், எல்லா நம்பரும் தனது பழைய மொபைல் இல் தான் இருபதக்வும் மிகவும் சாதரணமாக கூறினார். அவர் மீது கோவம் வந்தாலும் அந்த நேரத்தில் காட்டுவது சரியான தருணம் இல்லை என்பதால் நான் ஒன்றும் கூற வில்லை. என்னது பேருந்தில் பயணம் செய்த ஒரு பெரியவர், வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்த ஒருவர், கிட்டதிட்ட டிரைவர் இடம் சண்டை போடும் அளவுக்கு பொய் விட்டார். சரி அவரை சமாதானப் படுத்தாலும் என்று அவரிடம், ஆன்னே கோவ படாதிங்க, பார்த்துக்கலாம், என்று அவரிடம் சொன்னால், அவர் இப்பொழுது ஏன் மீது கோவத்தை திருப்பி விட்டார்.

அவரை ஒரு மாதிரி சமாளித்து, பேருந்து உள்ளே சென்று எனது பேக்கை எடுத்து விட்டு, அங்கு இருந்தவர்களிடம், இதற்கு மேல் பேருந்து செல்லாது, என்னவே ஒருவர் ஒருவராக கிழ இறங்கி சாலை ஐ கடந்து சென்று நில்ல்லுங்கள் என்று கூறி, அவர்களை சாலை கடபதற்க்கு உதவி விட்டு, சாலை ஓரத்தில் நிற்கும் போதே, சாலையோர பாதுகாப்பு போலீஸ்காரர்க்கள் வந்து விட்டார்கள், அவர்கள் இங்கு என நிற்கிர்கள்?? டிரைவர் ஐ எங்கே என்று கேட்க, நான் அவரிடம் பதில் கூறி கொண்டு இருக்கும் போதே, அந்த வெள்ளை சட்டை மனிதர் அங்கும் வந்து விட்டார். வழக்கம் போல் இந்த டிரைவர்களின் கவண குறைவு தான் காரணம், அச்ச புச்ச என்று கத்த தொடங்கி விட்டார். நான் அவரிடம் அண்ணே கொஞ்சம் சமாதானமே இருங்கள், அடுதத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்போம், அதற்கு அவர், நீ வாயே முடித்து சும்மா இரு, நா யாருன்னு தெரியுமா??? நான் ஒரு முத்த பத்திரிகையாளன், தினமலரில் (தினமலம்) 31 வருடம், ஹிந்துவில் 9 வருடம் நிருபராகக இருந்தது வருகிறேன், நான் யாரிடம் வேண்டும் என்றால்லும் பேசுவேன், போலீஸ், அரல்சியல்வாதி, மினிஸ்டர் என்று யாரிடம் வேண்டும் என்றாலும் நான் பேசுவேன், நீ யாரு டா என்னக்கு அறிவுரை சொல்லே.... ஏன் கண் முன்னே நிற்காதே என்ற கத்த தொடங்கி விட்டான். நான் நினைத்து கொண்டேன் தினமலர் (தினமலம்) பத்திரிக்கை போல் தான்அதன் பத்திர்க்கையாளர்களும் இருப்பார்கள் போலும்.

நான் ஒன்று கேட்கிறேன், இதை போன்ற ஒரு அவரச காலத்தில், நின்று கொண்டு இருக்கும் பொது, எதனால, யாரால தவறு, யார் அதற்க்கு பொறுப்பு என்று விவாதம் செய்து கொல்ல அது சரியான நேரம் அன்று. அந்த இடத்தில் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும். என்ன செய்தால் அங்கு இருப்பவர்கள் அனைவரையும் பத்திரமாகப் அவர்கள் செல்ல வேண்டிய இடதிற்கு போவதற்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு டிரைவர் தான் காரணம், அரசு அதிகாரிகள் இப்படி தான், முறைகேட்ட அரசாங்கம், என்று திட்டுவதால் எந்த பயனும் இல்லை. நாம் அங்கு என்ன செய்ய போகிறோம் என்பது தான் அங்கு முக்கியம்.


உள்ளூர் காரர் ஒருவோருடன் சேருந்து கொண்டு அந்த வழியாக செல்லும் பேருந்துகளை வழிமறித்து. இருக்கும் இடங்களில் எங்களுள் இருக்கும் வயதானவர்கள், பெண்களை முதலில் ஏற்றி விடலாம் என்று ஓவருவொரு பேருந்தகா கை காட்டி கொண்டு இருந்தோம். அந்த சாலை இரவு நேரத்தில் மிகவும் போகுவரத்து நெரிச்சல் மிகுந்தாக இருந்தது, லாரி, டேங்கர் லாரி, ஆம்னி பஸ் என்று மிகவும் பிஸி வாகவே இருந்தது. எங்களுடன் பெண்கள், கை குழந்தைகள் என்று ஒரு பெரிய குட்டமே இருந்தது. நாங்கள் கை காட்டி நிறுத்திய முதல் பேருந்தில் முதல ஆளாக ஏறியது வேறு யாரும் இல்லை. அந்த வெள்ளை சட்டை காரன் தான். அவன் உண்மையில் மக்கள் மீது அக்கறை உள்ள பத்திரிகை காரனாக இருந்தால் எங்களுடன் நின்று பெண்கள் மற்றும் குழந்தைகளை அனுப்புவதற்கு உதவி செய்து கொண்டு இருந்தது இருக்கே வேண்டும், ஆனால் அவன் அப்படி இல்லை.

அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அங்கு வந்து விட்டார். அவர் வந்து சத்தம் போடவும், அதற்குள் எங்கு இருந்தோ பஸ் டிப்போ நம்பர் வாங்கி தகவல் குடுத்து விட்டார் நமது டிரைவர். ஐயா ஒரு புதிய பேருந்து சென்னையில் இருந்தது கிளம்பி விட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு வந்து விட்டும் என்றார். நாங்கள் அந்த இடத்திற்கு வரவே இரண்டுஅரை மணிநேரம் அச்சு. அதில் இருந்தது சிறுது நேரத்தில் காவல் துறையும் சென்று விட்டது. இரண்டு கான்ஸ்டபள் மட்டும் காவல் வண்டியில் குறட்டை விட ஆரம்பித்து விட்டார்.

எங்களுடன் பணியில், நடு இரவில், நடு ரோட்டில் இருந்த கை குழந்தைகளுடன் இருக்கும் பெண்களை பார்த்தால் எங்களுக்கு பாவமாக இருந்தது. சரி அவர் சொன்னா பேருந்து வருவது வரை காத்து இருந்தால் கதைக்கு ஆகாது.... என்னவே உள்ளூர் நபர்களுடன் சேருந்து திரும்பவும் வருகிற அரசு பேருந்துகளை கை காட்டினோம், ஒருவர், இருவராக கிடைக்கும் பேருந்தில் ஏற்றி விட்டு கொண்டு இருக்கும் பொது, எங்கள் பேருந்தில் பயணம் செய்த சக குடிமகன், எங்களிடம் வந்து ஏய் நெ யாரு, நீ எதுக்காக பேருந்தை நிப்பாட்டுகிறாய், நான் பயண சிட்டு வாங்கியது குளிர் சாதனா பேருந்தில், சாதாரண் பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடியாது, அதான் கண்டக்டர் கூறினர ஒரு பேருந்து வருகிறது என்று அது வருவது வரை யாரும் எங்கும் செல்ல வேண்டாம். எல்லாரும் இங்கைய நிற்போம் என்று எங்களிடம் வம்புக்கு வந்தார், அவனிடம் கேட்டோம் ஐயா நீங்கள் தனியாக வந்து இருகிர்ர்களா இல்லை பெண்களுடன்வந்து இருகிர்ர்களா என்று??? ஏன் என்றால் பெண்களுடன் வந்து இருந்தால் அவர்களுது பாதுகாப்பு தான் முக்கியம். என்று கிடைக்கும் பேருந்தில் ஏறி கிளம்பி விடுவான். ஆனால் தனியாக வந்தால் அந்து பிரச்சினை கிடையாது. அதற்கு அவன் பெண்களுடன் தான் வந்து இருக்கிறேன் என்றான். அதற்க்கு என்னுடன் கூட இருந்த உள்ளூர் வாசி, ஐயா அப்படி என்றால் சற்று தள்ளி இருங்கள், பேருந்து வந்த உடன் உங்களை ஏற்றி விடுகிறோம், அது வரை பொறுமையாக இருங்கள். என்று கூறி விட்டு. திரும்பவும் கை காட்ட தோங்கினோம். ஆனால் அந்த குடிமகன் உடன் எந்த பெண்ணும் வரவில்லை. எபப்டி தான் இப்படி ஒரு இக்கட்டான நிலைமையிலும் நான் எடுத்தது குளிர் சாதனா பேருந்துக்கு பயண சிட்டு பெற்று கொண்டு, சாதாரண பேருந்தில் செல்ல மாட்டேன் என்று கூருகிறான்????


எனக்கு இந்த இடத்தில் அன்பே சிவம் படத்தில், கமல்கும் மாதவனுக்கும் இடையில் நடக்கும் ஒரு உரையோடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
மாதவன்: பணம் இருந்தாலும் வசதி கிடைக்காத ஒரே நாடு இந்தியா தான்.
கமல்: பணம் இருப்பவர்கள் எதை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று என்னும் வரையில் இந்தியா இப்படிதான்

அப்பொழுது அங்கு வந்த இன்ஸ்பெக்டர், ஏம்பா தம்பிநீ போகலியா என்று கேட்டார். இல்ல சார். நான் தனி ஆள் தான், நான் கடைசியாக போகிறேன், முதலில் இங்கு இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அனுப்பி விட்டால் பிறக்கு நிம்மதியாக போகலாம் சார், என்றேன். அதற்கு அவர் என்னக்கு கை குடுத்து, நன்றி நண்பா... என்று கூறினார்.

