Sunday, September 30, 2012

நடு நசியும், பழுதடைந்த பேருந்தும்...


நான் (22.09.12) அன்று இரவு மதுரை வரை செல்ல இருந்தது... என்னவே கோயம்பேடு சென்று எதாவது பேருந்தில் இருக்கை கிடைக்குமா என்று பார்க்கும் பொழுது, ஒரு குளிர் சாதனா பேருந்தில் மட்டுமே இருக்கை கிடைத்தது, சரி குளிர் சாதனா பேருந்தக்கா இருந்தால் என்ன, நாம் மதுரை சென்றால் போதும் என்று பேருந்தில் ஏறி பயண சீட்டும் பெற்று கொண்டன்...

பேருந்து கிளம்பிய சிறுது நேரத்தில் எல்லாம் என்னது பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து இருந்தவர் ஓட்டுனர் இருக்கை அருகே சென்று அமர்ந்து கொண்டார், சரி நமக்கும் வசதியாக போயிற்று என்று எண்ணி கொண்டு நன்றாக காலலை நிட்டி உறங்குவதற்கு எதுவாக உக்கார்ந்து கொண்டேன், சிறுது நேரத்தில் பக்கத்துக்கு இருக்கையில் உக்கார வேண்டியவர் என்னது அருகில் வந்து என்னை எழுப்பி விட்டு, அவரது பையை எடுத்து கொண்டு சென்றார், அப்பொழுதுதான் நான் கவனித்தேன், பேருந்து எதோ நடு ரோட்டில் நிற்பதை, முன்னால் இருந்தது சிறுது சிருதாக புகை வருவதை கண்டேன்.... யாரு டா பேருந்தில் புகை பிடிப்பது என்று எண்ணி கொண்டு பேருந்தை விட்டு இறங்கி பார்த்தால் என்ஜின் இல் இருந்தது புகை வந்து கொண்டு இருந்தது,


நமக்கு இருக்கும் அறைகுறை அறிவோடு டிரைவர் இடம் என்னன்னா ரடியாடேரில் தண்ணீர் இல்லையா என்று கேட்டேன், அதற்கு அவர் இல்லை தம்பி, என்ஜின்ல ஆயில் இல்லை போல் இருக்கிறது என்றார், அதற்குள் அந்த பகுதியை சார்ந்த சில நபர்கள் பேருந்து நடுரோட்டில் நிற்பதை பார்த்து வந்து விட்டார்கள், அதில் ஒருவர் மெக்கானிக் என்று கூறி கொண்டு என்ன ஆச்சு என்று கேட்க, டிரைவர் பேருந்தின் பழுதை கூற பேருந்தை இப்பொழுது இயக்க முடியாது, குறைந்தது இரண்டு மணி நேரம் வண்டியை அப்படியே நிறுத்தி என்ஜின் குளிரந்துடன் தான் திரும்பவும் ஆயில் உற்றி என்ஜின் ஐ இயக்கினால், வண்டி இயங்க வாய்ப்பு உள்ளது, அதவும் சதவிதம் கம்மி தான்.

நேரம் இரவு 11.30. இடம் செங்கல்பட்டில் இருந்தது மதுரந்தங்கம் செல்லும் வழியில் உள்ள ஒரு சிற்றூர், அந்த பகுதியை சார்ந்த மக்கள் உடனிடியாக எங்கு இருந்தோ சில செடி கொடிகளை பறித்து வந்து பேருந்தை சுற்றி வைத்து விட்டு டிரைவர் இடம், ஐயா முதலில் பேருந்தில் இருபவர்களை கிழ இறங்கி பாதுகாப்பான இடத்தில் நிற்க சொல்லுங்கள், அவர்கள் பேருந்தில் உள்ள இருப்பது ஆபத்து, இது மிகவும் மோசமான இடம், இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கும். என்று கூறி லோக்கல் போலீஸ் கும் தகவல் குடுத்தனர்.


