படம் பார்த்து விட்டு வெளியே வரும் பொது ஒரு குழப்பமான சூழ்நிலையில் ல தான் வெளிய வந்தோம். யாரும் படம் நல்லா இருக்கா இல்லையா என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்ற மண நிலை தான் காரணம். படம் நன்றாக இருக்கு என்று சொல்லவும் சில காரணங்கள் இருக்கிறது, அது போல் தான் நல்லா இல்லை என்று சொல்லுவதற்கும்.
பைக் ஸ்டான்ட் இல் செல்போனில் ஒருவர், அப்பா முடியலடா, தலை வழி என்று கூறி கொண்டு இருந்தான். சரி அது நமக்கு தேவை இல்லை. படத்தை பற்றி பார்போம்.
படம் நமது மக்களுக்கு பிடிக்காமல் அல்லது புரியாமல் போனதற்கு காரணம் என்று பார்த்தால்
இரண்டாவது உலகம் என்படவுது யாதனில் ,கற் காலத்தில் இருக்கும் ஒரு மனித கூட்டம், காதல் , நேசம் , பாசம், இறக்கம் இல்லாத ஒரு மூடர் கூடம், அங்கு காமம் உண்டு ஆனால் காதல் கிடையாது, ஆணாதிக்கம் உண்டு பெண்ணியம் கிடையாது, அங்கு ஒரு முரட்டு பொண்ணுக்கும், முட்டாள் முரடன்கும் இடையில் வரும் காதலா அல்லது இனகவர்ச்சியா என்று தெரியாத பந்தம் உருவாகிறது,
அங்கு ஒரு காதலை உருவாக்க ஒரு பெண் கடவுளும், அந்த கடவுளை கொன்றால் அந்த நாட்டு மக்களை அழித்து விடலாம் என்று இன்னொரு மனித கூட்டமும் இருக்கிறது.
இவை அனைத்தும் நமது உலகத்தில் இருக்கும் ஒரு காதலன் தனது காதலியை எதிர்பாராதவிதமாக இழந்து பைத்தியம் பிடிக்காத குறையாக சுற்றி திரியும் ஆர்யாவின் நினைவலைகள் அல்லது காதல் கடவுளின் சக்தியால் நமது உலகத்தில் இருந்து இந்த கற்காலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காதல் என்னும் மலர் மலர உதவுவது என்பது போல் அமைந்து இருக்கும் ஒரு கதை தான் இந்த இரண்டாம் உலகம்.
Negative Points:
1.வெளிநாட்டு மக்களை தமிழில் பேசி நடிக்க வைத்தது. எதோ பழைய இங்கிலீஷ் படத்தே தமிழ்ல டப் செய்து வெளியிட்டது போல இருந்துச்சு, இதனால தான் படத்தில் ஒரு ஈர்ப்பு வாராமல் போனதற்கு முக்கிய காரணம்.
2. திரும்பவும் அதே வேட்டுட்டா, குத்தவா ரக பாடல்கள்.
3. பாடல்களை காட்சியமைக்க பட்ட விதம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இல்லை. குறிப்பாகத் பணகள்ள பாடல் வரிகளில் வரும்,
“ஒரு பைத்தியம் பிடித்த பௌர்ணமி நிலவு மேகத்தை கிழித்து எரியும்” இது போன்ற வரிகள் பல எதிர்பர்புகளை ஏற்படுத்தி வைத்து இருந்தது.
Positive Points:
1.Graphics chance-அஹ இல்லை.. அவதார் பட ரேஞ்சுக்கு தமிழ் ஒரு படம். அதிலும் குறிப்பாக சிங்கம் என்று கூறி கொண்டு ஒரு வகை மிருகத்துடன் சண்டை இடும் காட்சி.
2. படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் அனுஷ்காவின் ஆளுமை, அனுஷ்கா பதில் வேறு யாறும் அந்த கதாபத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்க முடியாது.
3. படத்தின் மியூசிக் எல்லா பாடல்களும் திரும்பவும் கேட்க வைக்கிறது.
4. நம்மால் சிந்திக்க முடியாத ஒரு உலகத்தை நம் கண்முன்னால் காண்பித்தது. (ஆனால் நம்மால் தான் அதை ஏற்றுகொள்ள முடிய வில்லை என்பது வேறு விஷயம் )
படத்தை பற்றின எதிர்மறையான கருத்துகள் நிறைய வந்தாலும், கண்டிப்பாக திரை அரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய திரை படங்களில் இதவும் ஒன்று. படம் திரை அரங்கை விட்டு செல்லும் முன்பு கண்டிப்பாக பார்த்து விடுங்கள்.
ஓநாயும் அட்டுகுட்டியும் மிஸ் பண்ணின மாதிரி இதையும் மிஸ் பண்ணி விடாதிர்கள். நான் வேறு யாரும் அல்ல உங்களுள் ஓருவன் தான்
No comments:
Post a Comment