கிட்ட திட்ட எல்லாரயும் வந்த பேருந்தில் ஏற்றி விட்டாச்சு, இன்னுமும் இரண்டு குடும்பம் மட்டும் ஒரு ஜோடி மட்டும் தான் பாக்கி, அப்பொழுது ஒரு பேருந்தில் ஒரே ஒரு சிட்டு மட்டும் தான் பாக்கி இருந்தது, என்னுடன் இருந்தவர்கள் தம்பி நிங்க போங்கப்பா.... நாங்க மற்றவர்களை பார்த்து அனுப்பி வைக்கிறோம் என்று கூறிய பின்னேர நான் அந்த பேருந்தில் ஏறினேன்... அப்பொழுதும் நாங்கள் வந்த பேருந்தின் டிரைவர் பழுது அடைந்த பேருந்தின் பின் புறம நின்று கொண்டு எல்லா வண்டிகளும் விலகி செல்லுமாறு கை அசைத்து நடு ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். உண்மையில் அவரை பாராட்ட வேண்டும் என்று என்னது மனம் கூறியது.

திருச்சியை தாண்டி ஒரு டீ கடையில் வண்டியை நிறுத்தினார் நான் வந்த பேருந்தின் டிரைவர், அங்கு சிறுது நேரத்தில் எங்களுக்கு பின்பு இரண்டு குளிர் சாதனா பேருந்து வந்தது. அதில் அந்த இரண்டு குடும்பமும் அதில் பத்திரமாக வந்து இருந்தார்கள். முதலில் பார்த்தது அந்த குடிமகனை தான், சரி அவரிடம் சென்று விசாரிக்கலாம் என்று அவரிடம் என்ன அண்ணே பஸ் எல்லாம் சய்கரியமாக இருக்கிறதா என்று கேட்டன. ம்ம இருக்கு என்று கூறி விட்டு சென்று விட்டார். ஆனால் அந்த இரண்டு குடும்பத்தை சேருந்த ஆண்களும் என்னை பார்த்த உடன், ஒரு நட்பு புன்னகையுடன், தம்பி நாங்கள் இந்த பேருந்தில் தான் வந்தோம், உங்களுக்கு எப்படி சய்கரியமாக இருக்கிறதா என்று விசாரித்து விட்டு தான் சென்றார்கள்.

அவர்களுக்கு கடைசி வரை ஏன் பெயர் கூட தெரியாது. பெயரில் என்ன இருக்கிறது... அவர்களுள் ஒருவனாக நின்று அவர்களின் கஷ்டத்தை கடைசிவரை இருந்தது பார்த்து விட்டு, அவர்களுக்கு முடிந்தவரை பாதுக்காப்பாக பார்த்து கொண்டு இருத்த சாதாரண சாமானியன். நான் வேறு யாரும் இல்லை, உங்களோடு ஒருவனாக இருந்தது தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகளை பார்த்து கொண்டும்அதை திர்க்க பாடுபடும் உங்களுள் ஒருவன்.

சென்னையில் குளிர் சாதன பேருந்தில் ஏறி, சாதாரண பேருந்தில் கடைசி சீட்டில் பயணம் செய்து மதுரையில் இறங்கி இருக்கிறேன். என்ன கொடுமை சார் இது??????

Tuesday, September 04, 2012

Postmortem செய்யும் அரசு அதிகாரிகள்....

உன்னை போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசன் சொல்லுவது போல் வயற்றில் குண்டு வைத்த ஒருவன் வெடித்து விட்டால் .... உடனே அனைவரின் வைறு பகுதியும் சோதனை செய்து விட்டு.... காலில் குன்டோடு வருபவனை விட்டு விடுவார்கள்.....

அதை போல் தான் நமது தமிழக அரசு மட்டும் அல்ல அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள்..

சிறிது நாட்களுக்கு முன்பு பள்ளி பேருந்தில் பயணம் செய்த சுருதி என்ற சிறுமி பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையில் விழுந்து உயிர் இழந்தால்... அதில் இருந்து சரியாக முன்றாவது நாளில் சுஜிதா என்ற சிறுமி பேருந்தில் இருந்து இறங்கும் பொது டிரைவரின் கவன குறைவால் அந்த சிறுமி இறங்குவதற்கு முன்பே பேருந்தை எடுக்க பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில்லையே சிறுமி பலி...

உச்ச நீதிமன்றத்தின் சவுக்கடி கேள்விக்கு பின் தமிழக அரசு உடனடியாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளுக்கும் உடனடியாகக FC (Fitness Certificate) சில ஆயிரங்களுக்கு குடுக்கவும் பட்டது.. இப்பொழுது FC ஆ அப்படினா என்னனு இப்போ கேட்கிறாங்க...

சிறிது நாட்களுக்கு முன்பு பள்ளிக்குட நிச்சல் குளத்தில் ஒரு மாணவன் பலி ஆன சம்பவம்... அப்பொழுதும் சிறுது நாட்களுக்கு அதை பற்றி தான் பேச்சு.... பேருந்தில் பலி ஆன சிறுமிக்கு கிடைத்த நியாயம் கூட இந்த மாணவனுக்கு கிடைக்க வில்லை... ஏன் என்றால் அந்த பள்ளி குட நிர்வாகி ஆதிமுக வில் பெரிய ஆள்... அந்த வழக்கு அப்படியே பின்னுக்கு தள்ளப்பட்டது...

இப்பொழுது மீண்டும் சென்னையில் உள்ள அரசு மருத்தவமனையில் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை அரசு மருத்வமனைகே உரித்தான சுகாதார கேடு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு... ஆகிய பல்வேறு காரணகளால்

சொன்னால் வேட்கே கேடு... ஒரு குழந்தையை மருத்துவமனையில் வைத்து இருக்கும் லேட்சணம் _______

ஒரு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை ICU Ward இல் வைத்து இருந்த லட்சணம்....எலி கடித்து அந்த குழந்தை இறந்து விட்ட செய்தி கிட்டதிட்ட எல்லா செய்தி தொலைகாட்சி மற்றும் தினசரிகளிலும் வந்தது. அனைவரும் அறிந்தது தான். ஆனால் அதன் பிறகு நடந்துதான் உச்சகட்ட காமெடி..

நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்.... அவர்களுது கட்சி ஆட்கள் போல் கூற வேண்டும் என்றால் இந்த பதிவு முழுக்க அம்மாவின் அடைமொழி மட்டுமே சொல்ல வேண்டும். ICU Wardஇல் ஒரு குழந்தையை எலி கடித்து இறந்தால் என்ன காரணம்.. அங்கு சுகதார கேடு இருக்கிறது அதனால் தான் எலி வருகிறது. அங்கு எப்படி சுகாதார கேடு ஏற்பட்டது??? பக்கத்தில் ஒரு கையேந்தி பவன் இருக்கிறது அங்கு அனைவரும் சாப்பிட்டுவிட்டு அந்த உணவு கழிவுகளை அப்படியே போட்டு இருப்பதால் தான் இந்த சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது என்று தனது ஞானம் திருஷ்டி இல் கண்டு பிடித்து தன் பயனாக உடனடியாகக் ரோடோர உணவு விடுதிகள் அன்னத்தையும் அகற்றி விட்டு இன்னி அரசு மருத்துவமனையில் தங்கி இருப்பவர்கள் அனைவரும் மருத்தவமனை உணவு விடுதியுள் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டுமாம்.... அம்மா நீங்க great மா... நீங்க மணிக்கு ஒருமுறை நீங்கள் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து கொண்டே இருகிரிக்கள்....


அரசு மருத்துவமனைக்கு யார் வருவார்கள், வறுமை கோட்டிற்கு கிழே இருபவர்களும், முடியாதவர்களும், அவர்களின் வசதிக்கு ஏற்ப எதோ முடிந்ததை வாங்கி தனது பசியை போக்கிகொள்கிரர்கள்... சொல்ல போனால் அரசு மருத்தவமனை உணவு விடுதியை விட ஆயிரம் மடங்கு நன்று சாலையோர கையேந்தி பவன்கள்.... அவர்கள் உணவில் இருக்கும் சுவை, சுகாதாரம், சில உயர்தர உணவு விடுதியுள் கூட கிடைப்பது இல்லை, ஏன் என்றால் சென்னையில் பல தரப்பட்ட உணவு விடுதியுள் சாப்பிட்ட அனுபவம் தான்.

அம்மா சாலையோர உணவு விடுதிகளால் சுகாதார கேடு அறவே கிடையாது.. சுகாதார கேடு எப்போது ஏற்படுகின்றது என்றால் நடு ரோட்டில் கிடக்கும் குப்பைகளை அகற்றாமல், சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்றுகிறேன் என்ற பெயரில் அதை ஊர் முழுவதும் தெளித்து விட்டு செல்லும் நமது கார்ப்ரேஷன் தான். முதலில் அரசு மருத்துவமனையில் நோயாளிககளுக்கு போதிய வசதிகள் கிடையாது, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் தனக்கு ஏன சொந்தமாக ஒரு கிளினிக் வைத்து கொண்டு.. அங்கு வர சொல்லி பணம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய மருந்த்கள் கூட கையிருப்பு இருப்பது இல்லை... என்னது சின்ன வயதில் ஒரு முறை ஆற்றில் குளிக்கும் பொது உடைந்த பாட்டில் காலில் கிழித்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது.. அப்பொழுது பக்கத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றேன். அங்கு மருத்துவரோ, நர்ஸ் என்று யாரும் இல்லை, வார்டு பாய் என்று அழைக்க படும் ஒருவர் மட்டுமே இருந்தார், அவர் என்னிடம் கூறினார், மயக்க மருந்து இல்லை கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள் என்று கூறி என்னது காலில் ஐந்து தையல் போட்டார்.. என்னது விதியை நினைத்து சிரித்து கொண்டு அந்த வலியையும் ஏற்று கொண்டேன்.

இந்த லேட்சனத்தில் தான் இருக்கிறது நமது அரசு மருத்துவமனைகள், அந்த குழந்தை இறந்ததற்கு யாறுடைய கவனகுரைய்வு, அலட்சியம் அன்று கண்டுபிடித்து அவர்களைபணியை விட்டு நிக்காமல் எலிகளை பிடிக்க இந்த அம்மா உத்தரவு போட்டு கொண்டு இருக்கிறது.

அம்மா உங்களுது ஆணவத்தால் புதிய தலைமை செயலகம், கிழக்கு ஆசியாவில் மிக பெரிய நூலகம் ஆகிய வற்றை மருதுவனையாக மாற்ற முயலாமல் ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளை சுகாதாரத்தை மேம்படுதுவும், போதிய மருத்துவ வசதிகள் பெருக்கவும் முயற்சிகள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும், அதைவிட்டுவிட்டு எலி பிடிக்க ஆட்களை போடுவது நன்றக்கவா இருக்கிறது???