டிரைவர் இடம், அவருது டிப்போ நம்பர் கூட இல்லை, அவரிடம் கேட்டால் இப்பொழுது தான் புதிய மொபைல் வாங்கி இருப்பதாகவும், எல்லா நம்பரும் தனது பழைய மொபைல் இல் தான் இருபதக்வும் மிகவும் சாதரணமாக கூறினார். அவர் மீது கோவம் வந்தாலும் அந்த நேரத்தில் காட்டுவது சரியான தருணம் இல்லை என்பதால் நான் ஒன்றும் கூற வில்லை. என்னது பேருந்தில் பயணம் செய்த ஒரு பெரியவர், வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்த ஒருவர், கிட்டதிட்ட டிரைவர் இடம் சண்டை போடும் அளவுக்கு பொய் விட்டார். சரி அவரை சமாதானப் படுத்தாலும் என்று அவரிடம், ஆன்னே கோவ படாதிங்க, பார்த்துக்கலாம், என்று அவரிடம் சொன்னால், அவர் இப்பொழுது ஏன் மீது கோவத்தை திருப்பி விட்டார்.

அவரை ஒரு மாதிரி சமாளித்து, பேருந்து உள்ளே சென்று எனது பேக்கை எடுத்து விட்டு, அங்கு இருந்தவர்களிடம், இதற்கு மேல் பேருந்து செல்லாது, என்னவே ஒருவர் ஒருவராக கிழ இறங்கி சாலை ஐ கடந்து சென்று நில்ல்லுங்கள் என்று கூறி, அவர்களை சாலை கடபதற்க்கு உதவி விட்டு, சாலை ஓரத்தில் நிற்கும் போதே, சாலையோர பாதுகாப்பு போலீஸ்காரர்க்கள் வந்து விட்டார்கள், அவர்கள் இங்கு என நிற்கிர்கள்?? டிரைவர் ஐ எங்கே என்று கேட்க, நான் அவரிடம் பதில் கூறி கொண்டு இருக்கும் போதே, அந்த வெள்ளை சட்டை மனிதர் அங்கும் வந்து விட்டார். வழக்கம் போல் இந்த டிரைவர்களின் கவண குறைவு தான் காரணம், அச்ச புச்ச என்று கத்த தொடங்கி விட்டார். நான் அவரிடம் அண்ணே கொஞ்சம் சமாதானமே இருங்கள், அடுதத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்போம், அதற்கு அவர், நீ வாயே முடித்து சும்மா இரு, நா யாருன்னு தெரியுமா??? நான் ஒரு முத்த பத்திரிகையாளன், தினமலரில் (தினமலம்) 31 வருடம், ஹிந்துவில் 9 வருடம் நிருபராகக இருந்தது வருகிறேன், நான் யாரிடம் வேண்டும் என்றால்லும் பேசுவேன், போலீஸ், அரல்சியல்வாதி, மினிஸ்டர் என்று யாரிடம் வேண்டும் என்றாலும் நான் பேசுவேன், நீ யாரு டா என்னக்கு அறிவுரை சொல்லே.... ஏன் கண் முன்னே நிற்காதே என்ற கத்த தொடங்கி விட்டான். நான் நினைத்து கொண்டேன் தினமலர் (தினமலம்) பத்திரிக்கை போல் தான்அதன் பத்திர்க்கையாளர்களும் இருப்பார்கள் போலும்.

நான் ஒன்று கேட்கிறேன், இதை போன்ற ஒரு அவரச காலத்தில், நின்று கொண்டு இருக்கும் பொது, எதனால, யாரால தவறு, யார் அதற்க்கு பொறுப்பு என்று விவாதம் செய்து கொல்ல அது சரியான நேரம் அன்று. அந்த இடத்தில் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும். என்ன செய்தால் அங்கு இருப்பவர்கள் அனைவரையும் பத்திரமாகப் அவர்கள் செல்ல வேண்டிய இடதிற்கு போவதற்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு டிரைவர் தான் காரணம், அரசு அதிகாரிகள் இப்படி தான், முறைகேட்ட அரசாங்கம், என்று திட்டுவதால் எந்த பயனும் இல்லை. நாம் அங்கு என்ன செய்ய போகிறோம் என்பது தான் அங்கு முக்கியம்.