இந்த விஷயத்தை பத்தி எந்தன் முந்திய பதிவு.

“Prevention is better then cure.” வருமுன்னே காப்பது தான் சால சிறந்தது, அதை விட்டுவிட்டு இது போன்றே சம்பவும் நடந்த பிறக்கு உடன் நடவடிக்கை எடுப்பது சரியன்று, அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் அதை பழக்கமாகி அடுத்த முறை அப்படி ஒரு சம்பவும் நடக்காமல் பார்த்து கொண்டால் அது பாராட்ட கூறியது, ஆனால் நமது ஆட்கள் கொஞ்ச நாட்கள் மட்டும் செய்து விட்டு பிறக்கு அப்படி ஒரு சட்டம் போட்டார்களா என்று நம்மையே திரும்பி கேட்கிறார்கள், அப்படி மழை நீர் சேகரிப்பு திட்டம் போட்டார்களோ அப்படி தான், இப்பொழுதும் நடகிறது.

இப்படி இந்த சமுகத்தில் நடக்கும் அவலங்களை பார்த்து சகித்து கொண்டு இருக்காமல் உங்களிடம் புலம்பி தள்ளும், நான் வேறு யாரும் இல்லை, உங்களுள் ஒருவன் தான்.

Thursday, August 16, 2012

டெசோ வின் பின்னணி... ஒரு பார்வை

Tamil Ealem Supportes Organinsation (TESO - டெசோ) இப்பொழுது எங்கு பார்க்கினும் இதை பற்றி தான் பேச்சு.... சன் டிவி மற்றும் அதன் குழும தொலைகாட்சிகள்அனைத்திலும் எதோ பெரிய வெற்றி கிடைத்தது போல இந்த மாநாடு நடத்த கிடைத்த தீர்ப்பு எதோ அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றது போல கூறி கொண்டு இருக்கிறார்கள்....

2009 இல விடுதலை புலிகள் தோற்கடிக்க பட்ட பொது... தமிழகத்தில் பல பேர் புர்ரீசல்கள் போல தமிழ் ஈழம், விடுதலை புலிகள், பிரபாகரன், போராட்டம். என பல பேர்கள் இதை பற்றி பேசினார்கள்... நமது சமுதயாடிற்கே உரியதான நியாபக மறதி வியாதியால் அதை மறந்தும் விட்டோம்.... அனால் தற்பொழுது திரும்பவும் வந்து இருக்கிறது டெசோ என்ற பெயரில்...

இலங்கையில் என் தமிழ் இன மக்கள் அழிக்கப்பட்டு சரியாக முன்று ஆண்டுகளுக்கு பிறக்கு இப்பொழுது மிண்டும் தலையெடுத்து இருக்கிறது இந்த டெசோ.. டேசொவுக்கு தலைமை தாங்கும் இன் இந்த கருணாநிதி யார்??

தமிழ் இன மக்களின் காவல் தெய்வம், அபத்தந்தாண்டவன், என்று தன்னை தானா கூறி கொள்ளும் ஒருவன்.... இவன் உண்மையுள் 2009 க்கு முன் இறந்து இருந்தால் உண்மையுள் இந்த உலகம் மட்டும் அல்ல நானும் அப்படி தான் சொல்லி இருப்பேன்..... ஆனால் இப்பொழுது தமிழ் இனத்தின் துரோகியாக மட்டுமே என்னக்கு தெரிகிறான்... என்னது தமிழ் இன மக்கள் அங்கு கொத்து கொத்தாக கொல்ல பட்ட பொது இங்கு காலை சிற்றுண்டி பின் மதிய உணவுக்கு முன் தனது உண்ணாவிரத்த போராட்டத்தை முடித்த கொண்ட உத்தமன் தான் இந்த கருணாநிதி....


இந்த கருணாநிதி இன் அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்போம்.... எப்பொழுது எல்லாம் திமுக சரிவை நோக்கி போனதோ அப்பொழுது எல்லாம் இந்தி எதிர்ப்பு என்ற தந்தை பெரியாரின் வாதத்தை முன் வைத்து அரசியல் பண்ணினார்.... இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக வரலாற்றை மற்றும் அல்ல இந்திய வரலாறை கூட திரும்பி பார்க்க வைத்தது.... இது போன்ற பல போராட்டங்கள் திமுகவுக்கு வெற்றியை பெற்று தந்தாலும் இந்த TESO போராட்டம் பெயரளவில் வேணும் என்றால் வெற்றி பெறலாம்.... ஆனால் மக்கள் மத்தியுள் கண்டிப்பாக வெற்றி பெறாது.....


டெசோ உருவான விதம்:

1984 & 1985 தொடக்கத்தில் LTTE பிரபாகரன் தமிழ் ஈழ போராட்டத்துக்கு நிதி சேகரிக்க தமிழ் நாட்டுக்கு வந்து இருந்த சமயம், அப்பொழுது தமிழக முதல் அமைச்சராக இருந்த MGR தமிழக மக்களிடம் இருந்து ஒரு கோடி பணம் வசூலித்து குடுக்க இருந்தார், ஆனால் அப்பொழுதும் மத்திய அரசு நெருக்கடி காரணமாக்க எம்ஜிஅர் பழ. நெடுமாறன் இடம் குடுத்த மக்கள் பணத்தை வாங்கி விட்டு.. தனது சொந்த பணம் ஒரு கொடியை குடுத்து தனது சொந்த காரிலிய அனுப்பியும் வைத்தார் அது தனி கதை..

.

ஆனால் அதே நேரம் எதிர்கட்சி தலைவராக இருந்து கருணாநிதியும் LTTE மற்றும் இதர போரட்ட குழுக்கள் அனைத்தையும் கூட்டி ஒரு meating க்கு ஏற்பாடு செய்தார்.... ஆனால் LTTE ஏற்கனவே எம்ஜிஅர் இடம் வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளதால் பிரபாகரன் செல்ல வில்லை.. அவரின் சார்பாக இருவரை அனுப்பி வைத்தார்.... அவர்களுக்கு கருணாநிதி ரூபாய் 15,000/- கூடுக்கிறேன் என்று கூறினர்.. ஆனால் அதை LTTE ஏற்கவில்லை...

இதனால் மனகசப்பு அடைந்த கருணாநிதி LTTE க்கு எதிராக ஒரு இயக்கத்தை தமிழகத்தில் உருவாக்க நினைத்து Tamil Eelam Liberation Organization (TELO - டெலோ) இந்த இயக்கமும் முதலில் LTTE போல ஒரு ஆயுதம் தாங்கிய போரட்ட குழு வாகத்தான் இருந்தது... அதன் பிறக்கு விடுதலை போராட்டத்தை முன் எடுத்த செல்ல LTTE தனது சிந்தனை உடன் ஒத்த கருத்து உடைய பிற போராட்ட குழுக்களை அளித்து தான் மட்டும் விடுதலை போரட்டத்தை முன் எடுத்து சென்றது.... அந்த நேரத்தில் டெலோ உன் அளிக்க பட்டது, டெசோ உம் தான்.. மிஞ்சி இருந்த டெலோ உறுப்பினர்கள் அரசியலில் இறங்கி விட்டார்கள். கடந்த 2010 இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் டெலோ உறுபினர்கள் இரண்டு பேர் தேர்ந்து எடுக்க பட்டு இருக்கிறார்கள்....


இப்பொழுது திரும்பவும் டெசோ வை கையில் எடுத்து இருக்கிறார் கருணாநிதி இது கண்டிப்பாக தமிழ் ஈழ மக்களின் நலனுக்காக எடுக்க பட வில்லை.. இது அவரின் சொந்த அரசியல் நலனுக்காக மட்டுமே திரும்பவும் உருவாக்கி இருக்கிறார் இவர்.

நமது சமுதாயத்திற்கு உரியதான நியாபக மறதி, நமது முதலமைச்சர் ஜே வின் பாணியில் சொன்னால் Selective Amnesia. அவரின் பழைய கபட நாடகங்களை எல்லாம் மறந்து தமிழ் ஈழடிற்காக யாரு போராடினாலும் நாம் ஆதரவு தெரிவிப்பது வழக்கமாக்கி விட்டது..... சனியன்னால நல்லது நடத்த சரி தான்.... இந்த மாநாட்டை ஈழ ஆதாரவாளர்கள் சீமான், பழ. நெடுமாறன், வைகோ என யாரும் ஆதரவு தெரிவிக்க வில்லை. என்பது குடுதல் செய்தி...


எது எப்படியோ இந்த போராட்டத்தில தமிழ் ஈழ மக்களுக்கு நல்லது நடக்குமாயின் எல்லாம் நன்மைக்கே....

இப்படி க்கு.... ஈழ போராட்டத்தில் அண்ணன் பிரபாகரன் லட்சிய கனவோடு.... நான் உங்களுள் ஒருவன்

Wednesday, June 20, 2012

ஒரு குடிமகனின் புலம்பல்......


என் அருமை இந்திய குடிமகன்களே..... கோட்டர் க்கு வழி இல்லாமல் கட்டிங் காக கூட்டனி வைத்து இருக்கும் இந்திய குடிமகன்களே, மழையை காரணம் காட்டி ரம் அடிக்கும் நண்பர்களே.... வெயிலை காரணம் காட்டி பீர் அடிக்கும் தோழர்கேளே ஒரு வாட்டர் பாக்கெட்டில் கோட்டர் அடித்து தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வாராமல் தடுக்கும் தமிழ்நாட்டு இன் தன்மான சிங்கங்களே.......
உங்களுக்கெல்லாம் ஒரு கெட்ட செய்தி...... ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு.... கடைசில பீர் விலையும், கோட்டர் விலையும் ஏத்திடாங்க..... இதுவரை பொறுமையாய் இருந்தது போதும்.. பீர் போல பொங்கி எழுவோம்....

பொங்கி எழுந்து என்ன பண்ணனும்னு கேட்கரீங்களா????? போறோம் மச்சி போறோம் ..... பாண்டிச்சேரி போறோம்...... நாலு பீர் அடிக்கிறோம்..... நாற்பது தடவே உச்சா போறோம்..... தலைலே துண்ட போட்டுகிட்டு பாடி பறந்த கிளின்னு பாட்டு பாடுறோம்.... அப்படியே final touch ஆளுக்கு ரெண்டு பீர் போடுறோம்.... அப்படியே கிளம்பி சென்னை வரோம்........
மொதல்ல பால் விலையை கூட்டுனிங்க சரி இது எல்லாம் வீட்ல சமையல் செய்து சாப்பிடரவங்க பிரச்ன்னை.... நாம்தான் கடைல account வச்சு குடிகிறவங்க தானே நமக்கு என்னனு விட்டாச்சு...... அப்புறமா பஸ் ல டிக்கெட் விலையே கூட்டுனிங்க சரி அது பஸ்ல டிக்கெட் எடுத்து போறவங்க பிரச்ன்னை நாம்தான் பஸ்ல டிக்கெட் எடுக்க போறது இல்லைய பிறகு என்னனு விட்டாச்சு.....பெட்ரோல் விலைய கூட்டுனிங்க அதுல்லாம் பைக்ல கார்ல போறன்வங்க பிரச்ன்னை நம்மதான் லிப்ட் கேட்டு போறவங்க தானா so நமக்கு எந்த problem ம்மு இல்லன்னு நினைச்சா வச்சான்ல ஆப்பு .......

இப்படி புலம்பும் பொது ஒரு புகழ் பெற்ற வரிகள் நியாபகத்துக்கு வருகிறது..... ஹிட்லரின் நாஜி காலத்து மார்ட்டின் நிமொல்லரின் கவிதையை நினைவுகூருங்கள். “முதலில் அவர்கள் கம்யூனிஸ்ட்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை. அடுத்து அவர்கள் தொழிற்சங்கக்காரர்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் தொழிற்சங்கக்காரர் இல்லை. அடுத்து அவர்கள் யூதர்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் யூதர் இல்லை. அப்புறம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்காகப் பேச யாரும் மீதி இல்லை.”.
என்ன வாழ்கை டா இது???? எங்கல குடிகரானு சொல்லுற இந்த உலகம்..... இந்த உலகம் எல்லாம் சேர்ந்து இந்த குடிகரானுகளே ஏமாத்துரானுங்க ஒரு கோட்டர் நா ஒரு லிட்டர் ல நாலுல ஒரு பங்கு.. அப்படினா 250 ml இருக்கனும்... அனா ஒரு கோட்டர் ல 180ml தான் இருக்கு.... சொல்லுங்க ‍‌மக்கேளே யாரு யார ஏமாத்துற?????

மாண்புமிகு அம்மா அவர்கள...... பால் விலை, மின்சாரம், பஸ் கட்டணம் உயர்த்தும் பொது தொலைகட்சியுள் வந்த சோகமாய் முகத்தை வைத்து கொண்டு.... நான் யாரிடம் போவேன்.... தமிழ்நாட்டு மக்களாகிய உங்களிடம் தான் நான் வர முடியும்... பொதுத்துறை நிறுவனகள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்கும் பொது விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்று கூரினர்கள்..... இப்பொழுது நான் ஒன்று கேட்கிறேன்... எந்த டாஸ்மாக் நஷ்டத்தில் போகுதுங்கோ??? கொஞ்சம் சொல்லுங்க.... எங்கள் சக குடிமகன்களை அந்த டாஸ்மாக்கு அனுப்பி வைத்து.... நஷ்டம் ஏற்படாமல் பார்த்து கொள்ளுர்கிறோம்......
தமிழ்நாட்டு ஏன் இந்தியாவில அதிகாமாக லாபம் சம்பாதிக்கும் ஒரே தொழில் நம்ம டாஸ்மாக் தான்.... இங்கயும் விலையேற்றம் தாங்க முடியலைங்க............ இப்படி உங்களிடம் புலம்பி கொண்டு இருப்பவன் ஒரு சாதாரண உங்களில் ஒரு குடிமகன்......
பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்.

Sunday, May 27, 2012

பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்......


பார்ப்பனியத்தால் அப்படி என்ன உண்மைகள் மறைக்க படுகின்றேன.. என்று கேட்டால்???? இந்த பதிவு முழுமையும் படித்து கொள்ளவும்.... சில விசயங்கள் நாம் நாட்டின் வரலாற்று உண்மைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கடவுள் என்ற மாயைக்குள் மயக்கும் திறன்.....

சிறுது நாட்களக்கு முன்பு என்னது விட்டிருக்கு சென்று இருந்தேன்..... மாமா பையன், பொண்ணு, சித்தி பசங்க, என்று ஒரு சிறு குழந்தைகள் பட்டாளமே எனது விட்டில் எனது வருகைக்காக வந்து இருந்தார்கள், அனைவருக்கும் முழு வருட பள்ளி விடுமுறை நாட்கள், நானும் ஊருக்கு வருவேன் என்பதால் அனைவரும் எனது விட்டிருக்கு வந்து விட்டார்கள்...... அனைவருடனும் நன்றாக கலந்து பேசி, உரையாடி மகிழ்ந்தேன், அதன் பிறக்கு சிறிது நேரம் தொலைகாட்சி பார்க்கலாம் என்று நினத்தால்.... விட்டிருக்கு வந்து இருக்கும் பொடிசுகள் எல்லாம் கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, தமிழ் கார்ட்டூன் என்று வைத்து கொண்டு மற்றவர்களை பார்க்க விடாமல் அட்டுழியம் பண்ணி கொண்து இருந்தார்கள், சரி சிறுவர்கள் தானே, நாமும் சிறு வயதில் இருக்கும் பொழுது இப்படி தானே கார்ட்டூன் சேனல் வைத்து கொண்டு அட்டுழியம் பண்ணினோம்..... இப்பொழுது இது அவர்கள் முறை போலும் என்று நினைத்து கொண்டு அவர்கள் பார்த்து கொண்டு இருந்த கார்டூனையே நானும் சிறிது நேரம் பார்த்தேன்..... அன்று முழுவதும் ஹனுமான் வீர தீர செயல்கள் அடங்கிய தொடர் மட்டுமே ஒளிபரப்பி கொண்டு இருந்தார்கள்.... அதையும் இந்த சிறுவர் பட்டாளம், சிரித்து சிரித்து பார்த்து கொண்து இருந்தார்கள்..... அதை போல் செய்து கொண்டு நான் தான் ஹனுமான் என்று கூறி கொண்டும் இருந்தார்கள்.

முதலில் பார்க்கும் பொழுது பரவா இல்லை..... எத்தனை காலம் தான் நாமமும் ஆங்கில படமும் Christianity எகிப்த pyramids பார்த்து கொண்டு இருக்க வேண்டும்....... தமிழில் சில வருடங்கள் முன்பு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முழுக்க தமிழ் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், சிவன் சிலை என்று தமிழ் பாரம்பரியம் தொட்டு வந்த பொது பார்த்து வியந்தேன்..... அதை போல் இப்பொழுது குழந்தைகளை கவரும் இந்த சொட்ட பீம் நமது இந்திய பாரம்பரியம் மட்டும் இந்தியாவில் உள்ள ஒரு புராண கதையை இந்த குழந்தைகளுக்கு அளிக்கும் பொது அவர்களுக்கு நமது இந்தியாவின் பாரம்பரியம் நன்றாக தெரியுமே என்று பெருமை பட்டு கொண்டு இருக்கும் பொழுது தான் என்னது உச்சன் தலையில் யாரோ அடிப்பது போல் உன்னேர்ந்தேன்........

உண்மையில் இது மட்டும் தான் இந்தியாவின் கலாச்சாரமா ????? இன்னும் எவ்ளோ இருகின்றேன.... அதை எல்லாம் இந்த நாட்டில் இதை பற்றி எவரும் பேசுவது கூட இல்லை..... இப்பொழுது தான் என்னக்கு ஒரு விசியம் புரிகிறது...... ஏன் தமிழ் நாட்டில் பெரியார் காலத்தில் இருந்து இந்த பார்பனியத்தை எதிர்கிறார்கள் என்று..... அவர்கள் அனைவரும் படித்தவர்கள், மற்றவர்கள் படிக்காதவர்கள், அவர்கள் பணக்காரர்கள், மற்றவர்கள் ஏழைகள் என்பதால் மட்டும் அல்ல..... இந்த ஏற்ற தாழ்வு மற்றும் அவர்கள் காரணம் காட்டி போரடி இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக இந்த அளவுக்கு பெரும்பான்மை, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு அதிகாரம் கிடைத்து இருக்காது.......

பார்ப்பனியர்கள் மட்டும் படிதவர்கள், அவர்கள் மட்டுமே படிதவர்கள் என்னவே அவர்கள் எதோ சொன்னார்களோ அதுவே வரலாறு, பாரம்பரியம் என்று ஆனது, அவர்கள் சொல்லுவதே உண்மை என்றும் ஆனது... உங்களிடம் ஒன்று கேட்கிறேன்... உங்களுக்கு தெரிந்த விடுதலை போராட்ட வீரர்கள் பற்றி கூறுங்கள்....

காந்தி, நேரு, பாரதி, சுபாஸ், சுப்பிரமணியபுரம் சிவா, கட்டபொம்மன், வாஞ்சிநாதன், பகத் சிங்க், அப்பப்பா... இதன் பிறக்கு நமக்கு தெரிந்தது எல்லாம் இது வரை தான்..... என் என்றால் இவர்கள் அனைவரிர்ன் பெயரும் நமது பாட புத்தகத்தில் வந்த பெயர்கள்... இவர்களை தவிர நமக்கு எத்தனை பேரை தெரியும், இது போக நமது வட்டாரம், நமது ஊரில் பெயர் பெற்ற சில பேர் தவிர மற்றவர்கள் நமக்கு தெரியாது..... பேராண்மை என்ற படத்தில் ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி, மலை வாழ குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுப்பது போல் ஒரு காட்சி வரும் அதில் ரவி கூறுவர் சுதந்திர போராட்டத்தில் மலை வாழ் மக்களின் பங்களிப்பு.... அப்பொழுது நான் எண்ணியது.. என்ன டா இவன் அவன் அவன் பெருமையை பற்றி மற்றும் பேசுகிறேனா என்று,, ஏனென்றால் அவர்கள் பெருமை இந்த பற்பனியாதல் மறைக்க பட்டு இருக்கிறது.... என்னவே தான் அவர்கள் பெருமை அவர்கள் மட்டுமே பேசி வருகிறார்கள்... அவர்களை பற்றி நம்மக்கு தெரிய வில்லை... இன்னுமும் சுதந்திர போராட்டம் என்றால் மெட்டு குடி மக்கள் அவர்கள் தான் பிரிட்டிஷ் காரனுக்கு சலாம் போட்டு அரியணை ஏற்றி வைத்ததும் இவர்கள் தான், அதே பிரிட்டிஷ் காரானை எதிர்த்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்தாக நம்மக்கு தெரிபவர் கள்ளும் இந்த மெட்டு குடி மக்கள் தான் என்ன கொடுமை சார் இது........????