உள்ளூர் காரர் ஒருவோருடன் சேருந்து கொண்டு அந்த வழியாக செல்லும் பேருந்துகளை வழிமறித்து. இருக்கும் இடங்களில் எங்களுள் இருக்கும் வயதானவர்கள், பெண்களை முதலில் ஏற்றி விடலாம் என்று ஓவருவொரு பேருந்தகா கை காட்டி கொண்டு இருந்தோம். அந்த சாலை இரவு நேரத்தில் மிகவும் போகுவரத்து நெரிச்சல் மிகுந்தாக இருந்தது, லாரி, டேங்கர் லாரி, ஆம்னி பஸ் என்று மிகவும் பிஸி வாகவே இருந்தது. எங்களுடன் பெண்கள், கை குழந்தைகள் என்று ஒரு பெரிய குட்டமே இருந்தது. நாங்கள் கை காட்டி நிறுத்திய முதல் பேருந்தில் முதல ஆளாக ஏறியது வேறு யாரும் இல்லை. அந்த வெள்ளை சட்டை காரன் தான். அவன் உண்மையில் மக்கள் மீது அக்கறை உள்ள பத்திரிகை காரனாக இருந்தால் எங்களுடன் நின்று பெண்கள் மற்றும் குழந்தைகளை அனுப்புவதற்கு உதவி செய்து கொண்டு இருந்தது இருக்கே வேண்டும், ஆனால் அவன் அப்படி இல்லை.

அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அங்கு வந்து விட்டார். அவர் வந்து சத்தம் போடவும், அதற்குள் எங்கு இருந்தோ பஸ் டிப்போ நம்பர் வாங்கி தகவல் குடுத்து விட்டார் நமது டிரைவர். ஐயா ஒரு புதிய பேருந்து சென்னையில் இருந்தது கிளம்பி விட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு வந்து விட்டும் என்றார். நாங்கள் அந்த இடத்திற்கு வரவே இரண்டுஅரை மணிநேரம் அச்சு. அதில் இருந்தது சிறுது நேரத்தில் காவல் துறையும் சென்று விட்டது. இரண்டு கான்ஸ்டபள் மட்டும் காவல் வண்டியில் குறட்டை விட ஆரம்பித்து விட்டார்.

எங்களுடன் பணியில், நடு இரவில், நடு ரோட்டில் இருந்த கை குழந்தைகளுடன் இருக்கும் பெண்களை பார்த்தால் எங்களுக்கு பாவமாக இருந்தது. சரி அவர் சொன்னா பேருந்து வருவது வரை காத்து இருந்தால் கதைக்கு ஆகாது.... என்னவே உள்ளூர் நபர்களுடன் சேருந்து திரும்பவும் வருகிற அரசு பேருந்துகளை கை காட்டினோம், ஒருவர், இருவராக கிடைக்கும் பேருந்தில் ஏற்றி விட்டு கொண்டு இருக்கும் பொது, எங்கள் பேருந்தில் பயணம் செய்த சக குடிமகன், எங்களிடம் வந்து ஏய் நெ யாரு, நீ எதுக்காக பேருந்தை நிப்பாட்டுகிறாய், நான் பயண சிட்டு வாங்கியது குளிர் சாதனா பேருந்தில், சாதாரண் பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடியாது, அதான் கண்டக்டர் கூறினர ஒரு பேருந்து வருகிறது என்று அது வருவது வரை யாரும் எங்கும் செல்ல வேண்டாம். எல்லாரும் இங்கைய நிற்போம் என்று எங்களிடம் வம்புக்கு வந்தார், அவனிடம் கேட்டோம் ஐயா நீங்கள் தனியாக வந்து இருகிர்ர்களா இல்லை பெண்களுடன்வந்து இருகிர்ர்களா என்று??? ஏன் என்றால் பெண்களுடன் வந்து இருந்தால் அவர்களுது பாதுகாப்பு தான் முக்கியம். என்று கிடைக்கும் பேருந்தில் ஏறி கிளம்பி விடுவான். ஆனால் தனியாக வந்தால் அந்து பிரச்சினை கிடையாது. அதற்கு அவன் பெண்களுடன் தான் வந்து இருக்கிறேன் என்றான். அதற்க்கு என்னுடன் கூட இருந்த உள்ளூர் வாசி, ஐயா அப்படி என்றால் சற்று தள்ளி இருங்கள், பேருந்து வந்த உடன் உங்களை ஏற்றி விடுகிறோம், அது வரை பொறுமையாக இருங்கள். என்று கூறி விட்டு. திரும்பவும் கை காட்ட தோங்கினோம். ஆனால் அந்த குடிமகன் உடன் எந்த பெண்ணும் வரவில்லை. எபப்டி தான் இப்படி ஒரு இக்கட்டான நிலைமையிலும் நான் எடுத்தது குளிர் சாதனா பேருந்துக்கு பயண சிட்டு பெற்று கொண்டு, சாதாரண பேருந்தில் செல்ல மாட்டேன் என்று கூருகிறான்????