அவர்களை தவிர வேறு யாரும் இந்த சுதந்திர போராட்டில் பங்கு பெற வில்லையா????

சரி அடுத்தது... நமது தமிழ் மன்னர்கள் எப்படி இருப்பார்கள் ????? இது சிறது மாதங்களுக்கு முன் புதிய தலைமுறை தொலைகாட்சி வந்த ஒரு நிகழ்ச்சி.. தமிழ் மன்னர்கள் மட்டும் அல்ல இந்திய திரைபடத்தில் காட்ட படும் அரசர்கள் பற்றியது... இப்பொழுது நமக்கு தமிழ் அரசன் என்றால் எப்படி ஒரு பிம்பம் நமது கண் முன்னால் வரும்... சரிக பட்டு, வைர வைடுரியம் அணித்து, பகட்டாக முழு உடை அணிந்த ஒருவன் தான் நமது கண் முனால் வருவான்.... ஆனால் உண்மையுள் அப்படி தான் இருதர்களா ???? இந்தியாவில் முதலில் எடுக்கப்பட்ட படம் எடுக்க பட்ட காலகட்டதில் ரவி வர்மாவின் ஓவியங்கள் மிகவும் பிரபலம், அதில் ராஜாக்கள் பற்றி திட்ட பட்ட ஓவியம் தான் அந்த கால படங்களில் ராஜாக்களின் உடை அலங்காரம் செய்ய பெரிதும் உதவின.... அதன் பிறகு இந்திய மக்களுக்கு அரசன் என்றால் அப்படி தான் என்ற ஒரு மாயா பிம்பம் மனதில் தோன்றி விட்டது... அதன் பிறகு பிற மொழிகளில் எடுக்க பட்ட பிற படங்களும் அதைய பின் பற்றின. ஆனால் உண்மையுள் நமது தமிழ் நாட்டு மன்னர்கள் இப்படி பட்ட உடைகள் தான் உடுத்தி வந்து இருபார்களா என்று கேட்டால் கண்டிப்பாக சந்தேகமே??? நமது தமிழ் நாட்டின் சிதொசனம், கலாச்சாரம் என்று பார்த்தல் ஐவகை நிலங்கள் தான்.

இந்த இவகை நிலைத்திருக்கு ஏற்றார் போல் தான் அவர்கள் வாழ்வு ஆதாரம், உடைகள்,நடைமுறைகள் இருந்து இருக்கும், அது மட்டும் இன்றி பாரம்பரிய உடை அன வேஷ்டி மற்றும் துண்டு தான் அணித்து இருப்பார்கள், மேலும் ஒரு வசதியை காட்டுவதற்க வேண்டுமெனில் சில தங்க சங்கலிகள் அணித்து இருக்கலாம், பெண்கள் அதாவது மகாராணிகள் வேண்டும் என்றால் நகை கடையுள் இருக்கும் பொம்மைகள் போல் நகைகள் அணித்து கொண்து இருந்து இருகலாம்.... ஆனால் கண்டிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் சிவாஜி கணேசன் போல தான் உடை உடுத்தி தூய தமிழ் இல் தான் பேசி இருப்பர் என்றால் கண்டிப்பாக இல்லை.... அவரது வட்டார வழக்க படி... ஏல, வலே, போலே என்று தான் பேசி இருபார்......

இன்னும் ஒரு உதாரணம்.... சில மாதங்களுக்கு முன்பு paypal மற்றும் e -bay இணைந்து நடத்திய அவர்களுது employee 's காண ஒரு போட்டில் unity in diversity என்ற கொள்கைகளை காட்டுவதற்காக மாநிலம் வாரியாக அணைத்து அணிகளுக்கும் பெயர் வைகலாம் என்று அமெரிக்க நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் இங்கு இருக்கும் உயர் மட்ட மேலாண்மை இயகுனர் அனைத்தும் கிராஸ் பெல்ட் தான்.... அவர்கள் அந்த அந்த மாநிலத்தில் உயர் குடி மக்களின் சாதி பெயரை அந்த மாநிலத்தின் பெயரோடு இணைந்து விட்டார்கள், இதை பார்த்த பின்பு நமது தமிழ் இயகங்கள் சும்மா விடுமா save tamil groups இந்த போராட்டில் குதித்து அமெரிக்க நிறுவனம் மணிப்பும் கேட்ட பின்பு தான் நமது தமிழ் இன உணர்வாளர்கள் இந்த போராட்டத்தை நிறுத்தி கொண்டார்கள்..... இந்த போரட்டத்தின் முக்கிய சரமசம் என்ன வென்றால்.... Iyers of Tamil nadu என்றால் தமிழகத்தில் ஐயர் கல் மாதும் தான் இருகிரர்கல்லா???? மற்றவர்கள் அனைவரும் என்ன ________??????

இப்படி தான் நான் முதலில் சொன்ன முன்று தகவல்களும் நமது நாட்டின் கலாச்சாரத்தை மறைத்து எதோ இவர்கள் மட்டுமே இருப்பது போல தான் வெளியுள் இருந்து பார்பவர்களுக்கு தெரியும்.... அரசர்கள் காலத்து வரலாறு நமக்கு கல்வெட்டு முலம் தான் தெரிந்தது.... நமது நிகழ கால வரலாறு எதிர் காலதிருக்கு எவ்வாறு சென்று சேரும்.... இவ்வாறாக தான்... ஆனால் இந்த பார்பனர்கள் அதை திட்ட மிட்டு முடி மறைத்து எதோ இவர்கள் மட்டுமே இருப்பது போல் ஒரு மாயை உருவாகி விடுகிறார்கள்..... இதை விட குடாது...... நமது பாரம்பரியம் நம்மக்கு முக்கியம் இல்லை என்றால், வரும் காலத்தில் இவர்கள் உருவாகி வைத்த இந்த மாயை மட்டுமே மிஞ்சி இருக்கும்......

இந்த ப்ரசென்னை இப்பொழுது இல்லை இப்பொழுது அனைவரும் படித்தவர்கள், அனைத்து மக்களும் எல்லா இடதிலும் இருக்கிறார்கள், இனிமேல இப்படிபட்ட வரலாற்று பிழைகள் நடக்காது என்பவர்கள் கவனிக்க.... இதுவரை நான் பட்டியல் இட்ட வரலாற்று பிழைகள் மிகவும் குறைவு, இது போல் ஆயிரம் இருக்கிறது.... இவைகள் எப்பொழுது களைய பட போகின்றேன??? முதலில் சாதிகள் ஒழிக பட்ட வேண்டும், எல்லாம் எல்லாருக்கும் சென்று அடைய வேண்டும், அனைத்தும் அனைவருக்கும் தெரிய வேண்டும் அது வரை நான் தொடர்ந்து எழுதி கொண்டே தான் இருப்பேன்.... நான் வேறு யாரும் அல்ல.... உங்களுள் ஒருவன் தான்......

Thursday, March 22, 2012

இன்னொரு முள்ளிவாய்க்கால்

இலங்கையில் தான் தமிழர்கள் படுகொலைகள் செய்ய பட்டார்கள் நாம் என்ன செய்து கிழித்து விட்டோம், சும்மா வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தவர்கள் தானே நாம்..... இப்பொழுது தமிழகத்தில் ஒரு முள்ளிவாய்க்கால் உருவாக்கும் ஆபாயம் ஏற்பட்டு உள்ளது..... அதுதான் இடிந்தகரை.....
இடிந்தகரை இல் அணுஉலை அமைத்து தான் அந்த மக்களை கொல்ல பட வேண்டும் என்பது அல்ல..... அங்கு அணுஉலை அமைப்பதற்கு கூட இந்த மக்கள் கொல்லபடலாம் என்பது தான் இந்த மக்கள் விரோத ஆட்சி இல் செய்கிறார்கள்...... சங்கரன்கோவில் இடை தேர்தல் முடியும் வரை இந்த போரட்டத்துக்கு அதரவு தெரிவிப்பது போல செயல் பட்டு விட்டு இப்பொழுது எதிர்கிறார்கள்.... எப்படி காங்கிரஸ், திமுக 2009 இல் தேர்தல் வரை அமைதியாக இருந்து விட்டு தேர்தல் முடிந்த உடன்.. அங்கு தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றார்களோ அதை போல் இப்பொழுது அம்மையாரும் அதற்க்கு சளைத்தவர் அல்ல என்பது போல இங்கயும் தமிழர்களை கொல்ல எத்தனித்து விட்டார்.... என் அவர் உண்மைல்ய்ல் வீர மங்கை, தங்க தாரகை என்றால் தேர்தலுக்கு முன்பு இதை செய்து இருக்கலாமே...

அவர்களின் போராட்டம் நியாயம் இல்லாமல் கூட இருக்கட்டும்... அதற்கு இப்படி தான் ஒரு அரசு தனது மக்கள் மீது போர் தொடுப்பது போல இராணவத்தை வரவழைத்து அந்த மக்களை திறந்த வழி சிறை சாலையில் அடைப்பது போல் அடைபதா????? ...... கூடங்குளம், இடிந்தகரை சுற்றி 144 தடை உதரவு போட்டு அந்த மக்களை தனிமை படுத்தி, அவர்களக்கு பால், தண்ணிர், மின்சாரம், உணவு பொருட்கள் அனைத்தும் தடை செய்ய பட்டு உள்ளது......

எப்படி முள்ளிவாய்க்கால் இல் தமிழர்கள் அன்னைவர்ரையும் ஒரு குறிபிட்ட இடதிருக்கு கட்டயமாக வரவழைத்து அவர்கள் அனைவரயும் கொத்து கொத்தோக கொன்றார்களோ... இப்பொழுதும் இடிந்தகரைஇல் அப்படிதான் இருக்கிறது..... இடிந்தகரை இல் இருக்கும் சில ஆயிரம் மக்களை பணிய வைக்க ஆயுதம் ஏந்திய ராணுவமும், காவல்துறையும் அங்கு முகாம் இட்டு இருக்கிறார்கள். அந்த மக்களின் இயல்ப்பு வாழ்கையை தடுகுகிரர்கள்.... இது எந்த வகையுள் நியாயம்?????

சில நண்பர்கள் கேட்கிறார்கள் இவொலோ நாளாக இல்லாமல் இப்பொழுது என் இந்த போராட்டம் இவொலோ முக்கியம் பெற வேண்டும் என்பது..... நான் ஒன்று கூறி கொள்ளுகிறேன்..... அவர்கள் கூடங்குளம் அனு உலை திட்டம் ஆரம்பம் பொழுது இருந்து போரரட்டம் நடத்தி தான் வருகிறார்கள்.... முதலில் இந்த அனு உலை திட்டம் நேரடியாக தமிழகதிருக்கு வரவில்லை, நமக்கு பக்கத்தில் இருக்கும் இரண்டு மாநிலத்திற்கும் சென்று அங்கு அவர்கள் வேண்டாம் என்று தூக்கி போட்ட திட்டம் தான் இந்த அனு உலை திட்டம், அதை அப்பொழுது இருந்த அரசுகள், நமக்கு இதில் எவ்ளோ பணம் அடிக்கலாம் என்று மட்டும் பார்த்து விட்டு இந்த திட்டதை சரி என்று ஏற்று கொன்றார்கள்..... அப்பொழுது ஆரம்பித்த இந்த போரரட்டம் இன்றும் ஓய்ந்த பாடில்லை.......

நான் ஒன்று கேட்கிறேன்.... ஐயா என்னிடம் ஒரு நல்ல பாம்பு இருக்கிறது.... அதற்கு பல்லும் பிடிங்கி விட்டேன்... அதை சிறிது காலம் உங்களுது விட்டில் வைத்து கொள்ளலாமா என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லுவிர்கள்????? சரி வைத்து கொளுகிறேன் என்று சொல்லுவிர்களா ??????? அதை தான் இந்த இடிந்தகரை மக்களும் கூறுகிறார்கள்..... அவர்களுது பயத்தை போக்காமல் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல் படுவது முட்டாள் தனம்.....

அணு உலை எதிர்ப்பு கூட்டத்தின் தலைவர் உதயகுமார் கேட்கும் கேள்விகளுக்கு யாரும் சரியாக பதில் சொல்லுவத இல்லை, புதிய தலைமுறை தொலைகாட்சி இல் அவர் ஒரு கேள்வி கேட்டால் அரசாங்கம் அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் அணு உலை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று மட்டும் கூறுகிறார்கள்.... இதற்கு காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் நாராயணசாமி.... விமானமே வந்து மோதினாலும் அணு உலை க்கு பாதிப்பு இல்லை என்கிறார் முதலில் இவனை தூக்கி விட்டால் போதும் எல்லாம் சரியாகி விடும்... முதலில் மக்களுக்கு ஒரு படிப்பினை குடுக்கவேண்டும்.... அவர்களின் பயத்தை போக்க வேண்டும்..... அவர்களுக்கு புரிகின்ற மாதிரி சொல்ல வேண்டும்.... அவர்கள் எதற்கும் சரி வரா விட்டால் அந்த திட்டதை வேறு ஒரு இடதிற்கோ அல்லது கை விட வேண்டும் இது தான் ஒரு நல்ல அரசாங்கத்தின் செயல்.... மக்கள் மதிக்காத அரசாங்கம் எதற்கு ????? முதலிலைய அவர்களின் அதரவை பெற்று விட்டு அல்லவா அந்த இடதில் அணு உலை கட்ட பட்டு இருக்க வேண்டும்... அதை விட்டு விட்டு தான் புடித்த முயலுக்கு முன்று கால் என்று ஆணவத்தில் ஆடுவது சரி அல்ல.....

தமிழகத்தில் இப்பொழுது மின்சார தட்டுப்பாடு என்று ஒரு மாய தோற்றதை உருவாக்கி, தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின் வெட்டு என்று மக்கள் அனைவரயும் நம்ப வைத்து, அதற்கு ஒரு வழி கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடுங்கவது தான் என்று மக்கள் அனைவரையும் நம்ப வைக்கே சில கட்சி சார்ந்த தொலைகாட்சிகள், செய்தி தாள்கள் முலம் ஒரு மறைவு பிரசாரம் செய்து... உடையகுமர்க்கு எதிராக அனைவரயும் திருப்ப பார்கிறது .நான் ஒன்று கேட்கிறேன்.. இந்த கூடங்குளம் அணு மின் நிலையம் செயல் பாட்டுக்கு வந்தால் அதில் இருந்து கிடைக்கும் மின்சாரம் எத்தனை சதவிதம் நமது தமிழகத்திற்கு கிடைக்கும்.... அதிலும் எத்தனை சதவிதம் பொது மக்களின் உபயோகத்திற்கு கிடைக்கும்... பெரும்பாலும் factories and industries க்கு தான் போகும் மிச்சம் மிதி இருப்பது மட்டுமே பொது மக்களில் உபயோகைதிர்க்கு வரும்.. அப்பொழுதும் தமிழகத்தில் மின்சார தட்டுப்பட்டு இருக்க தான் செய்யும். அதற்கு பதில் மற்று ஏற்பாடு செய்யலாம்.... சூரிய ஒழி வழி கற்று வழியாக மின்சாரம் எடுக்க மக்களுக்கு மானியம் குடுக்கலாம், அதை விட்டு விட்டு.... அந்த மக்கள் மிது பொய் வளைகு போதுவது. பொய்யாக விமர்சனம் செய்யது நல்லவ இருக்கு..... எதோ ஒரு ஜேர்மன் கரனை பிடித்த இவன் தான் அவர்களுக்கு பணம் உதவி செய்தான் என்று கூறி அவனை நாடு கடதுனிர்கள்.... அப்படி அவன் உண்மையுள் பணம் உதவி செய்து இருந்தால் அவனை கைது செய்து விசாரணை அல்லவா செய்து இருக்கே வேண்டும்..... இந்த போரடடிருக்கு எங்கு இருந்து பணம் வருகிறது என்று இந்த போராட்டத்தை கொச்ச படுத்துவது போல் வெளி நாட்டில் இருந்து பணம் வருகிறது என்று கூறுபவர்கள்... அரசாங்கமே இவர்கள் தானே இவர்களுக்கு தெரியாமல் வெளி நாட்டில் இருந்து பணம் எப்படி இந்தியவிற்கு வரும்... அப்படியே வந்தாலும் அதை கண்டு பிடிக்க குட முடியாத இந்த அரசாங்கம் என்ன ______ பண்ணுகிறார்கள்?????? இப்படி இவர்கள் போராட்டத்தை கொச்சை செய்யாமல் இருந்தால் போதும்.....

இவர்கள் அனைவரயும் கொன்று தான் இந்த இடத்தில அணு உலை கடுவிர்கள் என்றால் நீங்கள் உண்மையான மக்கள் நலனில் அக்கறை கொந்த அரசாங்கம் தானே என்று சந்தேகம் வருகிறது....... இந்த போராடத் குழு மீது மீது நடக்கும் அவலங்களை பார்த்து கொண்து சும்மா இருக்க முடியாமல் உங்களிதம் புலம்பி தவிக்கும் உங்களுள் ஒருவன்...........

Tuesday, March 13, 2012

தமிழனுக்கு மானம் இருகிறதா??????

ஐ நா வின் கூட்டத்தில் நடக்க இருக்கும் இலங்கை க்கு எதிரான வாக்கு எடுப்பில் இந்தியா என்ன செய்ய போகிறது?????? தமிழர்களை கண்டால் பிடிக்காத இந்த கேடு கேட்ட காங்கிரஸ் செய்யும் பெரிய காரியம் இந்த வாக்கு எடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது மட்டுமே......

என் என்றால் இப்பொழுது இந்தியாவிற்கு தேள் கொட்டினது போல் தான்...... கத்தவும் முடியாது கத்தாமல் இருக்கவும் முடியாது..........

இந்தியா இலங்கைக்கு அதரவாக செயல் பட்டாள் அவர்களும் இந்த தமிழ் மக்களின் படுகொலையில் பங்கு இருக்கிறது என்று..... அப்படி இல்லாமல் இலங்கைக்கு எதிராக செயல் பட்டாள் இலங்கை இந்தியா வை காட்டி குடுத்து விடும் ..... என்னவே இப்பொழுது இந்தியா இரு தலை கொல்லி எறும்பாக தவித்து கொண்து இருக்கிறது..... இன்னொரு பக்கம் காங்கிரஸின் செல்வாக்கு இந்தியா முழவதும் குறைந்து கொண்டு இருக்கிறது சமிபத்திய தேர்தல் இதற்க்கு எடுத்து காட்டு....

இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் உண்மையுள் நாம் என்ன செய்ய வேண்டும்... ஐ நா வில் நடக்க இருக்கும் வாக்கு எடுப்பில் இந்தியா இலங்கைக்கு அதரவாக செயல் பட கூடாது என்று போரட்ட வேண்டும்........இந்தியாவிற்கு அழுத்தம் குடுக்க வேண்டும், நான் எதோ இந்தியாவை முன்றாம் நபராக பார்பதாக நீங்கள் என்ன வேண்டாம்.... நான் இந்தியவை எதிர்ப்பவன் அல்ல.... தமிழர்களை திரோகியாய் பார்க்கும் இந்த காங்கிரேசை தான் எதிர்கிறேன்.... இலங்கையுள் தமிழர்களை படுகொலை செய்யும் பொது அவர்களுக்கு ஆயுத உதவி செய்தது இந்த காங்கிரஸ் தான்..... தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்லும் போதும் சரி வாய் முடி இருந்தவர்கள் தானே இவர்கள், எங்கோ இருக்கும் சோமாலிய கடல் கொள்ளைகரர்களை பிடிக்கும் நமது கடலோர காவல் படை என்னோ தமிழ் மீனவர்கள் தாக்க படும் போதும் எங்கு போனார்கள் என்று தெரிய வில்லை.....