எனக்கு இந்த இடத்தில் அன்பே சிவம் படத்தில், கமல்கும் மாதவனுக்கும் இடையில் நடக்கும் ஒரு உரையோடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
மாதவன்: பணம் இருந்தாலும் வசதி கிடைக்காத ஒரே நாடு இந்தியா தான்.
கமல்: பணம் இருப்பவர்கள் எதை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று என்னும் வரையில் இந்தியா இப்படிதான்

அப்பொழுது அங்கு வந்த இன்ஸ்பெக்டர், ஏம்பா தம்பிநீ போகலியா என்று கேட்டார். இல்ல சார். நான் தனி ஆள் தான், நான் கடைசியாக போகிறேன், முதலில் இங்கு இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அனுப்பி விட்டால் பிறக்கு நிம்மதியாக போகலாம் சார், என்றேன். அதற்கு அவர் என்னக்கு கை குடுத்து, நன்றி நண்பா... என்று கூறினார்.

கிட்ட திட்ட எல்லாரயும் வந்த பேருந்தில் ஏற்றி விட்டாச்சு, இன்னுமும் இரண்டு குடும்பம் மட்டும் ஒரு ஜோடி மட்டும் தான் பாக்கி, அப்பொழுது ஒரு பேருந்தில் ஒரே ஒரு சிட்டு மட்டும் தான் பாக்கி இருந்தது, என்னுடன் இருந்தவர்கள் தம்பி நிங்க போங்கப்பா.... நாங்க மற்றவர்களை பார்த்து அனுப்பி வைக்கிறோம் என்று கூறிய பின்னேர நான் அந்த பேருந்தில் ஏறினேன்... அப்பொழுதும் நாங்கள் வந்த பேருந்தின் டிரைவர் பழுது அடைந்த பேருந்தின் பின் புறம நின்று கொண்டு எல்லா வண்டிகளும் விலகி செல்லுமாறு கை அசைத்து நடு ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். உண்மையில் அவரை பாராட்ட வேண்டும் என்று என்னது மனம் கூறியது.

திருச்சியை தாண்டி ஒரு டீ கடையில் வண்டியை நிறுத்தினார் நான் வந்த பேருந்தின் டிரைவர், அங்கு சிறுது நேரத்தில் எங்களுக்கு பின்பு இரண்டு குளிர் சாதனா பேருந்து வந்தது. அதில் அந்த இரண்டு குடும்பமும் அதில் பத்திரமாக வந்து இருந்தார்கள். முதலில் பார்த்தது அந்த குடிமகனை தான், சரி அவரிடம் சென்று விசாரிக்கலாம் என்று அவரிடம் என்ன அண்ணே பஸ் எல்லாம் சய்கரியமாக இருக்கிறதா என்று கேட்டன. ம்ம இருக்கு என்று கூறி விட்டு சென்று விட்டார். ஆனால் அந்த இரண்டு குடும்பத்தை சேருந்த ஆண்களும் என்னை பார்த்த உடன், ஒரு நட்பு புன்னகையுடன், தம்பி நாங்கள் இந்த பேருந்தில் தான் வந்தோம், உங்களுக்கு எப்படி சய்கரியமாக இருக்கிறதா என்று விசாரித்து விட்டு தான் சென்றார்கள்.

அவர்களுக்கு கடைசி வரை ஏன் பெயர் கூட தெரியாது. பெயரில் என்ன இருக்கிறது... அவர்களுள் ஒருவனாக நின்று அவர்களின் கஷ்டத்தை கடைசிவரை இருந்தது பார்த்து விட்டு, அவர்களுக்கு முடிந்தவரை பாதுக்காப்பாக பார்த்து கொண்டு இருத்த சாதாரண சாமானியன். நான் வேறு யாரும் இல்லை, உங்களோடு ஒருவனாக இருந்தது தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகளை பார்த்து கொண்டும்அதை திர்க்க பாடுபடும் உங்களுள் ஒருவன்.

சென்னையில் குளிர் சாதன பேருந்தில் ஏறி, சாதாரண பேருந்தில் கடைசி சீட்டில் பயணம் செய்து மதுரையில் இறங்கி இருக்கிறேன். என்ன கொடுமை சார் இது??????

Tuesday, September 04, 2012

Postmortem செய்யும் அரசு அதிகாரிகள்....