இன்னும் கூட தமிழகத்தில் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் மற்றும் தமிழ் இன கொலைகளை பற்றி தமிழகத்தில் பேச எந்த அரசியல் கட்சியும் முன் வரவில்லை.... எதோ சில அரசியல் சாராத இயகங்கள் அப்பொழுதில் இருந்து போராடி கொண்டு தான் இருக்கிறது.... அனால் தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசியல் நோக்கதிருக்கு மட்டுமே இதை பயன் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்...... திமுகவோ காங்கிரஸின் அடி வருடியாக இருந்ததது.... ஆதிமுகவோ அவர்கள் அப்பொழுது ஆட்சியுள் தான் இல்லை என்று பார்த்தல்.... அவர்கள் தமிழகத்தில் கூட இருந்தாக தெரிய வில்லை..... அனால் தேர்தலுக்கு முன்னால் ஒரு நான்கு மாசம் மட்டும் பிரசாரம் செய்து வென்று விட்டார்கள்..... இப்பொழுது அவர்களும் இவர்களை போல கடிதம் மட்டுமே எழுதி வருகிறார்கள்.

இப்பொழுது காங்கிரஸ் எல்லா மட்டத்திலும் அடி பட ஆரம்பித்தவுடன் அதன் அடிவருடியாக இருந்த திமுகா இப்பொழுது முழித்து கொண்டு இலங்கையுள் நடந்த போர் குற்றம் குறித்த சேனல் 4 ஆவன படத்தை கலைங்கர் தொலைகாட்சி யுள் ஒலிபரப்புகிறார்கள். அவர்கள்ளிடம் கேட்க நினைப்பது ஒன்று தான்.... 2009 இல் என்ன ______ பண்ணிக்கிட்டு இருதிங்க??????? அப்பொழுது நடந்த நாடகங்கள் நாம் கண்டிப்பாக மறக்க கூடாது.

நாம் பழைய கதைகள் பேசி கொண்டு இருப்பது பயன் அல்ல.... இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று பார்போம்..... இப்பொழுது ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். இப்பொழுதாவது என் தமிழ் இன சொந்தங்களுக்கு நடந்த கொடுமைகளை அனைவர்க்கும் கொண்டு சேர்க்க வேண்டும்... இந்தியா இலங்கைக்கு அதரவாக ஐ நா சபையில் வாக்கு அளிக்க கூடாது.. channel 4 இல் வெளியான கொலை களம் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை அன்னைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.... தமிழ் ஈழத்தில் நடந்த வன் கொடுமைகளை பற்றிய தெரிதல், அது பற்றிய புரிதல்கள் அனைவரும் பெற வேண்டும்... அதற்கு நாம் அனைவரும் கண்டிப்பாக பாடுபட வேண்டும்... முத்துகுமரன் மரண வாக்குமுலம் அனைவரும் படிக்கச் வேண்டும்.....

இப்பொழுதாவது என்னது மானம் உள்ள தமிழ் இனம் முழித்து கொள்ளுமா என்ற நப்பாசை இல் உங்களிடம் புலம்பும் உங்களில் ஒருவன்........

Thursday, February 23, 2012

ENCOUNTER க்கு பிறக்கு வேளச்சேரி.......

நேற்று இரவு தான் வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ??? என்ற ஒரு பதிவு போட்டு விட்டு... கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு இரவு 12 மணிக்கு தூங்க சென்று விட்டேன்... காலையில் எழுந்த உடன் ஒரே சோம்பல்.... என்று அலுவலகம் செல்ல வேண்டுமே என்று கடுப்பு ஒரு பக்கம்...... இன்று ஒரு நாள் விடுப்பு போட்டால் என்ன வென்று ஒரு சோம்பல்....... கடைசியுள் சோம்பல் ஜெவித்து அலுவகத்திற்கு விடுப்பு தெரிவிக்கலாம் என்று எண்ணி கொண்டு ..... எழுந்து தொலைகாட்சி ஐ அன் செய்தல்.... வங்கி கொள்ளையர்களை காவல் துறை என்கௌன்ட்டர் செய்த தகவல் அணைத்து சேனல் இல்லும் இந்த செய்தி தான்......

பரவா இல்லையா நமது காவல் துறை இப்பொழுது முழித்து கொண்து விட்டார்களே என்று எண்ணி கொண்து செய்தியை உற்று நோக்கினாள் அந்த இடங்கள் யாவும் எங்கோ பார்தது போல இருந்தது..... சரி எந்த ஏரியா என்று பார்த்தல், வேளச்சேரி, அடே நம்ம ஏரியா.... நேரு நகர், சரியாய் போச்சு எங்க என்று பார்த்தல் எனது தெரிவிருக்கு அடுத்த தெரு தான்...... அட பாவிகளா இங்க தான் இருந்திர்கள என்று எண்ணி கொண்து வெளிய வந்தால் பகத்து பெட்டி கடை காரரிடம் என்ன நா நம்ம ஏரியா வ இப்படி என்று கேட்டேன்.... அப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக தகவல் கசிந்து தெரிவில் மக்கள் சிறு சிறு குட்டமாக நின்று இதை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள்.......


சரி எனது அறைக்கு வந்து... நன்றாக குறைட்டை விட்டு தொங்கி கொண்டு இருந்த நண்பர்களை எழுப்பி விசயத்தை சொனேன்...... அவர்களும் ஒன்றும் தெரிய வில்லை..... கிட்டதிட்ட 200 அடி தான் இருக்கும் என்கௌன்ட்டர் நடந்தே இடத்திற்கும், என்னது ரூமிற்கும்.... இரவில் ஒரு சின்ன சத்தம் கூட கேட்க வில்லை..... ஆனால் போலீஸ் ஒரு மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்ததாக கூறுகிறார்கள்...... சரி போலீஸ் சிலேன்செர் பயன் படுத்தி இருக்கலாம்..... ஆனால் கொள்ளையர்கள் ???????

என்னது நண்பர் ஒருவரின் facebook பதிவு....

இவங்க அவங்கள பிடிக்க போனாங்களாம்... அவங்க ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு ரெடியா இருந்தாங்களாம்......

என்னையா கலர் கலரா ரீல் சுத்துறீங்க ?!?!

இதை எல்லாம் பார்க்கும் பொழுது எங்களுக்கு சந்தேகம் வருகிறது உண்மையுள் இது என்கௌன்ட்டர் தானா என்று.....

காலையில் டீ குடிக்க வழக்கமாக செல்லும் பாய் கடைக்கு சென்றோம்..... அங்கு சென்று பாய் ஐ வம்புக்கு இல்லுக்கலாம்.. என்று பார்தால்... உள்ள இரண்டு காவல் துறை ஆணையாளர்கள்.... டீ, வடை என்று ஒரு வெட்டு வெட்டி கொண்டு இருந்தார்கள்...... சரி அவர்கள் போகட்டும் என்று பொறுமையாக இருந்தோம்..... அப்பொழுது அவர்களுள் ஒருவர்க்கு தொலைபெசியுள் அழைப்பு வர... இருவரும் மாமனார் விட்டில் சாபிட்டு விட்டு செல்வது போல் சென்றார்கள்..... அதன் பிறர்க்கு பாய் இடம்.... என்ன அண்ணே.... உங்களுக்கும் அந்த பசங்களுக்கும் ஒரு link இருக்குனு வெளிய சொல்லுறாங்க அப்படியா என்று கேட்டேன்... உடனே அவர் ஏப்பா சும்மா இருங்க பா... இப்போ தான் போலீஸ் போகுது.... என்னே அண்ணே உங்கள் தொகிடுவன்களா என்று கேட்டேன்... எப்படி தொகுவங்கே???? அதான் ஓசி டீ, வடை எல்லாம் குடுத்து இருக்கேனே என்று கூறினர்...... இனிமேல இந்த ஏரியா ல north indians ah பார்க்க முடியாது போல என்று கேட்டேன்.... அதற்க்கு அவர்.... இவங்க எங்களை (முஸ்லிம்) தான் சந்தேகம் படுவாங்க.... north indians வந்தா விட்டு விடவார்கள் என்று கூறினர்... இதும் உண்மை தானே.....

எதோ ஒன்று, இரண்டு, முஸ்லிம் இன் தவரான அணுகு முறையால் ..... எல்லா முஸ்லிமையும் கூறை கூருவது, சந்தேகம் படுவது ஏற்புடையது அன்று...... அவர்களும் நம்மை போல் ஒரு சாதாரண வாழ்கை நடத்தும் மக்கள் தானே...... இவர்களை மட்டும் ஒரு சந்தேக பார்வை பார்ப்பது நல்லவா இருக்கு....

corparation bank atm பக்கத்தில் தான் இந்த encounter நடந்து இருந்தது. சரி அந்த பக்கம் சென்று நிலைமை எப்படி என்று தெரிந்து வரலாம் என்று அந்த பக்கம் சென்றேன்...... அங்கு ஒரு போலீஸ் பேருந்து நிறைய காவலர்கள் ஒவொருவராக வந்து கொண்டு இருந்தார்கள்..... அப்போதுதான் majistrate விசாரணை முடித்து கிளம்பினர், அல்லது வேறு முக்கியமான நபர் வந்து பார்த்து விட்டு சென்று இருக்கலாம்..... அந்த இடம் முழுவதும் மீடியா, போலீஸ் என்று அந்த இடம் முழவதும் ஆட்கள் நிரம்பி இருந்தனர்.... அந்த தெரிவிற்குள் பொது மக்கள் யாரையும் அனுமதிக்க வில்லை...... என்னவே என்னால் சென்று பார்க்க முடிய வில்லை.......

அந்த இடதில் இருந்த பொது மக்கள் தங்களுடைய தொலைபெசியுள் பேசி கொண்டு இருந்தார்கள்..... அவற்றை ஒட்டு கேட்கும் போது கேட்ட சில வரிகள்.....