உன்னை போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசன் சொல்லுவது போல் வயற்றில் குண்டு வைத்த ஒருவன் வெடித்து விட்டால் .... உடனே அனைவரின் வைறு பகுதியும் சோதனை செய்து விட்டு.... காலில் குன்டோடு வருபவனை விட்டு விடுவார்கள்.....

அதை போல் தான் நமது தமிழக அரசு மட்டும் அல்ல அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள்..

சிறிது நாட்களுக்கு முன்பு பள்ளி பேருந்தில் பயணம் செய்த சுருதி என்ற சிறுமி பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையில் விழுந்து உயிர் இழந்தால்... அதில் இருந்து சரியாக முன்றாவது நாளில் சுஜிதா என்ற சிறுமி பேருந்தில் இருந்து இறங்கும் பொது டிரைவரின் கவன குறைவால் அந்த சிறுமி இறங்குவதற்கு முன்பே பேருந்தை எடுக்க பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில்லையே சிறுமி பலி...

உச்ச நீதிமன்றத்தின் சவுக்கடி கேள்விக்கு பின் தமிழக அரசு உடனடியாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளுக்கும் உடனடியாகக FC (Fitness Certificate) சில ஆயிரங்களுக்கு குடுக்கவும் பட்டது.. இப்பொழுது FC ஆ அப்படினா என்னனு இப்போ கேட்கிறாங்க...

சிறிது நாட்களுக்கு முன்பு பள்ளிக்குட நிச்சல் குளத்தில் ஒரு மாணவன் பலி ஆன சம்பவம்... அப்பொழுதும் சிறுது நாட்களுக்கு அதை பற்றி தான் பேச்சு.... பேருந்தில் பலி ஆன சிறுமிக்கு கிடைத்த நியாயம் கூட இந்த மாணவனுக்கு கிடைக்க வில்லை... ஏன் என்றால் அந்த பள்ளி குட நிர்வாகி ஆதிமுக வில் பெரிய ஆள்... அந்த வழக்கு அப்படியே பின்னுக்கு தள்ளப்பட்டது...

இப்பொழுது மீண்டும் சென்னையில் உள்ள அரசு மருத்தவமனையில் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை அரசு மருத்வமனைகே உரித்தான சுகாதார கேடு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு... ஆகிய பல்வேறு காரணகளால்

சொன்னால் வேட்கே கேடு... ஒரு குழந்தையை மருத்துவமனையில் வைத்து இருக்கும் லேட்சணம் _______

ஒரு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை ICU Ward இல் வைத்து இருந்த லட்சணம்....எலி கடித்து அந்த குழந்தை இறந்து விட்ட செய்தி கிட்டதிட்ட எல்லா செய்தி தொலைகாட்சி மற்றும் தினசரிகளிலும் வந்தது. அனைவரும் அறிந்தது தான். ஆனால் அதன் பிறகு நடந்துதான் உச்சகட்ட காமெடி..

நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்.... அவர்களுது கட்சி ஆட்கள் போல் கூற வேண்டும் என்றால் இந்த பதிவு முழுக்க அம்மாவின் அடைமொழி மட்டுமே சொல்ல வேண்டும். ICU Wardஇல் ஒரு குழந்தையை எலி கடித்து இறந்தால் என்ன காரணம்.. அங்கு சுகதார கேடு இருக்கிறது அதனால் தான் எலி வருகிறது. அங்கு எப்படி சுகாதார கேடு ஏற்பட்டது??? பக்கத்தில் ஒரு கையேந்தி பவன் இருக்கிறது அங்கு அனைவரும் சாப்பிட்டுவிட்டு அந்த உணவு கழிவுகளை அப்படியே போட்டு இருப்பதால் தான் இந்த சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது என்று தனது ஞானம் திருஷ்டி இல் கண்டு பிடித்து தன் பயனாக உடனடியாகக் ரோடோர உணவு விடுதிகள் அன்னத்தையும் அகற்றி விட்டு இன்னி அரசு மருத்துவமனையில் தங்கி இருப்பவர்கள் அனைவரும் மருத்தவமனை உணவு விடுதியுள் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டுமாம்.... அம்மா நீங்க great மா... நீங்க மணிக்கு ஒருமுறை நீங்கள் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து கொண்டே இருகிரிக்கள்....