  1. மச்சி நா அப்போ அங்க தண்டா இருந்தேன்..... நைட் ஒரு சத்தமா இருந்துச்சு வெளிய வந்தா போலீஸ் துப்பாக்கி ல சுட்டு கிட்டு இருந்தாங்க
  2. போலீஸ் என்னிடம் தான் வழி கேட்டார்கள்.....
  3. போலீஸ் வருவதை முதலில் பார்த்ததே நான் தான்....
  4. போலீஸ் அந்த பசங்களை பற்றி என்னிடம் தான் கேட்டார்கள்
  5. அந்த பசங்கள என்னக்கு நல்லாவே தெரியும்... அவனுக்கே யார்கிட்டையும் அதிகமா பேச கூட மாட்டார்கள்.....
  6. நம்ம தேருக்கு பக்கத்துல தான் அவனுக இருந்தானுக.....

என்று விதம் விதமாக தொலைபெசியுள் கூறி கொண்டு இருந்தார்கள்...... இதை எல்லாம் என்னக்கு கேட்க்கும் பொழுது சிரிப்பு தான் வந்தது...... வதந்திகள் இப்படி தான் கிளம்பு கிறார்கள்.... ஒரு விசயம் நடந்தால்.... தனக்கு எதுவம் அதை பற்றி தெரியாது என்று கூறினால் நம்மை சுற்றி இருபவர்கள் நம்மை மதிக்க மாட்டார்களோ என்ற ஒரு சின்ன காரணத்திற்கு இப்படி வதந்திகள் கிளும்புகின்றன........ இதற்கு மேலாக எனது நண்பன்... அவனது அலுவலகதிற்கு தொலைபசியுள் அழைத்து ஒரு மணி நேரம் permission காரணம், போலீஸ் யாரையும் தெருவை விட்டு வெளிய வர கூடாது என்று கூறி இருக்கிறார்கள்..... என்று கூறி பெர்மிச்சியன் வாங்கி விட்டான்.... என்ன கொடுமை சார் இது..........

காலை 11 மணிக்கு வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் அனைவரும் சென்று விட.... இல்லத்து அரசிகள்... கூட்டம் கூட்டமாக அந்த தெருவிற்கு சென்று வந்து கொண்டு இருந்தார்கள், எக்கா உன்னக்கு விசயம் தெரியுமா இவனுக அங்க வழிப்பறி பண்ணினன்களா அவனுகளா.... பேங்க் ல கொள்ளை அடிச்சா பணத்தை அந்த விடல தான் இன்னும் இருக்கமே... உனக்கு தெரயும்மா????? எங்க விட்டுக்காரர் தான் சொன்னாரு..... என்று பெண்கள் ஒரு பக்கம் வதந்தியை கிலோ கணக்கா பரப்பி கொண்டு இருக்க..... நான் எனது விட்டிருக்கு பகத்தில் இருக்கும் பெட்டி கடை காரரிடம் சும்மா ஒரு மொக்கையை போட அப்பொழுது அங்கு வந்தே பெரியவர்..... இந்த பொம்பளைங்க எங்க கூட்டமா பொய்த்து வரலுங்க... என்ன திருவிழவா என்று கேட்டார்.... நான் கூறினேன்... அதான் நேற்று திபாவளி கொண்டடி இருகண்களா அதான் என்று கூறினேன்... அந்த பெண்களை திட்டி கொண்டு பெரியவர் புலம்ப ஆரம்பித்தார்..... நான் கேட்டேன் பெரியவரே இந்த பசங்களுக்கு விடு பார்த்து குடுத்த புரோக்கர் யாருன்னு கேட்டேன்.... இதுல்லாம் இப்படி நடக்கும்னு யாருக்கு பா தெரியும்..... வரும் பொது எல்லாம் நல்ல பசங்கள தான் இருகாங்க..... ஆனா இப்போ.... என் நானே அவர்களுக்கு அந்தே விட்டை முடித்து குடுத்து இருக்கலாமான்னு சொல்லுறார்.....

அவரிடம் அண்ணே அந்த வீடு விலைக்கு வந்தால் சொல்லுங்கள் கம்மியான விலைக்கு வாங்கி விடலாம்.... என்ன ஐந்து நபர்கள் செத்த வீடு... ஒருத்தன் வர மாட்டன்.... நாமா அத வாங்கிடலாம்......

எங்களுக்கு உள்ள வருத்தம் என்ன வென்றால் பக்கத்துக்கு தெரிவில் தான் இருந்து இருந்தான் .... ஒரு ஷேர் குடுத்து இருக்கலாம், பாவிபய... கூடவே சுத்துறிய செவாலை நீயாவது இத கேட்க மாட்டிய..... எங்கங்க கேட்கிறான் கண்ட கண்ட போலீஸ் எல்லாம் வந்து என்கௌன்ட்டர் பண்ணும் சொன்னா கேட்கிரேன..... இப்போ என்கௌன்ட்டர் அச்சுல........


இனிமேல எங்களுக்கு எங்க ஏரியா வில் உள்ள problems.......

  1. இரவு பத்து மணிக்கு மேல் வெளிய வரே முடியாது.....
  2. எப்பொழுதும் போலீஸ் ரவுண்டு ஆப் இருக்கும்......
  3. இந்த ஏரியா வில் இருக்கும் பெச்லோர்ஸ் பசங்க எல்லாரயும் ஒரே சந்தேக பார்வை உடன் தான் பார்ப்பார்கள்....
  4. சும்மாவே பெச்லோர்ஸ் க்கு வீடு குடுக்க மட்டங்க... இப்போ இது வேரயா.......
  5. இந்த ஏரியா வில் இருக்கும் நோர்த் இந்தியன்ஸ் எல்லோரும் மீதும் போலீஸ் பார்வை பயங்கரமா இருக்கும்........ (நம்ம ஆளுங்க ஒரு விசயம் நடந்த பிறர்க்கு தான் அந்த விசயம் பத்தி கவனம் செல்துவார்கள்.... உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் சொல்லுவது போல்..... ஒரு தீவிரவாதி வயதில் குண்டு வைத்து வந்தால்..... வருபவர்கள் அனைவரையும் வயதில் மட்டும் தேடி பார்ப்பார்கள்..... ஒருவன் காலில் குண்டு வைத்து வந்தால் அவனை விட்டு விடுவார்கள் )
  6. பெச்லோர்ஸ் பசங்க அனைவரின் அட்ரஸ் உம் வாங்க படும்

இந்த என்கௌன்ட்டர் பற்றி இணையத்தில் வரும் தகவல்கள் பார்க்கும் பொது உண்மையுள் இந்த என்கௌன்ட்டர் தேவை தானே என்று யோசிக்க தோன்றுகிறது....... இவர்கள் அப்படி என்ன தப்பு செய்து விட்டார்கள்..... வங்கியுள் பணத்தை கொள்ளை அடித்தார்கள் அவோலோதனே ..... இவர்கள் என்ன கொலை, கற்பழிப்பு என்று தேச துரோக செயல்களா செய்தார்கள்...... இவர்கள் பணம் கொள்ளை அடித்து தவறு என்று நீங்கள் கூறினால் அப்படி என்ன்றால் ஜெயா, கருணா, ராஜா, இவர்களை என்ன செய்யலாம் ??? நீங்களே கூறுங்கள், சிறிதாக வழிப்பறி, செயின் பறிப்பு, பிக் பாக்கெட் என்று செய்தல் பொது மக்கள் தரும அடி, போலீஸ் லாக் அப்..... பெரிய spectrum கொள்ளை நில அபகரிப்பு என்று போனால் ஜெயில் தண்டனை, உச்ச நிதிமன்றம், வைத்தா... என்று இழுத்து அடிபர்கள்.....

ஆனால் இவர்களை போல வங்கி கொளையர்களை மட்டும் என்கௌன்ட்டர் என்றால் என்ன நியாயம் மக்களே ..... நீங்கேள கூறுங்கள்.... இந்த என்கௌன்டர் போலீஸ்இன் மரியாதையை, காப்பறு வதற்காக செய்ய பட்டது என்றே நான் கூருவேன்.... கடந்த ஒரு மாதமாக போலீஸ் ஐ எல்லோரும் திட்டி தான் வருகிறார்கள்... ஒரு வங்கி கொள்ளை அடிக்க பட்டு உள்ளது... இவர்கள் என்னதான் செய்யது கொண்டு இருக்கிறார்கள் ....... இவர்கள் இந்த கொள்ளைகரர்களை பிடிக்க ஒரு துப்பு இல்லை என்று அனைவரும் கூறி கொண்டு தான் இருக்கிறார்கள்,.... அந்த நேரத்தில் இரண்டாவது வங்கியும் கொள்ளை அடிக்க பட்டு விட கொதித்து பொய் விட்டது இந்த மானம்கெட்ட காவல் துறை...... அவர்களை பற்றி ஒரு தொலைபேசி அழைப்பு வந்த உடன் ஒரு பட்டலியன் உடன் போலீஸ் வந்து அனைவரையும் கொன்று விட்டது .... எது என்ன என்று விசாரிக்க கூட வில்லை...... ஒருவனை யாவது உயிரோடு பிடித்து இருந்தால் இவர்களை பாராட்டி இருக்கலாம்...... ஆனால் இவர்கள் செய்தது பேர், பெருமைக்க செய்த என்கௌன்ட்டர் இதில் பெருமை வேறு...... தமிழகத்தில் நடந்த மிக பெரிய என்கௌன்ட்டர் இது தான் என்று.......


நாம் கசாபைய உயிரோடு கறியும் சோறும் போட்டு தான் பார்த்து கொண்து இருக்கிறோம்...... பணத்தை கொள்ளை அடித்து தவறு தான்.... நாங்கள் இதை தவறு இல்லை என்று கூறவில்லை..... ஆனால் அதற்க்கு என்கௌன்ட்டர் ரொம்ப அதிகம்..... அட்லீஸ்ட் ஒருவன் வது உயிரோடு பிடித்து இருக்கலாம்...... மனித உயிர் என்றால் இவர்களுக்கு அவொலோ கேவலமா...... இவர்கள் north indians ...... இவர்களை போட்டாள் கேட்க ஆல் கிடையாது என்று கையாலகாத காவல் துறை தனது கை வரிசை காட்டி இருக்கிறது... இது உண்மையுள் பெருமை படவேண்டிய விசயம் அல்ல....... வருத்த பட வேண்டிய விசயம்........ நான் வேறு யாரும் அல்ல உங்களுள் ஒருவனாக இந்த சமுக அவலங்களை பார்த்து கொண்டு இங்கு புலம்பி கொண்டு இருக்கும் ஒரு சாதரனே சாமானியன்..... நான் உங்களுள் ஒருவன்.........