அரசு மருத்துவமனைக்கு யார் வருவார்கள், வறுமை கோட்டிற்கு கிழே இருபவர்களும், முடியாதவர்களும், அவர்களின் வசதிக்கு ஏற்ப எதோ முடிந்ததை வாங்கி தனது பசியை போக்கிகொள்கிரர்கள்... சொல்ல போனால் அரசு மருத்தவமனை உணவு விடுதியை விட ஆயிரம் மடங்கு நன்று சாலையோர கையேந்தி பவன்கள்.... அவர்கள் உணவில் இருக்கும் சுவை, சுகாதாரம், சில உயர்தர உணவு விடுதியுள் கூட கிடைப்பது இல்லை, ஏன் என்றால் சென்னையில் பல தரப்பட்ட உணவு விடுதியுள் சாப்பிட்ட அனுபவம் தான்.

அம்மா சாலையோர உணவு விடுதிகளால் சுகாதார கேடு அறவே கிடையாது.. சுகாதார கேடு எப்போது ஏற்படுகின்றது என்றால் நடு ரோட்டில் கிடக்கும் குப்பைகளை அகற்றாமல், சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்றுகிறேன் என்ற பெயரில் அதை ஊர் முழுவதும் தெளித்து விட்டு செல்லும் நமது கார்ப்ரேஷன் தான். முதலில் அரசு மருத்துவமனையில் நோயாளிககளுக்கு போதிய வசதிகள் கிடையாது, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் தனக்கு ஏன சொந்தமாக ஒரு கிளினிக் வைத்து கொண்டு.. அங்கு வர சொல்லி பணம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய மருந்த்கள் கூட கையிருப்பு இருப்பது இல்லை... என்னது சின்ன வயதில் ஒரு முறை ஆற்றில் குளிக்கும் பொது உடைந்த பாட்டில் காலில் கிழித்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது.. அப்பொழுது பக்கத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றேன். அங்கு மருத்துவரோ, நர்ஸ் என்று யாரும் இல்லை, வார்டு பாய் என்று அழைக்க படும் ஒருவர் மட்டுமே இருந்தார், அவர் என்னிடம் கூறினார், மயக்க மருந்து இல்லை கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள் என்று கூறி என்னது காலில் ஐந்து தையல் போட்டார்.. என்னது விதியை நினைத்து சிரித்து கொண்டு அந்த வலியையும் ஏற்று கொண்டேன்.

இந்த லேட்சனத்தில் தான் இருக்கிறது நமது அரசு மருத்துவமனைகள், அந்த குழந்தை இறந்ததற்கு யாறுடைய கவனகுரைய்வு, அலட்சியம் அன்று கண்டுபிடித்து அவர்களைபணியை விட்டு நிக்காமல் எலிகளை பிடிக்க இந்த அம்மா உத்தரவு போட்டு கொண்டு இருக்கிறது.

அம்மா உங்களுது ஆணவத்தால் புதிய தலைமை செயலகம், கிழக்கு ஆசியாவில் மிக பெரிய நூலகம் ஆகிய வற்றை மருதுவனையாக மாற்ற முயலாமல் ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளை சுகாதாரத்தை மேம்படுதுவும், போதிய மருத்துவ வசதிகள் பெருக்கவும் முயற்சிகள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும், அதைவிட்டுவிட்டு எலி பிடிக்க ஆட்களை போடுவது நன்றக்கவா இருக்கிறது???

இந்த விஷயத்தை பத்தி எந்தன் முந்திய பதிவு.

“Prevention is better then cure.” வருமுன்னே காப்பது தான் சால சிறந்தது, அதை விட்டுவிட்டு இது போன்றே சம்பவும் நடந்த பிறக்கு உடன் நடவடிக்கை எடுப்பது சரியன்று, அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் அதை பழக்கமாகி அடுத்த முறை அப்படி ஒரு சம்பவும் நடக்காமல் பார்த்து கொண்டால் அது பாராட்ட கூறியது, ஆனால் நமது ஆட்கள் கொஞ்ச நாட்கள் மட்டும் செய்து விட்டு பிறக்கு அப்படி ஒரு சட்டம் போட்டார்களா என்று நம்மையே திரும்பி கேட்கிறார்கள், அப்படி மழை நீர் சேகரிப்பு திட்டம் போட்டார்களோ அப்படி தான், இப்பொழுதும் நடகிறது.

இப்படி இந்த சமுகத்தில் நடக்கும் அவலங்களை பார்த்து சகித்து கொண்டு இருக்காமல் உங்களிடம் புலம்பி தள்ளும், நான் வேறு யாரும் இல்லை, உங்களுள் ஒருவன் தான்.